28-10-2018 நேரம் பிரிப்பகல் 2:10 மணி நான் இதற்கு முந்தைய எனது பதிவுகளில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது அணைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக அரங்கேறி வருகின்றன.அந்த பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தது போல 29-10-2018 ஆகிய நாளை மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இதன் காரணமாக 29-10-2018 ஆகிய நாளை மாலை முதல் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் 30-10-2018 அன்று நள்ளிரவு அல்லது 31-10-2018 அன்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மாநிலம் #பரதீப் (#Paradip ) அருகே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம் குறிப்பாக #தம்ரா (#Dhamra) , #ராஜ்நகர் (#Rajnagar) அருகே உள்ள கடலோர பகுதிகளில் அது கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசாவில் கரையை கடந்து அதன் தாக்கம் குறைய தொடங்கியதும் முன்பு நான் பதிவிட்டு இருந்தது போல தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே நிலைகொள்ள முற்படலாம் இதன் காரணமாக 30-10-2018 அன்று மாலை அல்லது நள்ளிரவு முதல் தமிழக வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் அதக்ரு மறுநாள் ஆன 31-10-2018 ஆம் தேதி அன்று திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,புதுச்சேரி ,கடலூர் ,நாகப்பட்டினம் ,திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.31-10-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நவம்பர் மாத முதல் வார நாட்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.
28-10-2018 கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த 5 ஆம் வகை மிக சக்திவாய்ந்த சூறாவளியான #யூடு (#YUTU) வானது தற்பொழுது ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணமான #லூசன் (#LUZON) இன் வட கிழக்கு பகுதியின் முக்கிய நகரமான #TUGUEGARAO வுக்கு கிழக்கே மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக அது நிலைகொண்டிருக்கும் கடல் பகுதிகளில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 240 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் கிழக்கு - தென்கிழக்கு திசையில் நகர்ந்து #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதியான #Palanan , #Divlacan ,#Dinapigue அருகே கரையை கடக்க முற்படலாம் மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அப்பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ க்கு அதிகமான அளவு காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் #MANGHUT போல அல்லாமல் வடக்கு #லூசன் (#LUZON) மாகாணத்தின் அநேக இடங்களிலும் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை என ஒரு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தகூடியதாக இருக்கலாம்.இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் இதுவரையில் பிலிப்பைன்ஸ் சந்தித்த இயற்கை பேரழிவுகளில் இது மறக்குமுடியாததாக கூட பதிவாகி விடலாம்.#Santiago , Candon , #Laoag , #Aparri , #Baguio, #calayan என அந்நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் இது பலத்த சேதத்தை உண்டு பண்ணலாம்.
அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசாவில் கரையை கடந்து அதன் தாக்கம் குறைய தொடங்கியதும் முன்பு நான் பதிவிட்டு இருந்தது போல தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே நிலைகொள்ள முற்படலாம் இதன் காரணமாக 30-10-2018 அன்று மாலை அல்லது நள்ளிரவு முதல் தமிழக வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் அதக்ரு மறுநாள் ஆன 31-10-2018 ஆம் தேதி அன்று திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,புதுச்சேரி ,கடலூர் ,நாகப்பட்டினம் ,திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.31-10-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நவம்பர் மாத முதல் வார நாட்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.
28-10-2018 கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த 5 ஆம் வகை மிக சக்திவாய்ந்த சூறாவளியான #யூடு (#YUTU) வானது தற்பொழுது ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணமான #லூசன் (#LUZON) இன் வட கிழக்கு பகுதியின் முக்கிய நகரமான #TUGUEGARAO வுக்கு கிழக்கே மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக அது நிலைகொண்டிருக்கும் கடல் பகுதிகளில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 240 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் கிழக்கு - தென்கிழக்கு திசையில் நகர்ந்து #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதியான #Palanan , #Divlacan ,#Dinapigue அருகே கரையை கடக்க முற்படலாம் மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அப்பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ க்கு அதிகமான அளவு காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் #MANGHUT போல அல்லாமல் வடக்கு #லூசன் (#LUZON) மாகாணத்தின் அநேக இடங்களிலும் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை என ஒரு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தகூடியதாக இருக்கலாம்.இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் இதுவரையில் பிலிப்பைன்ஸ் சந்தித்த இயற்கை பேரழிவுகளில் இது மறக்குமுடியாததாக கூட பதிவாகி விடலாம்.#Santiago , Candon , #Laoag , #Aparri , #Baguio, #calayan என அந்நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் இது பலத்த சேதத்தை உண்டு பண்ணலாம்.
அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.