தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் காரில் கிடத்தி வரப்பட்ட 1344 காரைக்கால் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் காரில் கிடத்தி வந்துகொண்டிருப்பதாக திருநீலக்குடி காவல்நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து 30-07-2017 (நேற்று ) அன்று மாலை திருவிடைமருதூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்பொழுது காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த ஒரு காரை மறைத்து சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது காரில் இருந்த ஓட்டுனர் திடீரென தப்பி ஓடினார் இதனையடுத்து காரில் சோதனை நடத்தியபொழுது காரைக்காலை சார்ந்த 1344 மதுபாட்டில்கள் அந்த வாகனத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து காரில் இருந்த காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ஒருவரை தமிழக போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக