தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
GAJA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GAJA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15-11-2018 காரைக்கால் நகர பகுதிக்கு 200 கி.மீ தொலைவில் கஜா (GAJA) புயல் - எங்கு கரையை கடக்கலாம் ?

15-11-2018 நேரம் பிற்பகல் 2:25 மணி தற்பொழுது அந்த தீவிர புயலான #கஜா (#GAJA) கிட்டத்தட்ட #காரைக்கால் நகரப்பகுதிக்கு 200 கி.மீ கிழக்கே நிலைக் கொண்டுள்ளது.அதனை காரைக்கால் வானிலை ஆய்வு மைய ராடார் படங்களின் வாயிலாக தெளிவாக அறியமுடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பதிவாக தொடங்கலாம் குறிப்பாக அந்த புயல் #நாகை மாவட்டத்தின் கடலோர  பகுதிகளை நெருங்குகையில் #காரைக்கால் மற்றும் #நாகப்பட்டினம் நகர பகுதிகள்  உட்பட அம்மாவட்டங்களின் பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகலாம் மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அந்த தீவிர புயலானது மேலும் மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று 15-11-2018 ஆகிய இன்று நள்ளிரவு அல்லது 16-11-2018 ஆகிய நாளை அதிகாலை நேரத்தில் #காரைக்கால் - #கோடியக்கரை இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம் மேலும் நான் முன்பு தெரிவித்து இருந்தது போல அந்த தீவிர புயலானது #வேதாரண்யம் சுற்றுவட்டப் பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அதாவது இன்று இரவு அல்லது நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் #புதுச்சேரி ,#கடலூர் ,#அரியலூர் ,#பெரம்பலூர் ,#திருச்சி ,#தஞ்சாவூர் ,திருவாரூர் மற்றும் #புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஆங்காங்கே வலுவான காற்றுடன் கூடிய மழை பதிவாகலாம்.அது கரையை கடக்கையில் அப்பகுதிகளில் அதாவது #தலைஞானியறு உட்பட #வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சமயங்களில் 120 கி.மீ வரையிலும் காற்று வேகம் எடுக்கலாம் #காரைக்கால் ,#நாகபட்டினம் ,#திருவாரூர் நகர பகுதிகளில் உட்பட அம்மாவட்டங்களின் கடலோர பகுதிகள் உட்பட ஆங்காங்கே இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.



#புதுச்சேரி மற்றும் #கடலூர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசலாம்.மேலும் #சீர்காழி ,#பரங்கிப்பேட்டை ,#பிச்சாவரம் ,#சிதம்பரம் ,#கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரையில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம்.

மேலும் அந்த புயல் கரையை கடந்து வலுகுறைந்து #முத்துப்பேட்டை உட்பட #திருவாரூர் ,#புதுக்கோட்டை ,#திண்டுக்கல் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகள் வழியாக கேரளாவை அடைந்து பின்னர் 16-11-2018 ஆகிய நாளை நள்ளிரவு அல்லது 17-11-2018 ஆகிய நாளை மறுநாள் அரபிக்கடல் பகுதிகளை அடைய முற்படலாம் இதன் காரணமாக முன்பு நான் முன்பு பதிவிட்டு இருந்தை போன்று 16-11-2018 ஆகிய நாளை #திருச்சி ,#மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவகங்கை ,#கரூர் ,#வால்பாறை உட்பட #திருப்பூர் மற்றும் #கோவை மாவட்டங்களின் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாகலாம்.சில பகுதிகளில் 200 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை கூட பதிவாகலாம்.இவை தவிர்த்து தமிழக்தின் பிற பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் பரவலான மழை நாளை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் அது அரபிக்கடல் பகுதிகளை அடைந்து காற்றை தம்வசம் இழுப்பதாலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் இருப்பதாலும் 18-11-2018 ஆம் தேதி மற்றும் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு மேலும் 20-11-2018 மற்றும் 21-11-2018 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.



அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களை நெருங்குகையில் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்





கஜா புயல் காரைக்கால் அருகே கரையை கடக்க வாய்ப்பு - 15-11-2018 அன்று இரவு அது கரையை கடக்கலாம்

14-11-2018 நேரம் பிற்பகல் 1:50 மணி இன்று காலை முதல் அந்த #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர தொடங்கி தொடர்ந்து தமிழக வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது இன்னும் சற்று நேரத்தில் அது தீவிரமடைய தொடங்கி அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது தற்பொழுது மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் அந்த  #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது நிலைகொண்டுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் அது தீவிரமடைய தொடங்கி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொள்ளலாம்.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அது வட கடலோர பகுதிகளை நெருங்க முற்படுகையில் அதன் வலு குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து 15-11-2018 ஆகிய நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் அது #காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள #நாகை மாவட்ட பகுதிகளில் கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது கரையை கடக்க முற்படுகையில் மணிக்கு 70 கி.மீ  - 80 கி.மீ வரை #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் கற்று வீசக்கூடும் சில சமயங்களில் 90 கி.மீ வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

15-11-2018 அன்றைய மழைக்கான வாய்ப்புகள்
-------------------------------------------------------------------------
14-11-2018 அன்று நள்ளிரவு அல்லது 15-11-2018 ஆம் தேதி அதிகாலை முதல் திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் #சென்னை மாநகரில் ஆங்காகே மழை பதிவாக தொடங்கலாம் மெல்ல மெல்ல மழை #காஞ்சிபுரம் , #விழுப்புரம் ,#புதுச்சேரி ,#கடலூர் என அன்று நண்பகுலுக்குள் பிற வட கடலோர மாவட்டங்களுக்கும் பரவ தொடங்கலாம்.15-11-2018 அன்று வட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

15-11-2018 நள்ளிரவு முதல் 16-11-2018 நள்ளிரவு வரை உள்ள 24 மணி நேரத்தின் மழைகான வாய்ப்புகள்
--------------------------------------------------------------------------

#காரைக்கால் ,#நாகப்பட்டினம் ,#திருவாரூர் ,#தஞ்சை ,#புதுக்கோட்டை ,#திருச்சி மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் அந்த #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது  கரையை கடந்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து பின்னர் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் கேரளாவை கடந்து அரபிக்கடல் பகுதியை எட்ட முற்படலாம் இதன் காரணமாக இவை தவிர்த்து கரூர் ,திருப்பூர் ,கோவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு குறிப்பாக கோவை ,திருப்பூர் மாவட்டங்களின் தெற்கு பகுதிகளில் ஓரளவு வலுவான மழையை எதிர்பார்க்கலாம் மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள #நீலகிரி ,#தேனி ,#விருதுநகர் உட்பட தமிழக மேற்கு மாவட்டங்களிலும் #மதுரை ,#ராமநாதபுரம் ,#சிவங்கங்கை ,திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் #நெல்லை ,#தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.பொதுவாக தென் உள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் #அரியலூர் ,#பெரம்பலூர் ,#விழுப்புரம் ,#திருவண்ணாமலை மற்றும் #வேலூர் ,#ஈரோடு ,#சேலம் ,#நாமக்கல் ,#விழுப்புரம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் இவைகள் உட்பட தர்மபுரி ,கிருஷ்னகிரி மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் 16-11-2018 அன்று மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மொத்தத்தில் 16-11-2018 அன்று தமிழிகக்தில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

15-11-2018 மற்றும் 16-11-2018 ஆம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கலாம் ?
------------------------------------------------------------------------------------
15-11-2018 ஆகிய நாளை காலை அல்லது நன்பகல் வாக்கில் #புதுச்சேரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் மேலும் 15-11-2018 ஆம் தேதி நண்பகல் முதல் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கலாம் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் மேலும் அந்த புயல் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படுகையில் அதாவது 15-11-2018 அன்று நள்ளிரவு மற்றும் 16-11-2018 அன்று அதிகாலை நேரத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் மணிக்கு 60 கி.மீ  - 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் 15-11-2018 ஆகிய நாளை நண்பகல் அல்லது பிற்பகல் வாக்கில் மழை பதிவாக தொடங்கலாம் அந்த கப்புயல் கரையை கடக்கையில் அதாவது 16-11-2018 அன்று நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் சில சமயங்களில் மணிக்கு 90 கி.மீ என்கிற அளவிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.#காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள #நாகை மற்றும் #திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகலாம்

அந்த  #கஜா (எ) #காஜா (#GAJA) புயலானது தீவிர புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதன் நகர்வுகள் தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...