தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
movie review லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
movie review லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்குயின் (Penguin) 2020 திரைவிமர்சனம் | Penguin 2020 movie full review

#Penguin (#பெண்குயின்) விமர்சனம்
===============

#Penguin (#பெண்குயின்) விமர்சனம்
===============
#one_woman_Army யாக ஒட்டுமொத்த படத்தையும் அதன் கதாநாயகி அவரது தோலில் சுமந்திருக்கிறார் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.படத்தின் ஒரு சில காட்சிகளில் இதுவரையில் நாம் தமிழ் #Thriller படங்களில் கண்டிராத அளவு புதுமையை காண முடிந்தது அந்த காட்சிகளை மேலும் மெருகேற்றும் விதமாக நாயகியின் எதார்த்தமான நடிப்பும் அமைந்திருப்பது சிறப்பு.

தெலுங்கில் #HIT என்கிற ஒரு திரில்லர் படம் உண்டு #Climax வரை மிக சிறப்பாக #கொலையாளி யார் என்கிற கேள்வியுடன் வேகமாக நகர்ந்து செல்லும் அந்த திரைப்படத்தின் இறுதியில் கொலையாளி யார் ? கொலைக்கான  காரணம் என்ன? என்பது தெரியவவருகையில் மிகவும் மொக்கையாக இருக்கும்.ஒரு கட்டத்தில் அந்த மாதிரியான ஒரு நிலையை இந்த படம் அடைந்துவிடுமோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றியப்பொழுது.நான் இருக்கிறேன்.... என்று #கதாநாயகி மீண்டும் ஒரு முறை கதையை இறுதிக்கட்டம் வரை நகர்த்தி சென்றிருக்கிறார் அது தான் இந்த படத்தின் வெற்றி.

Makingwise பார்க்கப்போனால் இயக்குனர் உண்மையான குற்றவாளி யார் என்று தெரியவருவதற்கு முன்பு ஆங்கில மற்றும் வங்காள மொழி படங்களில் வருவது போல் கேள்வி பதில் விளையாட்டு ஒன்றை காட்சியாக அமைத்து இருக்கிறார் அது Workout ஆகி இருக்கிறது.மேலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மேகங்கள் மூடிய #கொடைக்கானல் மலையின் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள் ,இயற்கை எழில் கொஞ்சும் ஏரி என அவைகளை நிழற்படக்கருவியில் காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது மேலும் அது படத்தின் #Thriller genre க்கும் உதவி புரிந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் இந்த #Penguin  படத்தின் வெற்றியை உறுதிசெய்த #பெண்_குயின் இந்த படத்தின் நாயகி தான்.

எனது Rating : 3/5

#Penguin_movie_review #penguin_review #பெண்குயின்_விமர்சனம்


கொடி- ஒரு நேர்மையான பார்வை

சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் ,காக்கிச்சட்டை என தொடர்ந்து இரு வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் கொடி.இதில் நடிகர் தனுஷ் முதல் முறையாக இரட்டையர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் கொடிக்கு முன்பு இயக்கிய இரண்டு திரைப்படங்களையும் தயாரித்தவர் தனுஷ் என்பது குறிப்பிடத் தக்கது.

திரைக்கதை :
எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தும் அரசியல் கட்சியின் தீவிர தொண்டனாக இருப்பவர் கருணாஸ் இவர் வாய் பேச முடியாதவர்.அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன அதில் ஒரு குழந்தைக்கு கொடி என பெயரிட்டு அரசியலுக்காகவே வளர்க்கிறார்.ஆனால் அது கொடியின் தாய் சரண்யாவுக்கு பிடிக்கவில்லை.இன்னொரு குழந்தையை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார் அந்த குழந்தையின் பெயர் அன்பு.ஊரில் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விளங்கிய ஒரு தொழிற்சாலையை மூடும் விவகாரத்துக்காக தன மகன் கண் முன்பே தீக்குளித்து மரணமடைகிறார் கருணாஸ்.அன்று முதல் அரசியலில் முழு ஆர்வத்துடன் களமிறங்கி கட்சி தலைவரின் நன்மதிப்பை பெறுகிறார் கொடி.மறுபுறம் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார் கொடியின் தம்பி அன்பு.திரிஷா எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தும் கட்சியின் எதிர்க்கட்சியில் சிறு வயது முதல் கொடியை போலவே தொண்டராக இருக்கிறார்.அந்த எதிர்க்கட்சியின் தலைவர் விஜயகுமார்.இருவரும் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் இருவருக்கும் சிறு வயது முதல் காதல் இருக்கிறது.மறுபுறம் கல்லூரி பேராசிரியர் அன்புக்கு பிராயிலர் கோழி முட்டையை நாட்டுக்கோழி முட்டை என ஏமாற்றி வியாபாரம் செய்யும் அனுபமா மீது காதல் ஏற்படுகிறது.அனுபமாகடன் பிரச்சனையில் தவிக்க அதனை தன் அண்ணன் கொடியின் உதவியுடன் தீர்த்து வைக்கிறார் அன்பு அப்பொழுது தான் அனுபமா கடன் வாங்கியதின் அவசியமும் காரணமும் தனுஷுக்கு தெரிய வருகிறது அது என்னவென்றால் கருணாஸ் தீக்குளித்தால் மூடப்பட்ட தொழிற்சலையில் உள்ள பாதரச கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் சிறு குழந்தைகள் முதல் பலருக்கு பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன.அவர்களின் மருத்துவ செலவிற்காகவே அனுபமா கடன் வாங்கியிருக்கிறார்.இதனை தெரிந்து கொண்ட அன்பு தன் அண்னன் கொடியின் உதவியுடன் அந்த கழிவுகளை அகற்ற எண்ணுகிறார்.கொடியும் இந்த விஷயத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கொண்டு செல்கிறார்.இந்த நேரத்தில் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிறது பல திட்டங்கள் தீட்டி தந்திரங்கள் செய்து விஜயகுமார் கட்சியின் வேட்பாளராகிறார் திரிஷா இந்நிலையில் அந்த பாதரச தொழிற்சாலை விவகாரத்தில் கட்சிக்குள் அரங்கேறும் பிரச்சனைகளால் வேறு வழியின்றி தனுஷை தன் கட்சி வேட்பாளராக அறிவிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். காதலர்கள் இருவரும் எதிரெதிராய் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இருவருக்கு இடையே ஏற்பாடு கருத்து வேறுபாடுகள்  அதிகமாகிக்கொண்டே போகிறது இதனிடையே கொடி கொல்லப்படுகிறார்.கொடியின் தம்பியான அன்பு கோடியாக மாறி தேர்தலில் வெற்றி பெறுகிறார் அதன் பின் கொடியை  செய்தவரை தேடி கண்டு பிடித்து பழிவாங்க நினைக்கிறார்.மறுபுறம் திரிஷா அரசியலில் மெம்மேலும் முன்னேறுகிறார்.யார் தன் அண்ணனை கொன்றது என்பதை அன்பு கண்டு பிடிக்கிறாரா ? அந்த பாதரச கழிவு தொழிற்சாலையை மூடினாரா ? என்பது தான் மீதும் உள்ள கதை.

விமர்சனம் :
தனுஷ் இரு கதாபாத்திரத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.அவசியம் ஒரு வெற்றி தேவை என்று களமிறங்கிய தனுஷுக்கு அது கிட்டி இருக்கிறது. காதலர்கள் இருவரும் எதிர் எதிர் கட்சிகளின் வேட்பாளர்கள் என்பது தமிழ் சினிமாவுக்கு புதிது.திரிஷாவின் கதாப்பாத்திரம் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டு உள்ளது பதிவிக்காக அவர் செய்யும் அரசியல்கள் அப்பப்பா..........அவரின் திரை பயணத்தில் இது இரு மைல் கல் என்றே சொல்லலாம்.திரைக்கதை முழுவதும் தனுஷ் மற்றும் திரிஷாவை சுற்றியே பயணிக்கிறது அதனால் மற்றவர்கள் குறைந்த அளவிலான காட்சிகளில் மட்டுமே தென் படுகிறார்கள்.இன்னொரு நாயகி அனுபமா அவருக்கு அதிகமான வாய்ப்பு கொடுக்கப் படவில்லை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.சரண்யா அவரை பற்றி சொல்லவா வேண்டும் அம்மா கதாப்பாத்திரத்துக்கு என்றே பிறந்தவர்.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு கதாப்பாத்திரம் பகத்சிங் காக வரும் காலி வெங்கட் அவருக்கு அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் தோன்றும் இடத்தில் எல்லாம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.திரைக்கதையை இறுதி வரை சலிப்பு தட்டாமல் கொண்டு சென்றதற்கே இயக்குனருக்கு கைத்தட்டல் வழங்கலாம்.

பன்ச் :கொடி - வெற்றியடைந்த ஆளும் கட்சியின் கொடி.

Related Posts Plugin for WordPress, Blogger...