தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
NEM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NEM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05-12-2018 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

05-12-2018 நேரம் இரவு 10:05 மணி தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.மேலும் கடந்த 25-11-2018 அன்று நான் எழுதிய அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான வானிலை தகவல்கள் அடங்கிய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மேடன் -ஜூலியன் அலைவு (MJO) ஆனது 04-12-2018 ஆகிய நேற்று முதல் அதன் இரண்டாவது கட்டத்தை வலுவான வீச்சு அளவுடன் எட்டியுள்ளது.இது அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலு பெற்று அதற்கு அடுத்த நிலையை அடைய உதவி  புரிகிறது.ஆனால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பான தகவல்களை ஓரளவு துல்லியமாக அறிய குறைந்தது ஒரு வாரமாவது (7 நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும்.அதற்கு முன் புயல் உருவாகும் என்பதை போன்ற தகவல்களை உறுதியாக கூறுவது என்பது பிறக்காத பிள்ளைக்கு பேர் வைப்பது போன்றதாகும்.அடிப்படை ஆதரமற்ற வீண் வதந்திகளை பகிர்ந்து மக்களிடம் பீதியை பரவ செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.நான் உங்களிடம் கேட்டு கொள்வது ஒன்று தான் ஆதரமற்ற தகவல்களை நம்பவும் செய்யாதீர்கள் அதை பகிர்ந்து மக்களிடம் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தவும் முற்படாதீர்கள்.05-12-2018 ஆகிய இன்று #சென்னை மாநகர் உட்பட வட மற்றும் வட-உள் தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது.நாளை முதல் வட தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.05-12-2018 ஆகிய இன்று இதன் பிறகு நல்லிறவு மற்றும் 06-12-2018 ஆகிய நாளை அதிகாலை நேரங்களில் #ராமநாதபுரம் , #புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதிகள் உட்பட தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் அதிகாலை நேரத்தில் வட கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.நாளை தென் தமிழகத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மற்றபடி 06-12-2018 ஆகிய நாளை முதல் வட தமிழகத்தின் அநேக இடங்களிலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மீண்டும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கலாம்.வட தமிழகத்தை பொறுத்தவரையில் காற்றின் திசையில் ஏற்படும் சிறு மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.இது தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.மேலும் நான் கடந்த மாதம் முதல் வட கிழக்கு பருவமழையானது டிசம்பர் 13 (13-12-2018) ஆம் தேதிக்கு பிறகு வரும் ஏதேனும் நாட்களில் மீண்டும் ஒரு முறை தீவிரமடைய வாய்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து குறிப்பிட்டு வந்திருந்தேன் அதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகள் அதற்கான வாய்ப்புகளை இன்னும் 10 நாட்களில் பிரகாசமாக்கும் என நம்புவோம்.

மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation)
-----------------------------------------------------------------------------
மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) -MJO ஆனது தற்பொழுது அதன் 2வது கட்டத்தில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக உள்ளது அடுத்த 4 அல்லது 5 நாட்களில் அதாவது 09-12-2018 அல்லது 10-12-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய 3வது கட்டத்தை 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக அடையலாம் அதன் பின் அதற்கு அடுத்த 7 நாட்களுக்கு அது 3வது கட்டத்தில் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளது அது மேலும் கிழக்கு நோக்கி பயணித்து அதன் பின் 16-12-2018 அல்லது அதற்கு பிறகு அது அதனுடைய 4வது கட்டத்தை அடைய முற்படலாம்.ஒரு சில மாதிரிகள் 7 நாட்களுக்கு பின்னர் அது 3வது கட்டத்திலேயே 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலுகுறைந்த நிலையில் தொடரலாம் என்பதை போன்று தெரிவிக்கின்றன எதுவாயினும் என்னை பொறுத்தவரையில் 18-12-2018 அல்லது 19-12-2018 ஆம் தேதிவரையில் MJO வின் தாக்கம் வங்கக்கடல் பகுதிகளுக்கு சாதகமானதாக இருக்கும் என கருதுகிறேன்.இந்த காலகட்டத்துக்குள் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் அடுத்தகட்ட நகர்வுகள் வட கிழக்கு பருவமழை தீவிரமடைய சாதகமானதாக இருக்கும் பட்சத்தில்.இதுநாள் வரையில் நிகழும் 2018 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பதிவான ஒட்டுமொத்த மழை அளவில் இருக்கும் வேறுபாடு நீங்கும் என நம்பலாம்.அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation)
--------------------------------------------------------------------------------
.தற்போது வலுகுறைந்த எல்-நினோவுக்கான சூழல்கள் பசிபிக் கடல் பரப்பில் நிலவி வருகிறது.இதன் காரணமாக கடந்த முறை அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்த எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation) தொடர்பான தகல்வல்களையே இந்த பதிவுடனும் இணைக்கிறேன்.அடுத்து வாரத்தில் பசிபிக் கடல் பரப்பில் நிலவும் சூழல்கள் தொடர்பாக விரிவாக பதிவிடுகிறேன்.தற்பொழுது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரபரப்பில் வலுகுறைந்த எல்-நினோ வுக்கான சூழல்கள் நிலவ தொடங்கியிருக்கின்றன இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் பசிபிக் கடல் பரப்பில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக நமது பக்கத்தின் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது மேற்கு பசிபிக் கடல் பரப்பு பகுதியான நினோ 4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட 0.9°C அளவிலும் அதேபோல இந்திய பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.7°C அளவிலும் மேலும் நினோ 3 இல் 0.8°C மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் கிழக்கு பகுதியான நினோ 1+2 பகுதியில் 0.6°C அளவிலும் இயல்பை விட அதிகரித்துள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பசிபிக் கடல் பரப்பு வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அடுத்த பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் மத்தியில் வலுவான எல்நினோ வுக்கான சூழல்கள் உருவாகலாம்.

பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாகவும் ஏற்கனவே நமது பக்கத்தில் இதற்கு முந்தைய பதிவுகளில் ஒரு முறை பதிவிட்டு உள்ளேன்.

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT

25-11-2018 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

25-11-2018 நேரம் மாலை 5:00 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் வறண்ட வானிலையே தொடரும் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.  இது தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.தற்பொழுது #வியட்நாம் நாட்டின் #VungTau அருகே உள்ள தெற்கு கடலோர பகுதிகளில் கரையை கடந்து வரும் #உசாகி (#USAGI) புயலானது கரையை கடந்து வட -வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு  அல்லது நாளை மறுநாள் #கம்போடியா நாட்டில் முற்றிலும் வலுவிழக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது இதன் தாக்கத்தால் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் அலைவுகளின் காரணமாகவும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடலின் இருமுனைகளிலும் நிலவி வரும் தற்காலிக நேர்மறையான சூழல்களின் காரணமாகவும் 28-11-2018 ஆம் தேதி அன்று நள்ளிரவு அல்லது 29-11-2018 தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதற்கு அடுத்த ஓரிரு நாட்களிலும் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் அதன் பின் மீண்டும் மழையின் அளவு குறைய தொடங்கலாம் பிறக்க இருக்கும் டிசம்பர் மாத முதல் வார மத்தியில் அதாவது 04-12-2018 அல்லது 05-12-2018 ஆம் தேதி வாக்கில் தமிழக வட கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் 13-12-2018 வாக்கில் அல்லது அதற்கு பிறகு வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.

மேடன் ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation)
-----------------------------------------------------------------------------
மேடன் ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation) - MJO ஆனது இரண்டு நாட்களுக்கும் முன்பு அதன் 6 வது கட்டத்தில் 1க்கு குறைவான வீச்சு அளவுடன் இருந்தது தற்பொழுது 25-11-2018 ஆகிய இன்று அதன் 7வது கட்டத்தில் 1க்கும் சற்று அதிகமான வீச்சு அளவை கொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது அதனுடைய 8வது  மற்றும் 1வது கட்டங்களை கடந்து 10 முதல் 14 நாட்களில் அதவாது டிசம்பர் முதல் வார மத்திய நாட்கள் அல்லது அதற்கு பிறகு அது அதனுடைய 2வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளது அதாவது 04-12-2018 முதல் 08-12-2018 வரை உள்ள நாட்களில் அதன் பின் அதற்கு அடுத்த 4 முதல் 5 நாட்களில் அது அதனுடைய 3 வது கட்டத்துக்கு 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவான நிலையில் பயணிக்க வாய்ப்புகள் உள்ளது.இவற்றை கணக்கில் கொண்டு பார்க்கையில் மேடன் ஜூலியன் அலைவின் உதவியுடன் டிசம்பர் முதல் வார மத்தியில் அல்லது அதற்கு பிறகு வங்கக்கடல் பகுதிகளில் பருவமழை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது இரண்டாவது வாரத்தில் அதாவது 13-12-2018 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கலாம் அதன் பின் மீண்டும் ஒருமுறை வட கிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.

எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation)
--------------------------------------------------------------------------------
தற்பொழுது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரபரப்பில் மிதமான எல்-நினோ வுக்கான சூழல்கள் நிலவ தொடங்கியிருக்கின்றன இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் பசிபிக் கடல் பரப்பில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக நமது பக்கத்தின் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது மேற்கு பசிபிக் கடல் பரப்பு பகுதியான நினோ 4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட 0.9°C அளவிலும் அதேபோல இந்திய பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.7°C அளவிலும் மேலும் நினோ 3 இல் 0.8°C மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் கிழக்கு பகுதியான நினோ 1+2 பகுதியில் 0.6°C அளவிலும் இயல்பை விட அதிகரித்துள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பசிபிக் கடல் பரப்பு வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அடுத்த பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் மத்தியில் வலுவான எல்நினோ வுக்கான சூழல்கள் உருவாகலாம்.

நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான்.இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT

பிலிப்பைன்ஸ் வடக்கு லூசன் மாகாணத்தை அச்சுறுத்தும் யூடு (YUTU ) புயல் - தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை எப்போது தொடங்கலாம் ?

28-10-2018 நேரம் பிரிப்பகல் 2:10 மணி நான் இதற்கு முந்தைய எனது பதிவுகளில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது அணைத்து நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக அரங்கேறி வருகின்றன.அந்த பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தது போல 29-10-2018 ஆகிய நாளை மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இதன் காரணமாக 29-10-2018 ஆகிய நாளை மாலை முதல் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதற்கு அடுத்த வரக்கூடிய நாட்களிலும் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் 30-10-2018 அன்று நள்ளிரவு அல்லது  31-10-2018 அன்று அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மாநிலம் #பரதீப் (#Paradip ) அருகே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம் குறிப்பாக #தம்ரா (#Dhamra) , #ராஜ்நகர் (#Rajnagar) அருகே உள்ள கடலோர பகுதிகளில் அது கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.



தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசாவில் கரையை கடந்து அதன் தாக்கம் குறைய தொடங்கியதும் முன்பு நான் பதிவிட்டு இருந்தது போல தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டிருக்கும் அந்த மேலடுக்கு சுழற்சியானது சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே நிலைகொள்ள முற்படலாம் இதன் காரணமாக 30-10-2018 அன்று மாலை அல்லது நள்ளிரவு முதல் தமிழக வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் அதக்ரு மறுநாள் ஆன 31-10-2018 ஆம் தேதி அன்று திருவள்ளுர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,புதுச்சேரி ,கடலூர் ,நாகப்பட்டினம் ,திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.31-10-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நவம்பர் மாத முதல் வார நாட்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

28-10-2018 கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டின் மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த 5 ஆம் வகை மிக சக்திவாய்ந்த சூறாவளியான #யூடு (#YUTU) வானது தற்பொழுது ஒரு 4 ஆம் வகை சக்தி வாய்ந்த சூறாவளியாக பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணமான #லூசன் (#LUZON) இன் வட கிழக்கு பகுதியின் முக்கிய நகரமான #TUGUEGARAO வுக்கு கிழக்கே மேற்கு பசிபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக அது நிலைகொண்டிருக்கும் கடல் பகுதிகளில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 240 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் கிழக்கு - தென்கிழக்கு திசையில் நகர்ந்து #லூசன் (#LUZON) மாகாணத்தின் வட கிழக்கு பகுதியான #Palanan , #Divlacan ,#Dinapigue அருகே கரையை கடக்க முற்படலாம் மேலும் அது கரையை கடக்க முற்படுகையில் அப்பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 200 கி.மீ க்கு அதிகமான அளவு காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் #MANGHUT போல அல்லாமல் வடக்கு  #லூசன் (#LUZON)  மாகாணத்தின் அநேக இடங்களிலும் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை என ஒரு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தகூடியதாக இருக்கலாம்.இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் இதுவரையில் பிலிப்பைன்ஸ் சந்தித்த இயற்கை பேரழிவுகளில் இது மறக்குமுடியாததாக கூட பதிவாகி விடலாம்.#Santiago , Candon , #Laoag , #Aparri , #Baguio, #calayan என அந்நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் இது பலத்த சேதத்தை உண்டு பண்ணலாம்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...