தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
திரைவிமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைவிமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்குயின் (Penguin) 2020 திரைவிமர்சனம் | Penguin 2020 movie full review

#Penguin (#பெண்குயின்) விமர்சனம்
===============

#Penguin (#பெண்குயின்) விமர்சனம்
===============
#one_woman_Army யாக ஒட்டுமொத்த படத்தையும் அதன் கதாநாயகி அவரது தோலில் சுமந்திருக்கிறார் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.படத்தின் ஒரு சில காட்சிகளில் இதுவரையில் நாம் தமிழ் #Thriller படங்களில் கண்டிராத அளவு புதுமையை காண முடிந்தது அந்த காட்சிகளை மேலும் மெருகேற்றும் விதமாக நாயகியின் எதார்த்தமான நடிப்பும் அமைந்திருப்பது சிறப்பு.

தெலுங்கில் #HIT என்கிற ஒரு திரில்லர் படம் உண்டு #Climax வரை மிக சிறப்பாக #கொலையாளி யார் என்கிற கேள்வியுடன் வேகமாக நகர்ந்து செல்லும் அந்த திரைப்படத்தின் இறுதியில் கொலையாளி யார் ? கொலைக்கான  காரணம் என்ன? என்பது தெரியவவருகையில் மிகவும் மொக்கையாக இருக்கும்.ஒரு கட்டத்தில் அந்த மாதிரியான ஒரு நிலையை இந்த படம் அடைந்துவிடுமோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றியப்பொழுது.நான் இருக்கிறேன்.... என்று #கதாநாயகி மீண்டும் ஒரு முறை கதையை இறுதிக்கட்டம் வரை நகர்த்தி சென்றிருக்கிறார் அது தான் இந்த படத்தின் வெற்றி.

Makingwise பார்க்கப்போனால் இயக்குனர் உண்மையான குற்றவாளி யார் என்று தெரியவருவதற்கு முன்பு ஆங்கில மற்றும் வங்காள மொழி படங்களில் வருவது போல் கேள்வி பதில் விளையாட்டு ஒன்றை காட்சியாக அமைத்து இருக்கிறார் அது Workout ஆகி இருக்கிறது.மேலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மேகங்கள் மூடிய #கொடைக்கானல் மலையின் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள் ,இயற்கை எழில் கொஞ்சும் ஏரி என அவைகளை நிழற்படக்கருவியில் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது மேலும் அது படத்தின் #Thriller genre க்கும் உதவி புரிந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் இந்த #Penguin  படத்தின் வெற்றியை உறுதிசெய்த #பெண்_குயின் இந்த படத்தின் நாயகி தான்.

எனது Rating : 3/5

#Penguin_movie_review #penguin_review #பெண்குயின்_விமர்சனம்


சிங்கம் -3 திரைவிமர்சனம்

சூர்யா நடித்து வெற்றி பெற்ற சிங்கம் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் பூவ பூவுன்னு சொல்லலாம் நீங்க சொன்னாமாதிரியும் சொல்லலாம் புய்ப்பம்னும்  சொல்லாம்னு  சொல்றா மாறி இந்த படத்த சிங்கம் பாகம் 3 னு சொல்லலாம் S - 3 னும் சொல்லலாம் அல்லது C -3னும் சொல்லலாம்.முதல் பாகத்துல மட்டும்தான் சூர்யாவுக்கு ஒரே ஒரு ஹீரோயின் அனுஷ்கா இரண்டாம் பாகத்துல அனுஷ்காவுடன் சேர்த்து ஹன்சிகா மாறி இந்த மூணாம் பாகத்துல சூர்யா ஒருதலையா காதலிக்கிற பொண்ணு நம்ம ஸ்ருதி ஹாசன்.ஏற்கனவே இவரை முகநூலில் நன்றாக கலாய்க்கிறார்கள் இந்த திரைப்படத்திற்கு பிறகு மேலும் கலாய்ப்பார்கள் என நம்பலாம்.சரி வாங்க விமர்சனத்துக்கு போகலாம்.

ஆந்திர மாநிலத்தில் கமிஷ்னர் கொலை செய்யப்படுகிறார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிஐ மூலமாக தமிழ்நாடு காவல் துறை அதிகாரி துரைசிங்கத்தை அழைக்கிறார்கள்.கொலையுடன் சேர்த்து இ-வேஸ்ட் (அதாங்க புறம்போக்கு படத்துல ஆர்யா எதிர்த்து போராடுவாரே அந்த மேட்டர் ) ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து மருத்துவ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவரும் கும்பலை ஆஸ்திரேலியா வரை சென்று கண்டுபிடித்து இந்தியாவில் வைத்து அளிக்கிறார் இது தான் கதை.

முதல் இரண்டு பாகங்களை போலவே இதுலயும் ஏகப்பட்ட பன்ச் டயிலாக் பேசுகிறார் துறைசிங்கம்.சண்டைக்காட்சிகளில் வழக்கம் போல அவரையும் கிராபிக்சில் சிங்கத்தையும் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள்.இம்முறை இந்த படத்தில் நடிகர் விவேக் தலையை காட்டவே இல்லை அதற்கு பதிலாக சூரி இருக்கிறார் ஆரம்பத்தில் சிரிக்க வைக்கிறார் போக போக வெறுக்க வைக்கிறார் ரோபோ சங்கர் இந்த படத்தில் இவருக்கு காமெடி காட்சிகள் குறைவு சிங்கத்தின் உதவி போலீசில் ஒருவராக உடன் இருக்கிறார்.திரைப்படத்தின் கதை விசாகப்பட்டினம் -ஆஸ்திரேலியா -தூத்துக்குடி என பல்வேறு இடங்களில் நடக்கிறது இதற்கு முந்தைய பாகங்களை போலவே கேமரா வேகமாக அங்கும் இங்கும் அலைகிறது ஒளிப்பதிவாளர் பிரியன் மற்றும் எடிட்டர்களை பாராட்டியே ஆக வேண்டும் இவர்கள் இல்லையென்றால் படத்தை இறுதிவரை பார்ப்பது சிரமம் என்றே தோன்றுகிறது.படத்தின் பாடலை பற்றி பேச பெரிதாகி ஒன்று இல்லை அனுஷ்கா அவ்வப்பொழுது வந்து போகிறார்.படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது சூர்யா தான் துரைசிங்கமாகவே வாழந்து இருக்கிறார்.படத்தில் இமான் அண்ணாச்சியும் உண்டு ஆனால் இவர்கள் எல்லாம் இவ்வளவு முயற்சி செய்து நம்மை சிரிக்க வைத்தை விட நடிகர் விஜயகுமார் வழக்கம் போல உள்துறை அமைச்சாராக சீரியஸாக தோன்றி நம்மை சிரிக்க தூண்டுகிறார்.

இரண்டாம் பக்கத்தில் என்னது தப்பிச்சது சர்வதேச பயங்கரவாதி டேனியா என்று விஜயகுமார் அதிர்ச்சியடையும் காட்சிபோல இந்த பாகத்திலும்
 ஆஸ்திரேலியாவில் போலீசிடம் மாட்டிக்கொள்ளும் சூர்யா டேனியை நான்  தான் கொன்றேன் என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியுடன் சல்யூட் வைக்கிறார்கள் அது கொஞ்சம் ஓவரோ என்று தோன்றியது.விமானம் செல்லும் ஓடுபாதையில் காரில் சென்று விமானத்தை மறைத்து கைதியை பிடிப்பது அபத்தமான லாஜிக் இல்லா மேஜிக்.

இப்படி படத்தில் உள்ள காட்சிகளை தனித்தனியாக ஒவ்வொன்றாக யோசித்து பார்த்தால் பயங்கர நெருடலாகவும் நடைமுறையில் சாத்தியம் அற்றதோ என்று தோன்றும் ஆனால் திரையரங்குக்குள் அமர்ந்து பார்க்கையில் மற்ற மசாலா படங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது.குடும்பத்துடன் சேர்ந்து ரசித்து ஒருமுறை பார்க்கலாம்.

 சிங்கம் -3 : மூன்றாவது வெற்றி.

போகன் - திரை விமர்சனம்

மது மாது என ராஜ வாழ்க்கை வாழ்கிறார் அரவிந்த்சாமி அதன் பின் வினோத முறையில் ஒரு நகைக்கடையில் பணத்தை கொள்ளையடிக்கிறார் போலீஸ் விசாரணையில் கூட ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை அடுத்த ஷாட்டில் டுமீல் டுமீலுனு ஒரு குத்துப்பாட்டுடன் படத்தின் ஹீரோ எண்டரி  அந்த குத்து பாட்டுக்கு பிறகு தான் அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பது படம் பார்க்கும் நமக்கு தெரிவருகிறது அவருடையா தந்தை ஒரு பேங்க் மேனஜர்.ஜெயம் ரவியின் தந்தை பணிபுரியும் வங்கியில் கொள்ளையடித்து செல்கிறார் அரவிந்த்சாமி.ஜெயம்ரவியின் தந்தை பணத்தை எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி.சி.டி.வி வீடியோவில் பதிவாகியிருக்கிறது அதனை வைத்து ஜெயம்ரவியின் தந்தையை சிறைபிடிக்க வருகிறது போலீஸ் இந்த விஷயத்தை ஜெயம் ரவி எப்படி சரி செய்கிறார்.பல தந்திரங்கள் செய்து எப்படி அரவிந்த்சாமயை கைது செய்கிறார் என்பது தான் முதல் பாதி ஒரு கட்டத்தில் போகரின் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு கூடுவிட்டு  கூடு பாயும் வித்தை என கதை பயணிக்கிறது.

இரண்டாம் பாதியில் அறிவிந்தசாமியாக ஜெயம்ரவியும் ஜெயம்ரவியாக அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார்கள் அதில் நடிப்பில் வெற்றிபெற்றவர் என்னவோ அறிவிந்தசாமிதான்.

இறுதியில் ஜெயித்தவர் யார் அரவிந்தசாமியா? ஜெயம்ரவியா? இது தான் கதை.


ஜெயம்ரவியின் நடிப்பு சிறப்பு என்றால் அரவித்தசாமியின் நடிப்பு மிகச்சிறப்பு ஹன்சிகா நடிப்பில் கஞ்சத்தனமாகவும் கவர்ச்சியில் சற்று தாரளமயமாகவும் வளம் வந்து இருக்கிறார் இந்த படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறார் ஆனால் எதை வைத்து அவரை இந்தப்படத்தின் இரண்டாம் நாயகி என்று கூறுவது என்பது தான் தெரியவில்லை.கவிஞர் தாமரையின் சிறப்பான வரிகளை கொண்டு பரவாயில்லை என்கிற ரக பாடல்களை கொடுத்து இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.ஒளிப்பதிவு அழகு


முதல் பாதியில் வேகமாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் மெல்ல நகர்கிறது.தனிஒருவன் திரைப்படத்தால் ஏற்பட்ட எதிர்பார்ப்பை இந்த திரைப்படத்தால் சமன் செய்ய முடியவில்லை.மொத்தத்தில் என்னை பொறுத்த வரை இந்த திரைப்படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம்தான்.

பைரவா - திரைவிமர்சனம்

இந்த நாட்டில் கல்லூரிகளில் சேர்ந்து பயில மாணவர்களுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதி தேவைப்படுகிறது அதே கல்லூரிகளில் பேராசிரியராகவோ அல்லது விரிவுரையாளராகவோ பணியாற்ற நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி தேவைப்படுகிறது ஆனால் இதைப்போன்று  கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கும் நடத்திச்செல்வதற்கும் ஏதேனும் கல்வி தகுதி உள்ளதா ? அவ்வாறு ஒரு கல்லூரியை நடத்தும் அளவிற்கு அறிவுத்திறன்  இல்லாதவர்கள் எல்லாம் ஏரியையும் நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி கல்வி வள்ளல் என்று தங்களுக்கு தாங்களே எப்படி அடைமொழிகளை பேருக்கு பின்னால் இணைத்து கொள்கிறார்கள் ? இதைப்போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை  நம் முன் எடுத்து வைக்கிற திரைப்படம் தான் பைரவா ஆனால் இது இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் என்பதால் திரைக்கதையில் எதார்த்தம் லாஜிக் போன்ற எந்த அம்சங்களும் கிடையாது ஆனாலும் விஜய்யின் இதற்கு முந்தைய மசாலா படங்களுடன் ஒப்பிடுகையில் இது பரவாயில்லை என தோன்றுகிறது.

வங்கியில் பெருமளவில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாத ரவுடிகளிடம் பணம் வசூல் செய்யும் அதிகாரிதான் விஜய் அவரின் நண்பராக சதீஷ் அவர் தோன்றும் காட்சிகளில் டைமிங்கில் காமெடி செய்து சிரிக்க வைக்கிறார்.ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் கீர்த்தி சுரேஷை அழைக்க வரும் பொழுது காதல் வயப்படுகிறார்.மலர் கொத்துக்களுடன் தன் காதலை கீர்த்தியிடம் சொல்ல வரும் வேளையில் இவருக்கு முன்னரே மலர்கொத்துக்களுடன் கீர்த்தியை நெருங்கும் ஒருவரின் கை வெட்டப்படுகிறது கை வெட்டுப் பட்டவர் மத்திய அமைச்சரின் மகனாம் அமைச்சரின் ஆட்கள் கீர்த்தியை சுற்றி வளைக்க அமைச்சருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது அதனை எடுத்து எதிர்முனையில் இருப்பவர் யாரென்று தெரிந்ததும் அமைச்சரே பம்முகிறார் இதனை பார்த்த விஜய் கீர்த்தியிடம்  விவரம் கேட்கிறார் அப்பொழுது தொடங்குகிறது பிளாஷ் பேக் கீர்த்தியின் கதையை கேட்ட விஜய் அவருக்கு உதவி செய்ய வில்லனான ஜெகபதி பாபுவை எதிர்த்து வெற்றிகாண்கிறார் இது தான் பைரவா திரைப்படத்தின் சுருக்கமான கதை.

முதல் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை அதனுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியின் வேகம் சற்று குறைவுதான்.சண்டை காட்சிகளை படமாக்கிய விதத்திற்கு ஒளிப்பதிவாளர் சுகுமாரை பாராட்டிய தீர வேண்டும் சண்டைக் காட்சிகளில் விஜய்யின் உழைப்புக்கும் ஒரு சபாஷ் போடலாம்.கீர்த்தி முதல் பாதியில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் இரண்டாம் பாதியில் விஜய்யை சுற்றியே காட்சிகள் இருப்பதால் அவருக்கு  குறைவுதான்.ஜெகபதி பாபு பலவீனமான வில்லனாக நடித்து இருக்கிறார் கடைசிவரை ஹீரோவிடம் தோல்வியுற்று இறுதியில் உயிரை விடுகிறார்.மொத்த திரைப்படத்தையும் தூக்கி சுமந்து இருக்கிறார் விஜய் இந்த திரைப்படத்தில் அவரது வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது அவருடைய ரசிகர்களுக்கு இது மெகா விருந்து.விஜய்,கீர்த்தி,ஜெகபதி பாபு ,சதீஷை தவிர மேலும் ஒருவரின் நடிப்பை பாராட்டியே தீர வேண்டும் அது டானியல் பாலாஜியை தான் இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும்.சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன.கமெர்ஷியல் வெற்றிக்காக விஜய் என்ற மாஸான ஒருவரை கொண்டு கருத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் பரதன்.

மொத்தத்தில் நடுநிலை திரை ரசிகர்களை பொறுத்த வரையில் ஒருமுறை பார்க்கலாம் ரகம் தான் ஆனால் விஜய் ரசிகர்களை பொறுத்த வரையில் இந்நேரம் வெற்றி விழாவே கொண்டாடியிருப்பார்கள்.

 

வீரசிவாஜி - திரைவிமர்சனம்

தன்  தாத்தாவின் பெயரையே இந்த திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரத்தின் பெயராக ஏற்று நடித்திருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு.ஆனால் அந்த பெயருக்கும் திரைக்தைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை.இதற்கு அந்த கதாபாத்திரத்துக்கு ரமேஷ் ,சுரேஷ் என்று ஏதாவது ஒரு பெயரை வழங்கியிருக்கலாம்.ஒரு வேலை ஒரு சென்டிமெண்டுக்காக அதை வழங்கியிருப்பார்கள் போல இல்லை என்றால் திரைப்படத்தின் எதிர்பார்ப்பை மக்களிடம் அதிகரிக்க செய்ய இதைப்  போன்றதொரு யுக்தியை பயன் படுத்தியிருக்கிறார்களோ என்னவோ?.திரைப்படம் முழுக்க இதைப்போன்ற பிரச்சனைகள் தான் தெளிவான திரைக்கதையில் அங்காங்கே கமர்ஷியல் விஷயங்களை அடைத்து திணித்திருக்கிறார்கள் அதனால் படம் பார்க்கும் நமக்கும் திரையரங்குக்குள் அடைபட்டு கிடப்பது போலவே ஒரு பீ......லிங்கு .சரி கதைக்கு வருவோம் புதுச்சேரியில் கால் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார் விக்ரம் பிரபு  தன் அக்கா குழந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் தேடி அலைந்து ஒரு   கள்ள நோட்டு  கும்பலால் ஏமாற்றப்படுகிறார்   பின்னர் தலைமறைவான அந்த கள்ள நோட்டு கும்பலை தமிழகமெங்கும் தேடி அலைந்து கண்டுபிடித்து ஏமாற்றி அவர்களின் மொத்த பணத்தையும் ரோபோ சங்கர் மற்றும் யோகி பாபுவின் உதவியுடன் மீட்கிறார் அப்பொழுது நடக்கும் கார் விபத்தில் மெமரி லாஸ் ஏற்பட்டு ஷாமிலியை காதலித்தது ,அக்கா மகளின் மருத்துவம் ,பணத்தை பறிகொடுத்தது மீண்டும் மீட்டது என ஒரு மூன்று மாத நினைவுகளை இழக்கிறார்.அதன் பின் வீடு திரும்பி எந்த பிரச்னையும் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தது போலவே வாழ்கிறார் பின்னர் தன் காதலி ஷாமிலி அக்கா மகளுக்கு மருத்துவ சிகிச்சை என ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கிறார் இந்நிலையில் ஏமாந்த கள்ள நோட்டு குமபலால் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது அதை எப்படி சமாளித்தார் என்பது தான் மீதிக் கதை.

விக்ரம் பிரபு தன்னால் இயன்றவரை ஒரு மாஸ் ஹீரோவாக முயற்சி செய்திருக்கிறார் ஆனால் ஏதோ ஒரு விஷயம் அவரை அப்படி ஏற்க தடுக்கிறது.ஷாமிலி அவருக்கு நடிக்க சொல்லித்தர தேவையில்லை நல்ல உயரமாக வளர்த்திருக்கிறார் அன்று அஞ்சலி பாப்பாவாக இருந்த அவர் இன்று வற்றிப்போய்  நீதானா அந்தப் பாப்பா என்று கேட்க்கும் அளவிற்கு உள்ளார்.ஒரு சில காட்சிகளில் மேக்கப்பை  அள்ளிப் போட்டுக்கொண்டு ப்ப்பா..........என்று நாம் கலாய்க்கும் அளவுக்கு காட்சியளிக்கிறார்.இமான் இந்த முறை பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார்.சொப்பன சுந்தரி பாடலை ஏற்கனவே நன்றாக தொலைக்காட்சிகளில் விளம்பர படுத்தியிருக்கிறார்கள் அதனால் ஓரளவு ரசித்து கேட்க முடிகிறது மற்றபடி எந்த பாடலும் நம்மை கவர வில்லை.படத்தில் ஒரே ஆறுதல் என்று பார்த்தால் அது யோகி பாபு,ரோபோ சங்கர் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இவர்கள் செய்யும் காமெடிகள் தான்.அதுவும் யோகி பாபு -ரோபோ சங்கர் காம்பினேஷன் சூப்பர்.சுகுமாரின் ஒளிப்பதிவும் ரூபனின் எடிட்டிங் கும் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது ஆனால் சொதப்பலான திரைக்கதையால் நம்மால் முழுமையாக இந்த திரைப்படத்தை ரசிக்க முடிய வில்லை.

பன்ச் : வீரசிவாஜி - பலவீனம் நிறைந்தவன்.

சென்னை 600028 II செகண்ட் இன்னிங்ஸ் -திரை விமர்சனம்

சென்னை 600028 முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களை அப்படியே அழைத்து வந்து மீண்டும் கிரிக்கெட் கலந்த ஒரு சிரிப்புக் கதையை வழங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.

கிரிக்கெட் தொடர் நடத்த வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிய அரவிந்த்,சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும்   பிரேம்ஜி மற்றும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் ஜெய்யை தவிர சென்னை ஷார்க்ஸ் அணியில் விளையாடிய முக்கிய வீரர்கள் அனைவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் என கிரிக்கெட் விளையாடுவதை மறந்து இல்லற வாழ்வில் நல்லறம் புரிந்து வாழ்ந்து வருகிறார்கள் (இல்லை இல்லை அப்படி வாழ்வது போல் நடிக்கிறார்கள் ) அதில் விஜய் வசந்த் மட்டும் இன்னும் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கிறார்  மனைவிகள் அனைவருக்கும் தங்கள் கணவர்கள் மீது பாசமும் அன்பும் உண்டு ஆனால் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பதும் ஊர் சுற்றுவதும் பிடிப்பதில்லை அது நியாயம் தானே.இந்நிலையில் பெண் வீட்டாரின் சம்மதத்துக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருந்த ஜெய்யின் காதலும் ஒருவழியாக கைக்கூடி தேனியில் நிச்சயதார்தம் மற்றும் திருமணம் நடைபெற இருக்கிறது .நண்பனின் நிச்சயத்துக்கு தேனி  செல்லும் நண்பர்கள் அங்கு ஊரை விட்டு ஓடிவந்த அரவிந்தை ஒரு பிரச்சனையில் சந்திக்கின்றனர்.அரவிந்தின் பிரச்சனையை தீர்க்க வில்லனான வைபவ் வை எதிர்த்து கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஒரு கட்டத்தில் அதனால் ஜெய்யின் திருமணத்துக்கே ஆபத்து வருகிறது.அதனை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியும் விளையாடாமலும் எப்படி சரி செய்தார்கள் என்பதே மீதிக்கதை.


மிர்ச்சி சிவாவின் உடனுக்குடனான நகைச்சுவை வசனங்களும் அவருடைய உடல் மொழியும்  நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது.ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் புதுமுகநாயகி அழகாக இருக்கிறார்.திரைப்படத்தின் பிற்பாதியில் கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்து மனைவிகள் அறிவுரை வழங்கும் காட்சிகள் திரைப்படத்துக்கு ப்ளஸ்.இரண்டாம் பாதியிலும் வேகம் குறையாத வெங்கட் பிரபுவின் திறமையான இயக்கம். யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை.முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் அதே நடிகர்களே அந்தந்த கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது பெரிய ப்ளஸ்
இடையே சென்னை 28 முதல் பாகத்தை அடிக்கடி நியாபகப்படுத்தும் நகைச்சுவை வசனங்கள் (உதாரணமாக பேட்டிங்கா பீல்டிங்கா) நம் நினைவுகளை தட்டி எழுப்புகிறது .பிரவீன் கே.எல் லின் எடிட்டிங்மிகப்பெரிய பலம்.மிடுக்காக வரும் வைபவ் நம்மை கவர்கிறார்.

மைனஸ் என்று பார்த்தால் திரைப்படத்தின் பாடல்கள் சொப்பன சுந்தரி பாடலை தவிர வேறு எந்த பாடலும் நம்மை கவர வில்லை.யுவன் சங்கர் ராஜா பாடல் விஷயத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்.அவசியம் இல்லாத காட்சிகளில் எல்லாம் கதாபாத்திரங்கள் கையில் மது பாட்டில்களுடன் தோன்றுவதை போல் தோணுகிறது.

எது எப்படியோ இந்த நடிகர்களை வீரர்களாக கொண்டு களமிறங்கிய சென்னை ஷார்க்ஸ் அணி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சேஸ் செய்ய நினைத்து நல்ல ஸ்கோர் செய்திருக்கிறது.

திரை விமர்சனம் : மாவீரன் கிட்டு

என்னப்பா காதுல ரீல் சுத்துறீங்க இந்த காலத்துல எங்கப்பா தீண்டாமை கொடுமையெல்லாம் நடக்குது ?என்று கேள்வி கேட்கும் மேதாவிகளின் வாயை அடைக்க திரைப்படத்தின் மொத்தக் கதையும் 1987ஆம் ஆண்டு நடப்பது போல் காட்டப் படுகிறது.ஆனால் திரைப்படத்தில் நாம் பார்க்கும் சம்பவங்கள் யாவும் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் ஏதோ  ஒரு மூலையில் நாம் படித்த செய்திகளை ஞாபக படுத்துகிறது.அது என்னவோ தீண்டாமை இல்லையென்று கூறும் மேதாவிகளால் ஆதிக்க சாதியின் அதிகாரங்கள் இல்லையென்று கூறமுடிவதில்லை.

ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கைக்கட்டி,வாய்ப்பொத்தி,மண்டியிட்டு கிடந்த மக்கள் தங்கள் உரிமைகளை பெற முயற்சிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் செய்யும் சூழ்ச்சிகளும் அதை முறியடிக்து  தங்களுக்கான உரிமைகளை பெறுவதில் முனைப்புக் காட்டும் மக்களின் தியாகங்களும் தான் மாவீரன் கிட்டுவின் திரைக்கதை.

ஆதிக்க சாதியினரால் கீழ் சாதி என்று ஏளனத்தோடு பார்க்கப்படும் மக்களின் உயிரற்ற  உடல்களைக்  கூட பொது வழியில் எடுத்துச்செல்லக் கூடாது என்பது கட்டுப்பாடு.அந்த கீழ் சாதி மக்களுக்காக போராடுபவராக சின்னராசு என்ற கதாப்பாத்திரத்தில் பார்த்திபன் .தன் மக்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உடைத்து கீழ் சாதி என மட்டம் தட்டப்படும் தன் மக்கள் பொதுவழியில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம்.ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்ட மக்கள் கூட்டத்தில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெறுகிறார் கிருஷ்ண மூர்த்தி (எ) கிட்டு கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் அவரின் இந்த வெற்றிக்கு முதுகெலும்பாய் இருந்து உதவி புரிந்தவர் ஊர் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் பார்த்திபன்.தன் மக்களின் துயர் தீர்க்க விஷ்ணு விஷால் மாவட்ட ஆட்சியராக ஆக வேண்டும் என்று விரும்புகிறார் பார்த்திபன் அதையே தனது லட்சியமாக எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்.அதே கல்லூரியில் பயிலும் ஸ்ரீ திவ்யா சக மாணவியை சாதியின் அடிப்படையில் பின் இருக்கைக்கு அனுப்ப அதற்கு நியாயம் கேட்கிறார் விஷ்ணு விஷால்.ஸ்ரீ திவ்யாவின் தந்தை வேறு சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் பார்த்திபனின் நண்பராக ஊர் மக்களின் துன்பம் துடைக்க பல உதவிகள் செய்கிறார்.ஸ்ரீ திவ்யாவுக்கு விஷ்ணு விஷால் மீது காதல் ஏற்படுகிறது.ஸ்ரீ திவ்யாவின் தோழியும் விஷ்ணு விஷாலின் நண்பரும் சாதி விட்டு சாதி மாறி காதலிக்கிறார்கள்.ஸ்ரீ திவ்யாவின் தோழிக்கு வேறு இடத்தில் பெற்றோர்கள் திருமண ஏற்படு செய்யவே அந்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கிறார் விஷ்ணு விஷால். இதனால் சாதி வெறிபிடித்த ஆதிக்க சாதி போலீஸ் காவலரான ஹரிஷ் உத்தமனின் கோபத்துக்கு ஆளாகிறார்.பின்னர் கீழ் சாதி பையனை திருமணம் செய்து கொண்ட பெண் கௌரவ கொலை செய்யப்படுகிறார்.இதனால் பயம் ஏற்பட்டு இருந்தாலும் தனது காதலை விஷ்ணு விஷாலிடம் வெளிப்படுத்துகிறார் ஸ்ரீ திவ்யா.ஸ்ரீ திவ்யா காதலிப்பது தெரிந்த ஆதிக்க சாதியினர் விஷ்ணு விஷாலை அடக்க பல திட்டங்கள் தீட்டு கின்றனர்.இந்நிலையில் திடீரென ஸ்ரீ திவ்யாவின் தந்தை இறந்து போக அவரை கொலை செய்ததாக கடைசியாக அவருடன் பைக்கில் பயணம் செய்த விஷ்ணு விஷாலையும்  அவருக்கு உதவியதாக அவரது நண்பர்களும் கைதி செய்யப்படுகின்றனர்.விஷ்ணு விஷாலின் ஆட்சியர் கனவு என்ன ஆனது ? சாதாரண கிருஷ்ணமூர்த்தி என்கிற கிட்டு எப்படி மாவீரன் கிட்டு ஆனார் என்பதே மீதிக்கதை.

கதாப்பாத்திரங்களின்  எதார்த்தமான நடிப்பு வில்லன்களின் மிரட்டல் வில்லத்தனம் மிக நேர்த்தியான ஒளிப்பதிவு என படத்திற்கு பலம் கூட்டும் விஷயங்கள் ஏராளம்.அதே சமயம் புரோட்டா சுருளி என்கிற ஒருவர் இந்த திரைப்படத்தில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை அவருக்கு வழங்கப்பட்ட காட்சிகளே மிக குறைவு தான்.கேட்டு கேட்டு புளித்துப்போன இமானின் அதே மெட்டில் ஒரே மாதிரியான பாடல்கள் திரைப்படத்தில் நெருடல்  என்றே சொல்லலாம்.

பன்ச் : மாவீரன் கிட்டு  - ஒரு மாறுதலுக்கு வழிவகுப்பான் என நம்பலாம்.


சைத்தான் - திரைவிமர்சனம்

விஜய் ஆண்டனிக்கு இது கதாநாயகனாக ஐந்தாவது திரைப்படம்.பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் தான் சைத்தான்.இந்த திரைப்படத்தின் தலைப்பு தொடங்கி டிரைலர் வரை வித்தியாசங்களைக் காட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டார்கள்.ரசிகர்களை திரையரங்குக்குள் கொண்டு வர இதுவும் ஒருவகையான யுக்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.சரி வாருங்கள் இப்பொழுது இப்படத்தின் கதையை பார்ப்போம்.

திரைக்கதை 
முதல் காட்சியில் ஒரு மனத்தத்துவ மருத்துவரின் முன் அமர்ந்து இருக்கிறார் தினேஷ் (விஜய் ஆண்டனி) எதோ ஒரு குரல் தனக்கு கேட்பதாக மருத்துவரிடம் கூறுகிறார் மருத்துவர் அவரை தனியே அழைத்து சென்று ஹிப்னாடிஸ் செய்கிறார்.அப்பொழுது தான் அவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்தும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்ப்பது நமக்கு தெரிய வருகிறது.அலுவலகத்தில் அவருடைய நண்பராக ஆடுகளம் முருகதாஸ் மற்றும் விஜய் ஆண்டனியின் தாயாக மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் வாழ்ந்து வருகிறார்.ஒரு மேட்ரிமோனி தளத்தின் உதவியுடன் நாயகி அருந்ததியின் புகைப்படத்தைப் பார்த்து அப்பா அம்மா இல்லாத அவரை திருமணம் செய்துகொள்கிறார் விஜய் ஆண்டனி தனது மனைவி தனது தாய் என அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனிக்கு   சில நாட்களுக்கு பிறகு அந்த வினோத குரல் கேட்க ஆரம்பிக்கிறது அதில் ஜெயலட்சுமி என்கிற பெயரும் இடம் பெறுகிறது .இந்த வினோத குரல் விஷயம் விஜய் ஆண்டனியின் நண்பரான ஆடுகளம் முருகதாஸுக்கு தெரிய வர அவர் விஜய் ஆண்டனிக்கு உதவ நினைக்கிறார். அவரும் விஜய் ஆண்டனியும் இணைத்து ஒரு மருத்துவரை பார்க்கச் செல்கின்றனர் மருத்துவரின் பதில்களில் திருப்தியில்லாத இருவரும் வீடு திரும்பும் வழியில் விஜய் ஆண்டனிக்கு மறுபடியும் அந்த வினோத குரல் கேட்க அந்த குழப்பத்தில் ஏற்படும் விபத்தில் ஆடுகளம் முருகதாஸ் இறந்து  விடுகிறார்.நண்பரின் மரணத்திற்கு தனது பிரச்சனையே  காரணம் என விஜய் ஆண்டனி வருந்துகிறார்.பின் விஜய் ஆண்டனி அந்த குரலினால் பித்து பிடித்தவர் போல் ஜெயலட்சுமியை தேடி அலைகிறார் பிறகு  ஒய்.ஜி.மகேந்திரனின் உதவியால் மனத்தத்துவ மருத்துவரிடம் வந்து சேர்கிறார்.அந்த ஜெயலட்சுமியின் தகவலை அறிய மனநல மருத்துவர் ஹிப்னாடிஸ் முறையை பயன்படுத்தி விஜய் ஆண்டனியின் வாழக்கையில் அவருடைய சிறு வயதுக்கு நினைவுகளை அழைத்து செல்கிறார் அதனுடன் நாமும் பயணிக்கிறோம் இந்த குரல் பிரச்சனைக்கும்  சிறு வயதில் நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிந்து கொண்ட மருத்துவர் அவருடைய நினைவுகளை இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு செல்கிறார் அப்பொழுது தனது பெயர் சர்மா என்றும் தஞ்சாவூரில் காவிரி ஆற்றங்கரைக்கு அருகில் தான் சாவும் நிலையில் இருப்பதாகவும் பூர்வ ஜென்ம நிகழ்வுகளை கூறுகிறார் விஜய் ஆண்டனி.அப்பொழுது திடீரென ஒரு செவிலியர் குறுக்கிட தனது ஹிப்னாடிசத்தை முடித்துக்கொண்ட மருத்துவர் அவரை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார் வீட்டுக்கு வந்த விஜய் ஆண்டனி அங்கிருந்து யாருக்கும்  தெரியாமல் தஞ்சாவூர் சென்று விடுகிறார் அங்கே ஆட்டோ ஓட்டுனர் விஜய் சாரதியின் உதவியுடன் சர்மா,ஜெயலட்சுமி பற்றிய தகவலை தேடி அலைகிறார் .அப்பொழுது அந்த ஊரில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சாருஹாசனின் உதவியுடன் சர்மாவின் மனைவி பெயர் தான் ஜெயலட்சுமி என்றும்  அந்த ஜெயலட்சுமி பல ஆண்டுகளுக்கு முன் சர்மாவையும் அவர் ஆசையாக வளர்த்துவந்த வளர்ப்பு மகனையும் கொன்று விட்டதாக கூறுகிறார்.பின்னர் சர்மா வாழ்ந்த அந்த வீட்டுக்கு சென்று தனது பூர்வ ஜென்ம நினைவை வெளிக்கொணர்கிறார் விஜய் ஆண்டனி.பூர்வ ஜெனமத்தில் தன்னை கொன்ற ஜெயலட்சுமி தான் தனது மனைவி ஐஸ்வர்யா (அருந்ததி ) அவரை கொள்ள வேண்டி தான் அந்த குரல் கேட்கிறது என்று விஜய் ஆண்டனி கலங்குகிறார்.தன் மனைவிக்கு தன்னால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக அருந்ததியை தன்னை விட்டு சென்று விடுமாறு கூறிவிடுகிறார் விஜய் ஆண்டனி.அப்பொழுது தான் கதையில் ஒரு மொட்டை என்டராகிறார் அவரால் அருந்ததிக்கு ஏதோ நெருக்கடி இருப்பது நமக்கு காட்சிகளின் மூலம் தெரிய வருகிறது பிறகு மருத்துவரின் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்புகிறார் விஜய் ஆண்டனி மனைவி அருந்ததியை தேடுகிறார் ஆனால் அவர் எங்கும் காணப்படவில்லை .மனைவியின் பிரிவால் தவித்து வந்த விஜய் ஆண்டனிக்கு தனது படுக்கைக்கு கீழ் இருந்து ஒரு போதை மருந்து கிடைக்கிறது.தனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து பித்து பிடித்ததுப் போல் ஆனதற்கு அந்த போதை மருந்துகள் தான் காரணம் எனவும் மேலும் அதை தனது உணவுடன் கலந்துக்க கொடுத்தது தன் ஆசை மனைவி என்றும் விஜய் ஆண்டனிக்கு தெரியவருகிறது.அப்பொழுது தான் திரைக்கதையில் என்ட்ரியாகிறது இதற்கு பின்னால் உள்ள போதை மருந்து பரிசோதனை கும்பல்.காணாமல் போன தனது மனைவியை விஜய் ஆண்டனி எப்படி கண்டுபிடித்தார் அவர் ஏன் இந்த போதை மருந்தை விஜய் ஆண்டனிக்கு கலந்துக் கொடுத்தார் அவரை யார் வழி நடத்தியது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் வழங்குவது தான் மீதிக்கதை.

விமர்சனம் 
திரைக்கதை முழுக்க ஒரு தேடலுடன் பயணிக்கிறது அந்த தேடல் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.இறுதிக்காட்சி வரை நம்மை திரையரங்கில் அமரச் செய்ததும் அந்த தேடல் நிறைந்த திகில் கூடிய திரைக்கதை தான்.ஆனாலும் முதல் பாதியிலும் முன் ஜென்மக் கதையிலும்  இருந்த ஒரு எதிர்பார்ப்பு  மற்றும் ஒன்றிணைப்பு  போதை மருந்து கும்பல் என்ட்ரிக்கு பிறகு சுத்தமாக இல்லை.  ஒருவேளை மொத்தப் படத்தையும் முன் ஜென்மக் கதை என்கிற கான்சப்ட்டை வைத்தே முடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.தான் நடிக்கும் திரைப்படங்களில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்திலும் அதை சரி வர செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் தனக்கு என்ன வருமோ அந்த அளவு அறிந்து நடித்திருக்கிறார் இருந்தாலும் கொஞ்சம் ஆக்ரோஷம் தேவை திரைக்கதையின்  பலத்தால் அது ஒரு பொருட்டாக தெரிய வில்லை.இந்த திரைப்படத்தில் நாயாகிக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் அவருடைய கதாப்பாத்திரம் நெகட்டிவாக இருந்தாலும் அவர் இந்த திரைப்படத்துக்கு ப்ளஸ் தான்.ஆடுகளம் முருகதாஸ் அவர் வருவது சில காட்சிகளே என்றாலும் அவரை ஐ.டி யில் பணிபுரியும் மென் பொறியாளராக ஒப்புக்கொள்வதில் ஒரு குழப்பம் இருக்க தான் செய்கிறது.திரைப்படத்தின் மற்றும் ஒரு பலம் பின்னணி இசை அதில்  பின்னி எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.பின்பாதியில் வரும் போதை மருந்து வில்லன்கள் நம்மை பயமுறுத்தவில்லை.இது விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு வெற்றிப் படம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.


பன்ச் : சைத்தான் - சுவாரஸ்யமானவன்

கவலை வேண்டாம் -ஒரு பார்வை

கோ திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கிவந்த ஜீவாவுக்கு இது ஒரு முக்கியமான திரைப்படம்.கண்டிப்பாக ஒரு வெற்றி படம் வழங்கியாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு கைக் கொடுக்க இல்லை இல்லை மெல்லிசான குச்சியை நீட்டியிருக்கும் திரைப்படம் தான் இந்த கவலை வேண்டாம்.அந்த குச்சியை பிடித்து ஜீவா உயிர் தப்பினாரா என்று கீழே பார்ப்போம்.

திரைக்கதை 
திரைப்படத்தின் கதை என்று பார்த்தால் பாபி சிம்ஹாவுடன் நடைபெற இருக்கும் தனது திருமணத்துக்காக ஷில்பாவை அழைக்க வருகிறார் காஜல் அகர்வால் அப்பொழுது தான் ஷில்பாவின் மூலமாக காஜல் அகர்வாலுக்கு நடக்க இருப்பது இரண்டாவது திருமணம் என்றும் பார்க்கும் நமக்கு தெரியவருகிறது.சரி முதல் கணவன் யார் என்று பார்த்தால் அவர்தான் திரைப்படத்தின் நாயகன் ஜீவா.அப்பொழுது தான் தொடங்குகிறது பிளாஷ் பேக் ஜீவாவும் காஜல் அகர்வாலும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள் காஜலின் பணத்தாசைப்  பிடித்த அம்மாவாக ராசி என சில ஆண்டுகளுக்கு முன் பெயர் மாற்றிக் கொண்ட நடிகை மந்த்ரா.மந்திரா ஜீவா காஜலின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர் ஆனால் அது ஒரு நாள் கூட நிலைக்காமல் சிறிய  பிரச்சனையில் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.ஜீவாவை ஒரு தலையாக காதலிக்கிறார் சுனைனா ஜீவாவின் அப்பா மயில்சாமி ஒரு மருத்துவர் முதுமிதாவை இரண்டாவது திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார்.ஜீவாவின் அம்மா அவரை விட்டு சிறு வயதிலேயே விலகிவிட்டார் என்று திரையில் பல்வேறு கதாப்பாத்திரங்களால் சொல்லப்படுகிறது .பாபி சிம்ஹாவை மறுமணம் செய்ய விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு ஜீவாவை பார்க்க வருகிறார் காஜல் அகர்வால்.ஜீவா கையிலுத்திட நினைக்கும் பொழுது ஜீவாவின் மனதில் காஜலுடன் சேர்ந்துவாழும் ஆசை உள்ளது என்பதை அறிந்து தந்தை மயில்சாமி ஐடியா கொடுக்கிறார் அதன்படி காஜலுக்கு விவாகரத்து வேண்டுமென்றால் தன் வீட்டில் ஒரு வாரம் தங்கி தன்னுடன் வாழ வேண்டும் என்று கூறிவிடுகிறார் ஜீவா.அவருடன் வாழும் இந்த ஒரு வாரத்தில் எப்படியாவது காஜலின் மனதை மாற்றி தன்னுடன் வாழ செய்வதே ஜீவாவின் திட்டம்.காஜலும் வேறு வழியின்றி இந்த உடன்பாட்டுக்கு ஒத்துக்கொள்கிறார் ஆனால்  தன் தோழி ஷில்பாவும் ,வருங்கால கணவர் பாபி சிம்ஹாவும் தன்னுடன் இணைந்து தங்க அழைத்து வருகிறார் காஜல் இதனை அறிந்த சுனைனா இனிமேல் நானும் உங்கள் வீட்டில் தான் தங்குவேன் என்று ஜீவாவிடம் சொல்லிவிடுகிறார் இது படித்தது என்று ஜனாவின் நண்பர்களான பாலாஜியும் ,பால சரவணனும் ஜீவா வீட்டில் தங்கும் கூட்டத்தில் தாமாகவே இணைந்து விடுகின்றனர்.இவர்கள் அத்தனை பேறும் ஒரே வீட்டில் இருக்க ஜீவா எப்படி காஜலின் மனதை மாற்றி தன்னுடன் சேர்ந்து வாழ செய்தார் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது தான் மீதிக்கதை.

விமர்சனம் 
திரைப்படம் முழுக்க நகைச்சுவைகள் அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கிறது.முதல் பாதி மிகவும் அருமை ஜீவா மற்றும் காஜல் ஜோடிப் பொருத்தம் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.அடுத்து நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது நடிகர் மயில் சாமியின் நடிப்பு இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் சிரிப்பு தந்தையாக அடுத்தடுத்த படங்களில் தோன்ற வாய்ப்புள்ளது.பாலாஜி தனிக்கே உரிய திடீர் நகைச்சுவை வசனங்களால் நம்மை அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.பாபி சிம்ஹா படத்தில் இருக்கிறார் அவ்வளவு தான்.படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை நம்மை கவர்கிறது.என்ன தான் நகைச்சுவை திரைப்படமாக இருந்தாலும் மந்த்ரா நெஞ்சுவலியில் துடிக்கும் பொழுது இவர்கள் செய்யும் நகைச்சுவைகள் கொஞ்சம் ஓவர் தான்.

பன்ச் : கவலை வேண்டாம் - ஒரு முறை பார்த்து கவலை மறந்து சிரிக்கலாம்.

சினிமா விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா - ஒரு நேர்மையான பார்வை

விண்ணை தாண்டி வருவாயா என்ற வெற்றி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன்  இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இத்திரைப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகி விட்டதால் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் வெளி வந்து இருக்கிறது இந்த திரைப்படம்.இது திரை ரசிகர்கள் மற்றும் இசைரசிகர்களுக்கு  மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு(STR)வுக்கும் எதிர்பார்ப்புக்குரிய முக்கியமான திரைப்படம் தான்.சரி வாருங்கள் இப்பொழுது இத்திரைப்படத்தின் திரைக்கதையை காண்போம் .

திரைக்கதை :
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ  படித்து முடித்து விட்டு  வேலை இல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிகிறார் சிம்பு,அப்பா அம்மா அன்பான இரு தங்கைகள் என அழகான குடும்பத்துடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.அவருடைய மூத்த தங்கையின் தோழியாக வருகிறார் கதாநாயகி மஞ்சிமா மோகன் அவரின் வசம் காதல் வயப்படுகிறார் சிம்பு.அதிர்ஷ்டம் சிம்புவின் பக்கம் இருக்க மஞ்சிமா மோகன் சில நாட்கள் சிம்புவின் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.அப்போழுது இருவரும் பேசி பழகுகிறார்கள் பின் சிம்பு தன நண்பர் சதீஷுடன் ("மானாட மயிலாட "சதீஷ் ) கன்னியாகுமாரி வரை இருசக்கர வாகனத்தில் ரையிடு செல்ல இருப்பதாக மஞ்சிமா மோகனிடம் தெரிவிக்கிறார்.மஞ்சிமா மோகன் அவருடன் கன்னியாகுமரிக்கு இரு சக்கர வாகனத்தில் வர விருப்பம் தெரிவிக்கவே சதீஷை துரத்தி விட்டு மஞ்சிமா மோகனுடன் தனது பயணத்தை தொடங்குகிறார்  சிம்பு.கன்னியாகுமரியில் இருக்கும் பொழுது மகாராஷ்டிராவில் உள்ள தன் சொந்த ஊருக்கு செல்ல போவதாக கிளம்புகிறார் மஞ்சிமா மோகன் தானே அங்கே கொண்டு போய் விடுவதாக கூறி மீண்டும் பைக் பயணத்தை தொடர்கிறார் சிம்பு அப்பொழுது எதிர் பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒரு லாரி மீது மோதுகிறது.அடிப்பட்டு கிடந்தபொழுது தன் காதலை சொல்லாமலேயே இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தனது காதலை மஞ்சிமா மோகனிடம் தெரிவிக்கிறார் சிம்பு.பின் சில காயங்களுடன் மருத்துவமனையில் இருந்து கண் விழித்த சிம்புவுக்கு மஞ்சிமா மோகன் தன் அருகில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.வருத்தத்துடன் இருந்த சிம்புவுக்கு மஞ்சிமா மோகனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது அதில் தனது தந்தையையும் தாயையும் வெட்டி விட்டார்கள் என பதற்றத்துடன் தெரிவிக்கிறார் மஞ்சிமா மோகன்.அதனால் தன் நண்பர் சதீஷையும் அழைத்துக் கொண்டு தன காதலியை பார்க்க அவர் ஊருக்கே செல்கிறார் சிம்பு.அங்கே மருத்துவமனையில் சென்று காதலியின் பெற்றோரை பார்த்த சிம்புவுக்கு மேலும் அதிர்ச்சி அழிக்கும் வகையில் மஞ்சிமா மோகனை கொள்ளவும் ஆட்கள் வருகின்றனர் அவர்களை அடித்து தும்சம் செய்கிறார் சிம்பு.போலீசும் கொள்ள வந்தவர்களுக்கே ஆதரவாக இருக்க தன காதலியை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார் சிம்பு.இதனிடையே மஞ்சிமா மோகனை கொள்ள அடுத்தடுத்து முயற்சிகள் நடக்கின்றன அவற்றை பல பேரை துப்பாக்கியின் உதவியுடன் சுட்டு வீழ்த்தி சிம்பு முறியடிக்கிறார் அந்த முயற்சியில் தனது நண்பரையும் இழக்கிறார்.தன்  நண்பனை கொன்றவர்களை சிம்பு எப்படி பழிவாங்கினார்.தன் காதலியை கொலை செய்ய துரத்த என்ன காரணம் என சிம்பு எப்படி கண்டுபிடித்தார் இதுவே மீதிக்கதை.

விமர்சனம் :
திரைப்படத்தின் திரைக்கதையை கேட்டீர்கள் கேட்க்கும் பொழுது மிக சாதாரண வழக்கமான கதைப்போல் தான் தோன்றும்.ஆனால் இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் பொழுது ஒரு புதுமையான திரைப்படத்தை பார்த்துக்கொண்டு இருப்பது போல் தோன்றும் அவ்வளவு அழகான காட்சி அமைப்புகள்.நீங்கள் காதல் காட்சிகளை விரும்பி பார்க்கும் நபர் என்றால் முதல் பாதியில் காலம் நீள்வதை கூட உணர உங்களிடம் நேரமிருக்காது நீங்கள்
ஆக்சன் காட்சிகளை விரும்பி பார்ப்பவர்கள் என்றால் மேற்குறிய நிலை உங்களுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் ஏற்படும்.இதுவரை இயக்கப்பட்ட தமிழ் சினிமாவில் இது ஒரு தனி பாணி என்று தான் சொல்ல வேண்டும்.இப்படி ஒரு திரைப்படத்தை இயக்கியதற்கு இயக்குனர் கெளதம் மேனனுக்கு பாராட்டுக்கள் மட்டுமல்ல நன்றியே சொல்லலாம்.சிம்பு ஒரு வெற்றி படம் வழங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.முதல் பாதியில் சிறிது ஒல்லியாகவும் குண்டாகவும் மாறி மாறி தோன்றுகிறார் படப்பிடிப்பினை விட்டு விட்டு எடுத்தார்கள் போல ஆனால் நடிப்பில் காதல் காட்சிகளிலும் சரி ,ஆக்சன் காட்சிகளிலும் சரி வெளுத்து வாங்கியிருக்கிறார் தொடர்ந்து இதைப்போன்ற திரைப்படங்களை சரியாக தேர்வு செய்து நடித்தால் எங்கேயோ போய்விடுவார்.படத்தின் முக்கிய ஹீரோ இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் பின்னணியிலும் சரி பாடல்களிலும் சரி நம்மை மெய்மறக்க வைத்து விடுகிறார்.தள்ளிப்போகாதே பாடலும் அது இடம்பெறும் காட்சியும் நம்மை உறைந்து போக செய்கிறது அந்த பாடலின் ஆரம்ப இசையை கேட்டதும் ரசிகர்கள் கைத்தட்டலில் திரையரங்கே அதிர்கிறது.சிம்பு எல்லா வாகனத்தையும் சாவியே இல்லாமல் எப்படி இயக்குகிறார் என்பது போன்ற கேள்விகள் ஒரு சில காட்சிகளில் எழத்தான் செய்கின்றன. ஒரு சில லாஜிக்கான விஷயங்கள் சிறிது உறுத்தலை ஏற்படுத்தினாலும் அவைகள் எல்லாம் ஒட்டு மொத்த திரைப்படத்தின் தரத்துடன் ஒப்பிடும் பொழுது தவிடு போடியாகி விடுகிறது.மஞ்சிமா மோகன் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை பெரும்பாலான காட்சிகளில் இடம்பெற்று இருக்கிறார் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் அணைத்து நாயகிகளுக்கும் இப்படி அமைவது அரிது தான் அதனை உணர்ந்து நடித்துள்ளார்.

பலம் 
ரகுமானின் இசை
இயக்கம்
சிம்பு

பலவீனம் 
சில லாஜிக் தவறுகள்
சிம்பு எப்படி புல்லட் ,டாக்சி என அணைத்து வாகனங்களையும் எடுத்த எடுப்பிலேயே ஸ்டார்ட் செய்துவிடுகிறார் என்று புரியவில்லை.
துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டே இருக்கிறார் அதில் எப்பொழுது தான் தோட்டாக்கள் தீரும் என்று நாமே கேள்வி கேட்க்கும் அளவு அதை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்.


கருத்து  : வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் பிரச்சனைகள் வரும்.அப்படி எந்த பிரச்சனை வந்தாலும் அதை முறியடிக்கும் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.

பன்ச் : அச்சம் என்பது மடமையடா -இது தமிழ் சினிமாவுக்கு புதுமையடா.



கொடி- ஒரு நேர்மையான பார்வை

சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் ,காக்கிச்சட்டை என தொடர்ந்து இரு வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் கொடி.இதில் நடிகர் தனுஷ் முதல் முறையாக இரட்டையர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் கொடிக்கு முன்பு இயக்கிய இரண்டு திரைப்படங்களையும் தயாரித்தவர் தனுஷ் என்பது குறிப்பிடத் தக்கது.

திரைக்கதை :
எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தும் அரசியல் கட்சியின் தீவிர தொண்டனாக இருப்பவர் கருணாஸ் இவர் வாய் பேச முடியாதவர்.அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன அதில் ஒரு குழந்தைக்கு கொடி என பெயரிட்டு அரசியலுக்காகவே வளர்க்கிறார்.ஆனால் அது கொடியின் தாய் சரண்யாவுக்கு பிடிக்கவில்லை.இன்னொரு குழந்தையை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார் அந்த குழந்தையின் பெயர் அன்பு.ஊரில் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விளங்கிய ஒரு தொழிற்சாலையை மூடும் விவகாரத்துக்காக தன மகன் கண் முன்பே தீக்குளித்து மரணமடைகிறார் கருணாஸ்.அன்று முதல் அரசியலில் முழு ஆர்வத்துடன் களமிறங்கி கட்சி தலைவரின் நன்மதிப்பை பெறுகிறார் கொடி.மறுபுறம் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார் கொடியின் தம்பி அன்பு.திரிஷா எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தும் கட்சியின் எதிர்க்கட்சியில் சிறு வயது முதல் கொடியை போலவே தொண்டராக இருக்கிறார்.அந்த எதிர்க்கட்சியின் தலைவர் விஜயகுமார்.இருவரும் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் இருவருக்கும் சிறு வயது முதல் காதல் இருக்கிறது.மறுபுறம் கல்லூரி பேராசிரியர் அன்புக்கு பிராயிலர் கோழி முட்டையை நாட்டுக்கோழி முட்டை என ஏமாற்றி வியாபாரம் செய்யும் அனுபமா மீது காதல் ஏற்படுகிறது.அனுபமாகடன் பிரச்சனையில் தவிக்க அதனை தன் அண்ணன் கொடியின் உதவியுடன் தீர்த்து வைக்கிறார் அன்பு அப்பொழுது தான் அனுபமா கடன் வாங்கியதின் அவசியமும் காரணமும் தனுஷுக்கு தெரிய வருகிறது அது என்னவென்றால் கருணாஸ் தீக்குளித்தால் மூடப்பட்ட தொழிற்சலையில் உள்ள பாதரச கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் சிறு குழந்தைகள் முதல் பலருக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன.அவர்களின் மருத்துவ செலவிற்காகவே அனுபமா கடன் வாங்கியிருக்கிறார்.இதனை தெரிந்து கொண்ட அன்பு தன் அண்னன் கொடியின் உதவியுடன் அந்த கழிவுகளை அகற்ற எண்ணுகிறார்.கொடியும் இந்த விஷயத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கொண்டு செல்கிறார்.இந்த நேரத்தில் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிறது பல திட்டங்கள் தீட்டி தந்திரங்கள் செய்து விஜயகுமார் கட்சியின் வேட்பாளராகிறார் திரிஷா இந்நிலையில் அந்த பாதரச தொழிற்சாலை விவகாரத்தில் கட்சிக்குள் அரங்கேறும் பிரச்சனைகளால் வேறு வழியின்றி தனுஷை தன் கட்சி வேட்பாளராக அறிவிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். காதலர்கள் இருவரும் எதிரெதிராய் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இருவருக்கு இடையே ஏற்பாடு கருத்து வேறுபாடுகள்  அதிகமாகிக்கொண்டே போகிறது இதனிடையே கொடி கொல்லப்படுகிறார்.கொடியின் தம்பியான அன்பு கோடியாக மாறி தேர்தலில் வெற்றி பெறுகிறார் அதன் பின் கொடியை  செய்தவரை தேடி கண்டு பிடித்து பழிவாங்க நினைக்கிறார்.மறுபுறம் திரிஷா அரசியலில் மெம்மேலும் முன்னேறுகிறார்.யார் தன் அண்ணனை கொன்றது என்பதை அன்பு கண்டு பிடிக்கிறாரா ? அந்த பாதரச கழிவு தொழிற்சாலையை மூடினாரா ? என்பது தான் மீதும் உள்ள கதை.

விமர்சனம் :
தனுஷ் இரு கதாபாத்திரத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.அவசியம் ஒரு வெற்றி தேவை என்று களமிறங்கிய தனுஷுக்கு அது கிட்டி இருக்கிறது. காதலர்கள் இருவரும் எதிர் எதிர் கட்சிகளின் வேட்பாளர்கள் என்பது தமிழ் சினிமாவுக்கு புதிது.திரிஷாவின் கதாப்பாத்திரம் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டு உள்ளது பதிவிக்காக அவர் செய்யும் அரசியல்கள் அப்பப்பா..........அவரின் திரை பயணத்தில் இது இரு மைல் கல் என்றே சொல்லலாம்.திரைக்கதை முழுவதும் தனுஷ் மற்றும் திரிஷாவை சுற்றியே பயணிக்கிறது அதனால் மற்றவர்கள் குறைந்த அளவிலான காட்சிகளில் மட்டுமே தென் படுகிறார்கள்.இன்னொரு நாயகி அனுபமா அவருக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்கப் படவில்லை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.சரண்யா அவரை பற்றி சொல்லவா வேண்டும் அம்மா கதாப்பாத்திரத்துக்கு என்றே பிறந்தவர்.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு கதாப்பாத்திரம் பகத்சிங் காக வரும் காலி வெங்கட் அவருக்கு அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் தோன்றும் இடத்தில் எல்லாம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.திரைக்கதையை இறுதி வரை சலிப்பு தட்டாமல் கொண்டு சென்றதற்கே இயக்குனருக்கு கைத்தட்டல் வழங்கலாம்.

பன்ச் :கொடி - வெற்றியடைந்த ஆளும் கட்சியின் கொடி.

காஷ்மோரா-திரைவிமர்சனம்

தோழா படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம்.சமீப காலத்தில் வெளியாகிய கார்த்தியின் திரைப்படங்களை வைத்து பார்க்கும் பொழுது திட்ட திட்ட அவர் ஒரு தெலுங்கு நடிக்காரகவே மாறிவிட்டாரோ? என்ற கேள்வி  தோன்றுகிறது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் காஷ்மோராதிரைப்படம் வெளியாகியுள்ளது. கார்த்தியின்  திரைப்படங்கள் தமிழில் சோடைப்போனாலும் தெலுங்கில் மொழிப் பெயர்ப்பு செய்து லாபத்தை அள்ளி விடுவார்கள் போல அதை எடுத்துக் கூறும் வகையில் இந்த திரைப்படத்தில் " தெலுங்கு ரைட்சும் நம்மளிடம் தான் உள்ளது" என்று ஒரு வசனமும் இடம்பெற்று உள்ளது.இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலரை பார்த்துவிட்டு இது தான் பாகுபலியின் இரண்டாவது பாகமோ என்று எண்ணி உள்ளே நுழைந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது சரி வாருங்கள் காஷ்மோராவின் கதையை பார்ப்போம்.

திரைக்கதை 
பேய்களை அடக்கும் சக்தி மிக்கவர் என்று மக்களை ஏமாற்றி  வருகிறார் காஷ்மோரா
(கார்த்தி) அதற்கு பக்கபலமாக இருக்கிறது அவருடைய குடும்பம்.பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்பவர் ஸ்ரீ திவ்யா பேயை நேரில் பார்த்தால் தான் திருமணம் செய்வேன் என்ற உயரிய லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார் ,அவருடைய தோழி காஷ்மோராவின் பேய் ஓட்டும் திறமைகளை பற்றி எடுத்துக் கூறவே கார்த்தியை சந்திக்க செல்கிறார்.கார்த்தியின் தந்தை விவேக்கிடம் இரண்டு லட்சம் ருபாய் நன்குடை வழங்குவதாக கூறி கார்த்தியை சந்திக்க திட்டம் தீட்டுகிறார் ஆனால் காஷ்மோரா பிடி கொடுக்க மறுக்கிறார்.இதற்கிடையில் காஷ்மோரா பேய் ஓட்டும் சக்தி தனக்கு இருக்கிறது என்று ஏமாற்றும் விஷயத்தை அறிந்து சுதாரித்து கொள்ளும்  ஸ்ரீ திவ்யா அதனை ஆதாரங்களுடன் பதிவு செய்ய விரும்புகிறார்.அப்பொழுது தான்  ஸ்ரீ திவ்யாவின் உண்மை லட்சியம் தெரிய வருகிறது.அது என்னவென்றால் பேய் ஓட்டும் சக்தி இருக்கிறது என்று ஏமாற்றுபவர்களை பற்றியது தான் அவருடைய ஆய்வறிக்கை.இந்நிலையில் உள்ளூர் காவல் நிலையத்தில் இருந்த தொலைந்து போன வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு காஷ்மோராவுக்கு அழைப்பு விடுக்கிறார் துணை கமிஷனர். தனது அறிவுத்திறனால் ஒரு பேய் வாகனத்தை ஒட்டி வருவது போல பல தந்திரங்களை செய்து துணை கமிஷனரையே தண் காலில் விழுந்து கும்பிட வைக்கிறார்.அந்த துணை கமிஷனரின் உதவியோடு அமைச்சரான சரத் லோஹிதஸ்வாவை சந்திக்கிறார் காஷ்மோரா.அவர் ஏதேதோ வித்தைகளை செய்ய பல சிக்கல்களில் சிக்கி தவித்து வந்த சரத் லோஹிதஸ்வாவுக்கு சிக்கல்கள் விலகவே அது காஷ்மோராவின் சக்தியால் தான் என்று முழுமையாக நம்புகிறார்.ஒருகட்டத்தில் அமைச்சரான சரத் லோஹிதஸ்வா இல்லத்தில் வருமான வரி சோதனை வர 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு பணத்தை காஷ்மோராவிடம்  கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி சொல்லுமாறு தனது ஆட்களுக்கு கட்டளை இடுகிறார்.அமைச்சரின் ஆட்கள் அந்த பணத்தை விவேக்கிடம் கொடுக்கிறார்கள். பணத்தை சுருட்டிக்கொண்டு குடும்பத்துடன் ஊரைவிட்டு ஓட திட்டமிடுகின்றனர் காஷ்மோராவும் அவருடைய தந்தையான விவேக்கும். இந்நிலையில் ஆந்திராவில் ஒரு பங்களாவிற்கு பேய் ஓட்ட சென்ற காஷ்மோராஅந்த வீட்டிலேயே மாட்டிக்கொள்கிறார்.பணத்தை சுருட்டு கொண்டு தப்பி ஓடிய விவேக் மற்றும் குடும்பத்தினர் யாவரும் இதே கட்டிடத்திற்குள்  வந்து சிக்குகின்றனர்.மொத்த குடும்பமும் பேய்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பங்களாவில் மாட்டிக்கொண்டு சிக்கலை அனுபவிக்கின்றனர் அதில் இருந்து தப்பிப்பது எப்படி என புரியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில் தலை துண்டிக்க பட்ட பேய் ஒன்று தானும் தன்னுடன் இருக்கும் 13 பேய்களும் சொர்கத்துக்கு செல்ல உதவி புரியுமாறு காஷ்மோராவிடம் கேட்கிறது.பேயையே ஏமாற்ற சில பொய்களை அவிழ்த்து விடுகிறார் காஷ்மோரா ஆனால் இன்னும் சில நாட்கள் இந்த பங்காளவிற்குள் தான் குடும்பம் முழுவதும் இருக்க வேண்டும் எனக் கூறிவிடுகிறது.இதற்கிடையில் ஸ்ரீ திவ்யாவும் அந்த பங்களாவிற்குள் வருகிறார்.தப்பிக்க வழி தேடும் காஷ்மோராவுக்கு அந்த பேய்களில் உருவான கதை தெரிய வருகிறது ஆண்டு ஆரம்பமாகிறது ப்ளாஷ் பேக் அதில் கார்த்தி ராஜ் நாத்தாக பெண்கள் மீது உருவாகும் காமத்தை பலவீனமாக கொண்ட அமைச்சராக நடித்திருக்கிறார்.தினமும் பல பெண்களுடன் கூத்தடிக்கிறார்.தந்து மன்னனின் மகளான ரத்ன மகாதேவி(நயன் தாரா) மீது  ஆசைக்கொள்கிறார்.இளவரசி ரத்ன மகாதேவி எதிரி நாடு இளவரசாருடன் காதல் வயப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்.இளவரசியை காணவில்லை என்று அறிந்த மன்னர் அவரை கொண்டு வருபவருக்கே இளவரசியை மணமுடித்து பாதி ராஜ்யமும் வழங்குவதாக அறிவிக்கிறார்.இளவரசி காதலிப்பது தெரிந்தும் அவருடைய காதலனை கண் முன்னே கொன்று ரத்ன மகாதேவியை மன்னரிடம் அழைத்து செல்கிறார் ராஜ் நாத் ஆனால் மன்னர் பாதி ராஜ்ஜியம் வழங்க மறுக்கவே மன்னரையும் அவருடைய சிறு மகனையும் கொன்று விடுகிறார்.தன கண் முன்னே தந்தையையும் தம்பியையும் கொன்ற ராஜ் நாத்தையும் அவருடைய 13 தளபதிகளையும் திட்டமிட்டு கொள்கிறார் ரத்ன மகாதேவி சாவும் தருணத்தில் ரத்ன மகாதேவியயும் கொள்கிறான் காஷ்மோரா அப்பொழுது  ரத்ன மகாதேவி வழங்கிய சாபத்தால் தான் இந்த பேய்கள் சொர்கத்துக்கு செல்ல முடியவில்லை என்றும்  ரோகிணி நட்சதிரத்தில் பிறந்த தான் மற்றும் தனது குடும்பத்தினர் அனைவரையும் பலியிடவே பேய்கள் அடைத்து வைத்திருக்கின்றன என்ற உண்மை காஷ்மோராவுக்கு தெரிய வருகிறது.அதன் பிறகு எப்படி ராஜ்நாத்தின் ஆவியை அழித்து மொத்த குடும்பத்தையும் காஷ்மோரா காப்பாற்றுகிறார் என்பது தான் மீதிக்கதை.

விமர்சனம் 
காஷ்மோரா,ராஜ்நாத் என இரு கதாப்பாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் கார்த்தி.காஷ்மோரா கதாப்பாத்திரத்தில் பல இடங்களில் தனது தனித்துவமான வசன உச்சரிப்ப்பாலும் உடல் மொழியாலும் நம்மையே  நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்.அதே சமயம் ராஜ்நாத் கதாப்பாத்திரத்தில் கொடூர வில்லனாக காட்சியளிக்கிறார்.ஸ்ரீ திவ்யாவுக்கு நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் குறைவு கிடைத்த காட்சிகளில் சுமாராக நடித்துள்ளார்.கார்த்தியின் தந்தையாக வரும் விவேக் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.நயன்தாரா குறைவான நேரத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.பிளாஷ் பேக்கில் வரும் காட்சிகளுக்கு வழங்கிய  முக்கிய துவத்தை கதைக்கும் கொஞ்சம் வழங்கி இருக்கலாம்.நவரசத்தையும் கலந்து கொடுக்க முயற்சித்து இருக்கிறார்கள் திரைப்பட குழுவினர் அதில் நகைச்சுவை மட்டும் அள்ளித் தெளித்து இருக்கிறார்கள்.


பன்ச் :காஷ்மோரா சிரிக்க வைக்கிறான் ஆனால் கவரவில்லை.

அம்மணி ஒரு நேர்மையான பார்வை

'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

கதை சுருக்கம் :
அரசு ஊழியரான கணவர் மரணமடைந்ததால் தன்னுடைய குழந்தைகளுக்காக அரசு மருத்துவமனையில் கடை நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்(சாலம்மா)  இன்னும் இரண்டு மாதங்களில் பணியில் ஓய்வும் பெற உள்ளார்.அவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு ஓடிப்போன மகளும் உள்ளனர்.மூத்த மகன் பெயின்டர் மகா குடிகாரர்,இளைய மகன் நிதின் சத்யா ஆட்டோ டிரைவராக பணியாற்றுகிறார் மிகவும் காரியவாதி.இவர்களின் அக்கா வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதால் அவருடன் எந்த தொடர்பும் இன்றி வாழ்கிறார்கள்.அந்த அக்காவுக்கு ஒரு மகனும் உண்டு சென்னைக்கு வேலை பார்க்க வரும் அவர் தனது பாட்டியான லட்சுமி ராமகிருஷ்ணனை தேடி வருகிறார் இது லட்சுமி ராமகிருஷ்ணனின்  மகன்களுக்கு பிடிக்க வில்லை குறிப்பாக நிதின் சத்யாவுக்கு பிடிக்கவில்லை  கதையின் இன்னொரு முக்கிய கதா பாத்திரமான அம்மணி இவர்களின் வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு அறையில் வாடகைக்கு தங்கியுள்ளார்.தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்து எளிமையாக சந்தூஷமாக வாழ்கிறார் அம்மணி.

இந்நிலையில் இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள சாலம்மாவுக்கு தொழிலாளர் வைப்பு நிதி தொகையில் கடன்கள் போக வெறும் ஆறாயிரம் ருபாய் மட்டுமே மிஞ்சும் என்று தெரிய வருகிறது.இதனிடையில் அம்மாவின் ஓய்வு தொகையை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று நிலையில் இரு மகன்களும்,மகள் வயிற்று பேரனும் முயற்சிக்கிறார்கள்.காரிய வாதியான நிதி சத்யாவுக்கு வெறும் ஆறாயிர ரூபாய் தான் மிஞ்சும் என தெரிய வருகிறது அதனால் சாலம்மாவிடம் மூத்த மகன் குடிகாரனாக இருப்பதால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றால் குடியிருக்கும் வீடை தனக்கு எழுதி தருமாறு கேட்கிறார்.சாலம்மாவும் மூத்த மகனுக்கு தெரியாமல் வீட்டை நிதின் சத்தியாவுக்கு எழுதி கொடுத்து விடுகிறார் பின்னர் பணி ஓய்வும் பெறுகிறார்.அம்மணி அந்த வீட்டில் குடியிருப்பது பிடிக்காத நிதின் சத்தியா அவருடைய பொருட்களை வெளியில் வீசுகிறார் அப்பொழுது ஒரு பையில் இருந்து ஒரு சில நகைகளும் நிறைய பணமும்  கொட்டுகிறது அன்று முதல் அம்மணிக்கு வீட்டில் ராஜ மரியாதை கிட்டுகிறது.அம்மணியும் தான் உழைத்து சேர்த்து வைத்த பணத்தை தாராளமாக செலவு செய்கிறார்.

பாட்டியின் பண உதவியுடன் வெளிநாடு சென்று வேலை பார்த்து தன்  கடன்களை அடைத்துவிடலாம் என்று எண்ணிய மகள் வயிற்று பேரன் இதற்கு மேலும் வேளைக்கு ஆகாது என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார்.இந்நிலையில் நிதின் தனது அண்ணனை வீட்டை  விட்டு வெளியேறும்படி கூறிவிடுகிறார்.அப்பொழுது சாலம்மா,வீட்டை இளைய மகன் பெயருக்கு மாற்றி எழுதியிருப்பது  தெரிய வருகிறது பின்னர் பிரச்சனை சண்டையாகிறது.இந்த சண்டையில் இரு மகன்களுக்கும் ஆகாதவர் ஆகிவிடுகிறார் சாலம்மா.சோகத்தில் தனியாக அமர்ந்து அழுதுக் கொண்டிருக்கும் சாலம்மாவுக்கு  ஞானம் தரும் போதி மரமாய் அம்மணி அறிவுரைகளை வழங்குகிறார்.உழைத்த பணம் அனைத்தும் செலவழித்த அம்மணி தந்து நகைகளை லட்சுமியிடம் கொடுத்து இனி இந்த பாரம் எனக்கு தெயவில்லை என கூறிவிட்டு உழைக்க சென்று விடுகிறார் பின்னர் தான் வேலை பார்த்த மருத்துவமனையில் உட்கார்ந்து இருக்கும் லட்சுமிக்கு ரயிலில் அடிபட்டு முற்றிலும் சிதிலமடைந்து வந்த ஒரு உடல் அம்மணியுடையது என தெரிய வருகிறது.பின்னர் சாலம்மா எப்படி அம்மணியாக மாறினார் என்பது தான் மீதிக்கதை.



விமர்சனம் : திரைப்படத்துக்கு மிகப்பெரிய பலம்அம்மணியாக வரும் முதியப் பெண்ணின் கதாப்பாத்திரம்.திரைப்படம் முடிந்த பின்னும் மனதில் நிற்கிறது அவரது நடிப்பு.லட்சுமி ராமகிருஷ்ணன் இவரே இயக்குனராகவும் இருப்பதால் திரைக்கதையை இவரை சுற்றியே அழகாக நகர்தி சென்று இருக்கிறார் .இந்த சாலம்மா என்கிற கதாப்பாத்திரத்தின் தேவை உணர்ந்து அளவாக அழகாக  நடித்து இருக்கிறார்.நிதின் சத்யாவை பார்தால் கோபம் வருகிறது அந்த அளவுக்கு நடித்து இருக்கிறார்,திரைப்படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.என்ன தான் இருந்தாலும் சாலம்மாவுக்கு ஓய்வூதியம் கிடையாதா? வேட்டை விட்டு வெளியேறும் பொழுது அவர் என்ன நிற ஆடை அணிந்திருந்தார் என அவருடைய மகன்களை விடுங்கள் மருமகள்களும் தெரியாதா?என்பது போன்ற கேள்விகள் மனதில் எலத்தான் செய்கின்றன.ஆனாலும் இதை போன்று குறைந்த செலவில் இப்படி திரைப்படத்தை இயக்க நினைத்ததற்கே லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்டலாம்.அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதில் மாற்றுக்  கருத்தே கிடையாது.

கருத்து : எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து பார் இந்த உலகத்தில் உள்ள அணைத்து உயிரினங்களும் உனக்கு சொந்தம் என புரியும்.வெளிச்சத்தை அனைத்து விட்டால் நமது நிழல் கூட நமக்கு சொந்தமில்லை (இது அம்மணி சாலம்மாவுக்கு கூறும் அறிவுரைகள் ).

பன்ச்  : அம்மணி - வரவேற்கப்பட வேண்டியவள்.

ரெக்க - சினிமாவிமர்சனம்

விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங்கி இருக்கிறது இந்த திரைப்படம்.தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் விஜய் சேதுபதியை ஒரு மாஸான திரைப்படம் எடுத்து தூக்கி பறக்க வைக்க ரெக்க என பெயர் சூட்டியிருப்பார்கள் போல ஆனால் நடந்தது என்னவோ விஜய் சேதுபதி தான் ரெக்கை போல இந்த திரைப்படத்தை சுமந்து பறக்கிறார்.சரி திரைப்படத்தின் கதைக்கு வருவோம்.

கதை 
வழக்கத்துக்கு மாறாக தொடக்க காட்சியில் ஹரிஷ் உத்தமன் மற்றும் கபீர் சிங் ஆகிய இரு வில்லன்களுக்கும்  இடையிலான பகையை விளக்கியிருக்கிறார்கள் .விஜய்சேதுபதி வழக்கறிஞருக்கு படித்த கும்பகோணத்தை சேர்ந்த ஒரு இளைஞர்.காதலனையோ ,காதலியையோ வீடு புகுந்து தூக்கி வந்தாவது காதல் திருமணங்களை நடத்திவைப்பதே தனது வாழ் நாள் லட்சியம் என்று வாழ்ந்து வருபவர்.அப்படி ஒருமுறை கும்பகோணத்தில் பெரிய ரவுடியும் திரைப்படத்தின் ஒரு வில்லனுமான ஹரிஷ் உத்தமன் திருமணம் செய்ய இருந்த பெண்ணை தூக்கி வந்து விடுகிறார் இதனால் கோபமடைந்த ஹரிஷ் உத்தமன் பழிவாங்க சரியான சமயம் பார்த்து காத்திருக்கிறார்.பிறகு விஜய்சேதுபதியின் தங்கை திருமணம் கும்பகோணத்தில் நடக்க இருக்கிறது.திருமணத்திற்கு முதல் நாள் டாஸ்மாக் செல்லும் விஜய்சேதுபதியின் நண்பர் சதிஷ் இன்னொருவர் மது பாட்டில்களை தட்டி விட்டு அலப்பறை செய்கிறார் அதனாலேயே ஹரிஷ் உத்தமனின் பிடியில் சிக்குகிறார்.சதீஷை காப்பாற்ற வரும் விஜய் சேதுபதி தங்கை திருமணம் நடக்க இருப்பதை வில்லனிடம் இருந்து மறைக்க நினைக்கிறார் ஆனால் அது வில்லனுக்கு தெரியவருகிறது.இந்த விஜய் சேதுபதியின் இக்கட்டான சூழ்நிலையையை பயன் படுத்தி மற்றொரு வில்லனான கபீர் சிஙகையும் விஜய் சேதுபதியையும் பழிவாங்க நினைக்கிறார் ஹரிஷ் உத்தமன்.

உன் தங்கை திருமணம் நடக்க வேண்டும் என்றால் நான் காதலிக்கும் பெண்ணை மதுரையில் இருந்து அழைத்து வந்து விடுமாறு சொல்கிறார் ஹரிஷ் உத்தமன்.தங்கையின் திருமணத்தில் பிரச்சன்னை வந்து விட கூடாது என்பதற்காக மதுரைக்கு பெண்ணை தூக்க தனியாக செல்கிறார் விஜய் சேதுபதி அந்த பெண் தான் கதாநாயகி லட்சுமி மேனன்.சென்ற இடத்தில் லட்சுமி மேனன் தந்தை மிகப்பெரிய ஆள் என்று தெரிந்து கொண்ட விஜய்சேதுபதி லெட்சுமி மேனன் படிக்கும் கல்லுரிக்கே செல்கிறார்.இவரை பார்த்த லட்சுமி மேனன் ஏற்கனவே இவரை தெரிந்தது போல காட்டிக்கொள்கிறார்.தாய்,தோழி என அனைவருடனும் சொல்லிவிட்டு விஜய் சேதுபதியுடன் செல்ல தயாராகிறார்.லட்சுமி மேனன் ஊரை விட்டு ஓடிப்போவதை அறிந்த ஊர் காரர்கள் விஜய் சேதுபதியை தாக்குகிறார்கள்.எண்ணிக்கையில் ஐம்பதுக்கும் மேலான நபர்களை அடித்து தும்சம் செய்து திட்டமிட்டபடி பல சாகசங்கள் செய்து லெட்சுமி மேனனை தூக்கி விடுகிறார்.பின்பு அவரை அழைத்து கொண்டு கோயம்பத்தூர் சென்று விடுகிறார் அதன் பின் ஹரிஷ் உத்தமனை தொடர்பு கொள்கிறார்.லெட்சுமி மேனனை திருமணம் செய்ய போகும் இன்னொரு வில்லனான கபீர் சிங் கோவையில் இருப்பதை கூறி லட்சுமி மேனனை தன்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிடுமாறு கூறுகிறார்.இதற்கிடையில் ஏன் காதலர்களை சேர்த்து வைக்க இவ்வளவு போராடுகிறார் என்பதற்கான முன் கதையை (Flash Back ) லட்சுமி மேனனிடம் கூறுகிறார்.அந்த முன் கதை (Flash Back) என்னவென்றால் மருத்துவ படிப்பை முடித்த கிஷோர் டியுஷன் ஆசிரியையான சிஜா ரோஸை காதலிக்கிறார்.சில காட்சிகளுக்கு பிறகு சிஜா ரோஸுக்கும் கிஷோர் மீது காதல் வருகிறது ஆனால் இருவரும் சேர தடை ஏற்படும் பொழுது ஒரு கடிதத்தை எழுதி சிறு வயது விஜய்சேதுபதியிடம் கொடுத்து கிஷோரிடம் கொடுத்திவிட சொல்கிறார் சிஜா ரோஸ் ஆனால் விஜய் சேதுபதி கொடக்கவில்லை.அதனால் அந்த காதல் பிரிந்து விடுகிறது கிஷோறும் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகி விடுகிறார்.அதனால் தன் கண்ணில் பட்ட காதலர்களையெல்லாம் சேர்த்து வைக்கிறார் விஜய் சேதுபதி.அப்பொழுது தான் லட்சுமி மேனனுக்கு  தன்னை முன்கூட்டியே தெரியும் என்பதையும் தன்னை அவர் காதலிப்பதையும் தெரிந்து கொள்கிறார் பிறகு வேறு வழியில்லாமல் பிரிய மனமில்லாமல் லட்சுமி மேனனை அங்கேயே விட்டு பிரிக்கிறார்.அப்பொழுது மீண்டும் சிஜா ரோசை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறார் விஜய்சேதுபதி.இந்நிலையில் கபீர் சிங்கை பழிவாங்க நல்ல சந்தர்ப்பமாக எண்ணிய ஹரிஷ் உத்தமன் அவரை நேரில் வரவைக்கிறார்.இப்பொழுது விஜய் சேதுபதி ,ஹரிஷ் உத்தமன்,கபீர் சிங் மூவரும் ஒரே இடத்தில்.மாறி மாறி சண்டையிடுகிறார்கள் இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்,சிஜா -கிஷோர் காதல் சேர்ந்ததா இதுதான் மீதிக்கத்தையும் இறுதிக்காட்சியும்.

விமர்சனம் 
விஜய் சேதுபதியின் முந்தைய படங்களைப் போல் இல்லமால் மாறுபட்டு முழு நீள கமர்ஷியல் என்டர்டைனராக இருப்பது இப்படத்திற்கு ஒரு வகையில் பலம் என்றே சொல்லலாம்.சண்டை காட்சிகளிலும் சரி ,நடிப்பு திறமையை காட்ட சந்தர்பம் கிடைக்கும் பொழுதும் சரி விஜய் சேதுபதி பட்டையை கிளப்பி விடுகிறார்.லட்சுமி மேனன் சிறிது உடல் எடை கூடியிருக்கிறது போல முகமும் சற்று இளமை இழந்தே காணப்படுகிறது ஆனால் நடிப்பில் குறைவைக்கவில்லை.கே.எஸ் .ரவிக்குமார் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் இடையேயான தந்தை மகன் உறவு அழகு.சிஜா ரோஸ் -கிஷோர் இடையேயான காதல் காட்சிகள் அருமை அவர்கள் இருவரின் நடிப்பும் நம்மை கவர்கிறது.முதல் பாதியில் காட்சிகள் வேகமாக நகர்வது படத்தின் ப்ளஸ் அதற்காக இயக்குனர் ரத்தின சிவாவை பாராட்டியே ஆகா வேண்டும்.இதற்கு முன் இதைப்போன்று வேகமான முதல் பாதியை  கில்லி திரைப்படத்தில் பார்த்தது.இசையமைப்பாளர் இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் படியும் உள்ளன ஏற்கனவே கேட்ட படியும் உள்ளன.ஒளிப்பதிவு அருமை கண்டிப்பாக இது ஒரு வசூல் ரீதியான வெற்றி படம் என்பதில் மாற்று கருத்தே கிடையாது.


திரைப்படத்தின் பலம் 

  1. விஜய் சேதுபதி 
  2. சிஜா ரோஸ் -கிஷோர் காதல் காட்சிகள் 
  3. ஒளிப்பதிவு 
  4. சண்டைக்காட்சிகள் 
  5. வேகமான திரைக்கதை

திரைப்படத்தின் பலவீனம் 


  1. யதார்த்தத்தை மீறிய ஒரு சில காட்சிகள் (உதாரணத்திற்கு துளி காயமும் இன்றி விஜய் சேதுபதி 50 ஆட்களை அடிப்பது )

கருத்து  : உதவி கேட்டு வரும் காதலர்களுக்கு உதவ வேண்டும்.இல்லையேல் பின்னால் வறுத்த படுவீர்கள்.

 பன்ச்  : ரெக்க -உயர பறக்கும் அளவு திறன் வாய்ந்தது.

ரெமோ - திரைவிமர்சனம்

நண்பர்களே இன்று நாம் விவாதிக்க இருக்கின்ற திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்திருக்கும் ரெமோ.

கதை
இந்த திரைப்படத்தின் கதை என்று பார்த்தால் சினிமாவில்  எப்படியாவது கதாநாயகன் ஆகி விட வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்ட ஒரு இளைஞன்.இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் தயாரிக்க உள்ள ஒரு திரைப்படத்திற்கு கதாநாயகன் தேர்வு நடைபெறுகிறது.அந்த தேர்வில் நமது கதாநாயகனும் கலந்து கொள்கிறார் இவரின் நகைச்சுவையான நடிப்பை பார்த்து ரசித்த இயக்குனர் காதல் உணர்வை வெளிப்ப்டுத்துமாறு கூறுகிறார்.இதுவரை யாரிடமும் காதல் வயப்படாதா காரணத்தால் அவரால் அது முடியவில்லை.நீ நகைச்சுவை நன்றாக செய்கிறாய் ஆனால் நான் எடுக்குப்போகும் திரைப்படமோ ஆன் பெண்ணாக நடிக்கப்போகும் பாத்திரத்தை மையமாக கொண்டது அவ்வை ஷண்முகி பார்ட் -2 என்று கூறி அனுப்பிவிடுகிறார்.எப்படியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்தி கதாநாயகனாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார் சிவ கார்த்திகேயன்.அப்பொழுது தான் கீர்த்தியை பார்க்கிறார்.பார்த்த மாத்திரத்திலேயே காதல் வயப் படுகிறார்.அவரை எப்படியோ பின் தொடர்ந்து வீடு வரை சென்று தன காதலை வெளிப்படுத்த நினைக்கிறார்.அப்படி கீர்த்தியின் வீட்டுக்கு மலர்கொத்துக்களை கையில் ஏந்தி காதலை வெளிப்படுத்த செல்லும் நேரத்தில் அவருக்கு இன்னொருவருடன் நிச்சயதார்தம் நடந்து கொண்டு இருப்பது தெரியவருகிறது .மனமுடைந்து போன சிவகார்த்திகேயன் பின் தனக்கு கதாநாயகன் லட்சியம் தான் முக்கியம் என்று முடிவு செய்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை கவர ஒரு லேடி நர்ஸ் கெட்டப்பில் செல்கிறார்.இம்முறை அவரின் ஆர்வத்தை ரசித்த இயக்குனர் நடனமாடவும்,நடிக்கவும் சொல்கிறார் அப்போழுது ஒரு  காதல் காட்சியில் நடிக்க முற்படும் பொழுது தன் நிலை மறந்து கீர்த்தியை நினைத்து ஏதும் செய்யாமல் அப்படியே நின்று விடுகிறார்.திருப்தி அடையாத இயக்குனர் சிவகார்த்திகேயனை அனுப்பிவிடுகிறார். அப்பொழுதுதான்  கீர்த்தியின் மீது உள்ள ஆழமான காதலை உணர்கிறார் சிவகார்த்திகேயன்.

கீர்த்தியை நினைத்துக்கொண்டு லேடி நர்ஸ் கெட்டப்பிலே பேருந்தில் பயணம் செய்கிறார் அப்பொழுது கீர்த்தியும் அதே பேருந்தில் பயணம் செய்கிறார்.லேடி கெட்டப்பில் இருந்தவரிடம் சில்மிஷம் செய்யும் யோகியிடம் இருந்து சிவகார்த்திகேயனை காப்பாற்றுகிறார் கீர்த்தி.பின் அவருக்கு தான் மருத்துவராக பணியாற்றும் மருத்துவமணியில் நர்ஸ் வேலையும் வாங்கி தருவதாக கூறுகிறார்.இதை கீர்த்தியை காதலிக்க வைக்க தனக்கு கிடைத்த சந்தர்ப்பமாக என்னும் சிவகார்த்திகேயன் மருத்துவமனையில் நர்ஸ்சாக சேர்கிறார்.அப்படியே கீர்த்தியின் மனதை மாற்றவும் முயல்கிறார் அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுகிறது அதையெல்லாம் தகர்த்து இறுதியில் இவர் எப்படி கீர்த்தியின் மனதை மாற்றி தன்னை காதலிக்க செய்தார் என்பதே மீதிக்கதை.

விமர்சனம் 
 திரைப்படம் முழுவதும் சிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ் இவர்களை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப் பட்டு உள்ளது.அவர்களும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்  .குறிப்பாக லேடி கெட்டப்பில் சிவகார்த்திகேயன் பின்னி எடுத்திருக்கிறார்.இவர்களை தவிர்த்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியது சிவகார்த்திகேயன் அம்மாவாக வரும் சரண்யா அவருக்கு கதாநாயகன் அம்மா கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்திவிடும்.இந்த திரைப்படத்தில் அவருக்கு அதிக காட்சிகள் கிடையாது ஆனாலும் கிடைத்த இடத்தில் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.சிவகார்த்திகேயன் நண்பராக வரும் சதீஷ்,இவர் இல்லையென்றால் சில காட்சிகளை பார்த்து அலுத்து போயிருப்போம்.சில நேரங்களில் காட்சியில் தொய்வு ஏற்படுபொழுது தனது நகைச்சுவை வசனத்தால் சரி செய்து விடுகிறார்.லேடி கெட்டப்பில் இருக்கும் சிவாவை ஒரு தலையாக காதல் செய்கிறார் யோகி பாபு இவர் திரையில் தோன்றும் காட்சிகளில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.அனிருத்தின் இசை திரைப்படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி நிறைவாக உள்ளது.பி.சீ.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை காட்சிக்கு பலம்.இவை அனைத்தும் இருந்தும் திரைப்படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே உருவான  எதிர்பார்ப்புகள்,திரைக்கதையில் இருந்த பல லாஜிக் மீறல்கள் உள்ளிட்ட காரணங்களால் ரசிகர்களை முழுமையாக இந்த ரெமோவால் திருப்திபடுத்த முடியவில்லை.ஆனால் நகைச்சுவை காட்சிகளால் இறுதிவரை நம்மை திரையரங்குக்குள் உட்கார வைத்து விட்டார்கள்.

திரைப்படத்தின் பலம் : 


  1. சிவகார்த்திகேயன் ,கீர்த்தி சுரேஷ் 
  2. சதீஷ்,யோகிபாபு வின் நகைச்சுவை 
  3. ஒளிப்பதிவு 
  4. சண்டைக்காட்சிகள்
திரைப்படத்தின் பலவீணம் : 


  1. ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்
  2. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பு
கருத்து  : காதலிக்கிற பெண்ணை தன்னை காதலிக்க வைக்க முயற்சி செய்யாதவன் அந்த பொண்ணு கிடைக்கலைனு வருத்தப்பட தகுதியே இல்லாதவன்.

பன்ச்  : ரெமோ - ரசிக்கலாம் ,சிரிக்கலாம் 




Related Posts Plugin for WordPress, Blogger...