02-11-2018 நேரம் மாலை 4:35 மணி தற்பொழுது மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றளுத்த தாழ்வு நிலையின் அகடு (Trough Of Low) காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு திசையில் நகர்ந்து நாளை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் 04-11-2018 ஆகிய நாளை மறுநாள் அது வலுவிழந்து போக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக அந்த குறைந்த காற்றளுத்த தாழ்வு நிலையின் அகடு மேற்கு நோக்கி நகரும் பொழுது தூத்துக்குடி ,கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் ஓரளவு நல்ல மழை பதிவாகாலாம் நாளை தென் உள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.04-11-2018 அல்லது அதற்கு பிறகு தமிழகத்தில் பதிவாகிவரும் மழையின் அளவு
குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள் உட்பட வட தமிழகத்தில் மழையின் அளவு முற்றிலும் குறைய தொடங்கலாம் அவ்வபொழுது ஒரு சில இடங்களில் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து மழை பதிவாகலாம்.அதன் நகர்வுகள் தொடர்பாகவும் அன்றன்றைக்கு மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாகவும் நமது பக்கத்தில் தினமும் பதிவிடுகிறேன்.
தற்பொழுது இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவுகளுக்கு மேற்கே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்கலாம் மேலும் 04-11-2018 அல்லது 05-11-2018 தேதிகளின் வாக்கில் அது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு இலங்கைக்கு கிழக்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளலாம் இதன் காரணமாக 06-11-2018 அல்லது 07-11-2018 ஆம் தேதி வாக்கில் தென் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.மேலும் அது ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து 08-11-2018 அல்லது 09-11-2018 ஆம் தேதி வாக்கில் இலங்கையின் தெற்கு பகுதிகளை அடைய முற்படலாம் அதன் பின் அது மன்னார்வளைகுடா பகுதிகளை அடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.ஒரு சில மாதிரிகள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து அது வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி வரலாம் என்பது போன்ற தகவல்களை வழங்கி வருகின்றன என்னை பொறுத்தமட்டில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தான் சொல்லத் தோன்றுகிறது எதுவாயினும் அடுத்த 2 அல்லது 3 மூன்று நாட்களில் அதன் நகர்வுகள் தொடர்பான உறுதியான தகவல்கள் தெரியவந்துவிடும் .அதன் பின் நமது பக்கத்தில் அது தொடர்பான என்னுடைய இந்த கருத்தையே உறுதிப்படுத்துகிறேன்.
மேடன் -ஜூலியன் அலைவு (MJO) ஆனது தற்பொழுது அதன் 1வது கட்டத்தில் வலுவாக உள்ளது நான் கடந்த 25-10-2018 ஆம் தேதியன்று எழுதிய பதிவில் நவம்பர் மாத முதல் வாரத்துக்கு பிறகு மேடன் -ஜூலியன் அலைவு ஆனது அதன் 2 வது கட்டத்துக்கு வரலாம் என குறிப்பிட்டு இருந்தேன் அதன்படி 10-11-2018 (நவம்பர் 10) ஆம் தேதி வாக்கில் மேடன் -ஜூலியன் அலைவு ஆனது அதன் 2 வது கட்டத்துக்கு வலுவுடன் வர வாய்ப்புகள் உள்ளது 10-11-2018 முதல் 16-11-2018 ஆம் தேதி வரையில் அது அதனுடைய 2 வது கட்டத்திலேயே தொடரலாம் 17-11-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய 3 வது கட்டத்தை 1க்கு குறைவான வீச்சு அளவுடன் அடைய முற்படலாம் அதுவும் வங்கக்கடல் பகுதியில் மழைக்கு சாதகமான சூழல்களை உருவாக்க வல்லது தான்.அதேசமயம் 09-11-2018 ஆம் தேதி வாக்கில் சுமத்ரா தீவுகளுக்கு கிழக்கே மீண்டும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி 10-11-2018 அல்லது 11-11-2018 ஆம் தேதிகளின் வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைய வாய்ப்புகள் உள்ளது அதனுடைய அடுத்தகட்ட நகர்வுகளே இந்த பருவமழையின் போக்கை தீர்மானிக்கும் அம்சமாக அமையலாம்.நவம்பர் 14 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை உள்ள நாட்களில் பதிவாகும் மழையே இந்த ஆண்டின் பருவமழை சாதகமா ? பாதகமா ? என்பதனை எடுத்துரைக்கும் விதமாக அமையும்.
நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.
தற்பொழுது இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவுகளுக்கு மேற்கே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுக்கலாம் மேலும் 04-11-2018 அல்லது 05-11-2018 தேதிகளின் வாக்கில் அது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு இலங்கைக்கு கிழக்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளலாம் இதன் காரணமாக 06-11-2018 அல்லது 07-11-2018 ஆம் தேதி வாக்கில் தென் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.மேலும் அது ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து 08-11-2018 அல்லது 09-11-2018 ஆம் தேதி வாக்கில் இலங்கையின் தெற்கு பகுதிகளை அடைய முற்படலாம் அதன் பின் அது மன்னார்வளைகுடா பகுதிகளை அடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.ஒரு சில மாதிரிகள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து அது வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி வரலாம் என்பது போன்ற தகவல்களை வழங்கி வருகின்றன என்னை பொறுத்தமட்டில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தான் சொல்லத் தோன்றுகிறது எதுவாயினும் அடுத்த 2 அல்லது 3 மூன்று நாட்களில் அதன் நகர்வுகள் தொடர்பான உறுதியான தகவல்கள் தெரியவந்துவிடும் .அதன் பின் நமது பக்கத்தில் அது தொடர்பான என்னுடைய இந்த கருத்தையே உறுதிப்படுத்துகிறேன்.
மேடன் -ஜூலியன் அலைவு (MJO) ஆனது தற்பொழுது அதன் 1வது கட்டத்தில் வலுவாக உள்ளது நான் கடந்த 25-10-2018 ஆம் தேதியன்று எழுதிய பதிவில் நவம்பர் மாத முதல் வாரத்துக்கு பிறகு மேடன் -ஜூலியன் அலைவு ஆனது அதன் 2 வது கட்டத்துக்கு வரலாம் என குறிப்பிட்டு இருந்தேன் அதன்படி 10-11-2018 (நவம்பர் 10) ஆம் தேதி வாக்கில் மேடன் -ஜூலியன் அலைவு ஆனது அதன் 2 வது கட்டத்துக்கு வலுவுடன் வர வாய்ப்புகள் உள்ளது 10-11-2018 முதல் 16-11-2018 ஆம் தேதி வரையில் அது அதனுடைய 2 வது கட்டத்திலேயே தொடரலாம் 17-11-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய 3 வது கட்டத்தை 1க்கு குறைவான வீச்சு அளவுடன் அடைய முற்படலாம் அதுவும் வங்கக்கடல் பகுதியில் மழைக்கு சாதகமான சூழல்களை உருவாக்க வல்லது தான்.அதேசமயம் 09-11-2018 ஆம் தேதி வாக்கில் சுமத்ரா தீவுகளுக்கு கிழக்கே மீண்டும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி 10-11-2018 அல்லது 11-11-2018 ஆம் தேதிகளின் வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைய வாய்ப்புகள் உள்ளது அதனுடைய அடுத்தகட்ட நகர்வுகளே இந்த பருவமழையின் போக்கை தீர்மானிக்கும் அம்சமாக அமையலாம்.நவம்பர் 14 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை உள்ள நாட்களில் பதிவாகும் மழையே இந்த ஆண்டின் பருவமழை சாதகமா ? பாதகமா ? என்பதனை எடுத்துரைக்கும் விதமாக அமையும்.
நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.