தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
pondicherry லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pondicherry லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16-08-2017 இன்று 55 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் - 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மக்களும் நேற்று நாட்டின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் இன்று புதுச்சேரியில் இந்தியாவுடன் இணைந்த சட்ட பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் (16-08-1962) நாள் பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்து சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதனையடுத்து புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் பிராந்தியங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16ஆம் நாளை சட்டபூர்வ பரிமாற்ற நாளாக (De-Jure Day) அங்கீகரித்து புதுச்சேரி அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம்  (De - facto -merger  of  Pondicherry ) 1954 ஆம் வருடம்  நவம்பர் 1ஆம் நாளில் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் தலைமை ஆணையாராக கேவல்சிங் நியமிக்கப்பட்டார் இருப்பினும் அதிகார பூர்வமான சட்டமுறை மாற்றுதல் ஒப்பந்தம் (Treaty of Cession ) 1956ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளன்று இந்தியாவின் சார்பாக பண்டித ஜவஹர்லால் நேருவும் ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ,பிரஞ்சு குடியரசு தலைவருக்காக அதன் இந்திய தூதுவர் ஸ்தானிஸ் லாஸ் ஆஸ்ட்ரோக்கும் (Stansis Ostrog ) கையெழுத்திட இனிதே நிறைவேரியது.

1962 ஆம் வருடம் மே 27 ஆம் நாளில் இந்த ஒப்பந்தத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் உறுதிப்படுத்தியது.அதற்குப்பிறகு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் 1962 ஆம் வருடத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும்,பிரஞ்சு தூதர் ழான் போல் கார்திவேயும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெலுத்திட
புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது . அன்றிலிருந்து புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக (De -Jure ) இந்திய நாட்டில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.


புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதனை அடுத்து புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில அரசு சார்பில் பல முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது ஆயினும் நேற்று வரை பன்றிக்காய்ச்சலால் 3 பேர் உயிர் இழந்து விட்டதாக செய்தி வெளியானது இந்நிலையில் இன்று புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.தற்பொழுது வரை புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.






புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954



A Sunset at Karaikal


இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம்  (De - facto -merger  of  Pondicherry ) 1954 ஆம் வருடம்  நவம்பர் 1ஆம் நாளில் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் தலைமை ஆணையாராக கேவல்சிங் நியமிக்கப்பட்டார் இருப்பினும் அதிகார பூர்வமான சட்டமுறை மாற்றுதல் ஒப்பந்தம் (Treaty of Cession ) 1956ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளன்று இந்தியாவின் சார்பாக பண்டித ஜவஹர்லால் நேருவும் ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ,பிரஞ்சு குடியரசு தலைவருக்காக அதன் இந்திய தூதுவர் ஸ்தானிஸ் லாஸ் ஆஸ்ட்ரோக்கும் (Stansis Ostrog ) கையெழுத்திட இனிதே நிறைவேரியது.

1962 ஆம் வருடம் மே 27 ஆம் நாளில் இந்த ஒப்பந்தத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் உறுதிப்படுத்தியது.அதற்குப்பிறகு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் 1962 ஆம் வருடத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும்,பிரஞ்சு தூதர் ழான் போல் கார்திவேயும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெலுத்திட
புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது . அன்றிலிருந்து புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக (De -Jure ) இந்திய நாட்டில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.






அறிய வாய்ப்பு ! வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>

Related Posts Plugin for WordPress, Blogger...