தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
french லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
french லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரெஞ்சிந்திய அரசு ஆட்சிக் காலத்தில் திருநள்ளார் (பகுதி - I )

கி.பி 1817 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் அன்றிலிருந்து திருநள்ளாற்றில் ஒரு நிலையான பிரஞ்சிந்திய ஆட்சி ஏற்ப்பட்டு பிரெஞ்சு நாட்டு சட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக எங்கு செயல் முறைக்கு வந்தன.திருனள்ளாறு உட்பட அனைத்துக் காரைக்கால் பிரதேசமும் பிரெஞ்சு ஆட்சிக்கு மாறிவந்தது ஒரு நீண்ட நெடிய வரலாறு அதன் சுருக்கம் கீழே .

கி.பி 1739 பிப்.14
 தஞ்சாவூர் மன்னன் சகாஜி ,புதுச்சேரிக் கவர்னர் துய்மா (DUMAS) விடம் காரைக்கலையும் ,கருக்களாச்சேரி கோட்டையையும் ,அத்துடன் 5 கிராமங்களையும் (திருமலைராயன் -பட்டினம் ,கீழையூர் ,மேலையூர் ,புதுத்துறை ,கோவில்ப்பத்து ) 40 ஆயிரம் பொற்காசுகளுக்கு விற்றதால் பிரெஞ்சிக்கரர்கள் முதன்முதலில் இப்பகுதியில் காலுன்றி ஆட்சி அமைக்க ஆரம்பித்தனர்.

கி.பி 1740 பிப்.12
 தஞ்சாவூர் மன்னன் பிரதாப்சிங் காரைக்காலை அடுத்த மேலும் 8 கிராமங்களை பிரெஞ்சுக் காரர்களுக்கு 60 ஆயிரம் பொற்காசுக்கு விற்றார் .(காரைக்கால் மாகாணம் ஏற்ப்பட்ட விபரம் இதுவே )

கி.பி 1749 டி .ச .18
 தஞ்சாவூர் ஆட்சியிலிருந்த தவுஸ்த்கான் பிரெஞ்சுகாரர்களிடம்  அடுத்த 4 மாகாணங்களை (81 கிராமங்களை) விற்றார்.
திருநள்ளார்  - 31 கிராமம்
நல்லழந்தூர்  - 13 கிராமம்
நெடுங்காடு -29 கிராமம்
கோட்டுச்சேரி - 8 கிராமம்

குறிப்பு :முதன்முதலில் திருநள்ளாற்றில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி ஏற்ப்பட்டது 1749 டி .ச .18 ஆகும் .

1760 மார்ச் 
 பிரெஞ்சுக் காரர்களிடம் இருந்து மேற்கூறிய 5 மாகணங்களையும் ஆங்கிலேயர் ஆக்கிரமித்துக் கொண்டனர் .அப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி ! (திருநள்ளார் உட்பட )

இந்தப் பதிவு வரலாற்றில் திருநள்ளாற்றுத் தர்ப்பாரண்யேசுரர் திருக்கோவில் ஓர் ஆய்வு வெளியீட்டு எண் -4 என்ற ஒரு நூலில் உள்ள கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது.

மேலும் இந்தப்பதிவு பகுதி இரண்டாக தொடரும்.

புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954



A Sunset at Karaikal


இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம்  (De - facto -merger  of  Pondicherry ) 1954 ஆம் வருடம்  நவம்பர் 1ஆம் நாளில் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் தலைமை ஆணையாராக கேவல்சிங் நியமிக்கப்பட்டார் இருப்பினும் அதிகார பூர்வமான சட்டமுறை மாற்றுதல் ஒப்பந்தம் (Treaty of Cession ) 1956ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளன்று இந்தியாவின் சார்பாக பண்டித ஜவஹர்லால் நேருவும் ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ,பிரஞ்சு குடியரசு தலைவருக்காக அதன் இந்திய தூதுவர் ஸ்தானிஸ் லாஸ் ஆஸ்ட்ரோக்கும் (Stansis Ostrog ) கையெழுத்திட இனிதே நிறைவேரியது.

1962 ஆம் வருடம் மே 27 ஆம் நாளில் இந்த ஒப்பந்தத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் உறுதிப்படுத்தியது.அதற்குப்பிறகு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் 1962 ஆம் வருடத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும்,பிரஞ்சு தூதர் ழான் போல் கார்திவேயும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெலுத்திட
புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது . அன்றிலிருந்து புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக (De -Jure ) இந்திய நாட்டில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.






அறிய வாய்ப்பு ! வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>

Related Posts Plugin for WordPress, Blogger...