தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
16-08-2017 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
16-08-2017 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதிப் பற்றாக்குறை மற்றும் வருமானக் குறைவை காரணம் காட்டி புதுச்சேரி விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே புதுச்சேரி விமான நிலையத்தில் விமானங்களை இயக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி பலமுறை டில்லிக்கு விரைந்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் கடந்த ஜூலை மாதம் முதல் புதுச்சேரியில் விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் புதுவை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தின்தோறும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது மேலும் 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த விமான சேவைக்கு கட்டணமாக ₹ 2,800 வசூலிக்கப்படும் எனவும் அப்பொழுது கூறப்பட்டு வந்தது.இதனிடையே  நேற்று 16-08-2017 அன்று புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு ஹைதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டது .முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து இந்த விமான சேவையை தொடக்கிவைத்தார் மேலும் இந்த விமான போக்குவரத்துக்கு நபர் ஒன்றுக்கு பயணக்கட்டணமாக ₹2449 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




16-08-2017 இன்று 55 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் - 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மக்களும் நேற்று நாட்டின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் இன்று புதுச்சேரியில் இந்தியாவுடன் இணைந்த சட்ட பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் (16-08-1962) நாள் பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்து சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதனையடுத்து புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் பிராந்தியங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16ஆம் நாளை சட்டபூர்வ பரிமாற்ற நாளாக (De-Jure Day) அங்கீகரித்து புதுச்சேரி அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம்  (De - facto -merger  of  Pondicherry ) 1954 ஆம் வருடம்  நவம்பர் 1ஆம் நாளில் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் தலைமை ஆணையாராக கேவல்சிங் நியமிக்கப்பட்டார் இருப்பினும் அதிகார பூர்வமான சட்டமுறை மாற்றுதல் ஒப்பந்தம் (Treaty of Cession ) 1956ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளன்று இந்தியாவின் சார்பாக பண்டித ஜவஹர்லால் நேருவும் ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ,பிரஞ்சு குடியரசு தலைவருக்காக அதன் இந்திய தூதுவர் ஸ்தானிஸ் லாஸ் ஆஸ்ட்ரோக்கும் (Stansis Ostrog ) கையெழுத்திட இனிதே நிறைவேரியது.

1962 ஆம் வருடம் மே 27 ஆம் நாளில் இந்த ஒப்பந்தத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் உறுதிப்படுத்தியது.அதற்குப்பிறகு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் 1962 ஆம் வருடத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும்,பிரஞ்சு தூதர் ழான் போல் கார்திவேயும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெலுத்திட
புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது . அன்றிலிருந்து புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக (De -Jure ) இந்திய நாட்டில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.


16-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

16-08-2017 இன்று வேலூர் ,ஈரோடு ,சேலம் ,கோயம்பத்தூர் ,திண்டுக்கல் ,திருச்சி ,திருப்பூர் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி,தேனி ,திருவண்ணாமலை ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,கடலூர் ,புதுக்கோட்டை,நாமக்கல்,காஞ்சிபுரம் ,திருவள்ளூர்   மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

16-08-2017 இன்று சேலம் ,ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புண்டு ராசிபுரம் ,மல்லசமுத்ரம் ,திருச்சங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு மேலும் கடலூர் மாவட்டம் வடலூர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு நாகை மாவட்டம் திருக்கடையூர் பகுதிகளிலும் இன்று குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.கிருஷ்ணகிரியிலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ,ஊத்தங்கரை பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.


16-08-2017 இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு ஓசூர் ,தளி,கீழமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல  மழையை எதிர்பார்க்கலாம்.

16-08-2017 இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னையின் புறநகர் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு சென்னையிலும் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.

16-08-2017 இன்று நாகபட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு காரைக்காலிலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.


16-08-2017 முதல் புதுவையில் இருந்து ஹைதராபாத்துக்கு புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் - 3 மணி நேர பயணத்துக்கு ₹2,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்

புதுவை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தின்தோறும் இயக்கப்பட உள்ளது வருகின்ற 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த விமான சேவைக்கு கட்டணமாக ₹ 2,800 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16-08-2017 அன்று காலை 11:40க்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் மத்தியம்  1:30 மணிக்கு ஹைதராபாத்தை அடையும் அதே போல காலை 8:35 மணிக்கு விஜயவாடாவில் இருந்து புறப்படும் விமானம் காலை 11:20 மணிக்கு புதுச்சேரியை வந்தடையும்.





Related Posts Plugin for WordPress, Blogger...