தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே இயற்றப்பட்ட அவசர சட்டத்தை நிரந்திரமாக இயற்றுவதற்கான சட்ட முன்வரைவை தமிழக முதல்வர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.இதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. விலங்குகள் வதைத் தடுப்பு சட்ட திருத்த முன் வடிவினை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து மசோதா குறித்து பேசினார். இந்த சட்ட முன் வரைவை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் வரவேற்றுப் பேசினர். உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக புதிய சட்ட முன்வரைவு ஒருமனதாக நிறைவேறியதாக தகவல்.
இனி இந்த சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்தும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு தான் இருக்கிறது அவர் கையெழுத்துக்கு பின் இது நிரந்தர சட்டமாகும்.
இனி இந்த சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்தும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு தான் இருக்கிறது அவர் கையெழுத்துக்கு பின் இது நிரந்தர சட்டமாகும்.
0 comments:
கருத்துரையிடுக