26-04-2019 நேரம் காலை 10:55 மணி நேற்று இரவில் நேரலையில் நான் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் மட்டும் மழை மேகங்கள் பதிவாகி வருவதாக தெரிவித்து இருந்தேன் இன்றும் காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் #கோவை மாவட்டம் #வால்பாறை பகுதியை அடுத்த #சோலையாறு அணை பகுதியில் 16 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதே போல #குமரி மாவட்டம் #பெருஞ்சாணி அணை பகுதியிலும் கிட்ட தட்ட 8 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் ஓரிரு இடங்களை தவிர்த்து கடந்த 24 மணி நேரத்தில் அநேக பிற பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவி உள்ளது.இன்றும் இதே சுழல்களே தொடரும்.
26-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.
#சோலையாறு - #Solaiyar dam (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#பெருஞ்சாணி - #PERUNCHANI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
#சுரளக்கோடு - #SURALACODE (கன்னியாகுமரி மாவட்டம் ) - 5 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 5 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ
அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை (Well Marked Low Pressure Area) பொறுத்தவரையில் தற்பொழுது அதாவது இன்று காலை 9:00 மணி வாக்கில் பூமத்திய ரேகை அருகே உள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது.தற்பொழுது பல்வேறு மாதிரிகளும் அது வலு பெற்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி பின்னர் ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே வளைந்து (Re-Curve) செல்ல தொடங்கும் என்பதைப் போன்ற தகவல்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.நான் நேரலையில் தெரிவித்து இருந்தது போல அதனுடைய திசையை தீர்மானிப்பதில் அந்த உயர் அழுத்தத்தின் (High Pressure) சுழற்சி முக்கிய பங்காற்றுகிறது.
அது எந்த அளவுக்கு அது தமிழகத்துக்கு நெருக்கமாக வருகிறதோ அந்த அளவுக்கான மழை தமிழகத்தில் பதிவாகலாம்.இன்னமும் எதுவும் முடிந்து விட வில்லை.எதையும் உறுதி செய்வதற்கு முன் நாளை வரை காத்திருக்கவும்.
கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகளை குறிப்பிட தான் இந்த பதிவை பதிவிட்டேன்.அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பாகவும் தமிழகத்திற்கான மழை சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.
அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.
26-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.
#சோலையாறு - #Solaiyar dam (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#பெருஞ்சாணி - #PERUNCHANI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
#சுரளக்கோடு - #SURALACODE (கன்னியாகுமரி மாவட்டம் ) - 5 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 5 மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ
அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை (Well Marked Low Pressure Area) பொறுத்தவரையில் தற்பொழுது அதாவது இன்று காலை 9:00 மணி வாக்கில் பூமத்திய ரேகை அருகே உள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது.தற்பொழுது பல்வேறு மாதிரிகளும் அது வலு பெற்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி பின்னர் ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே வளைந்து (Re-Curve) செல்ல தொடங்கும் என்பதைப் போன்ற தகவல்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளன.நான் நேரலையில் தெரிவித்து இருந்தது போல அதனுடைய திசையை தீர்மானிப்பதில் அந்த உயர் அழுத்தத்தின் (High Pressure) சுழற்சி முக்கிய பங்காற்றுகிறது.
அது எந்த அளவுக்கு அது தமிழகத்துக்கு நெருக்கமாக வருகிறதோ அந்த அளவுக்கான மழை தமிழகத்தில் பதிவாகலாம்.இன்னமும் எதுவும் முடிந்து விட வில்லை.எதையும் உறுதி செய்வதற்கு முன் நாளை வரை காத்திருக்கவும்.
கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகளை குறிப்பிட தான் இந்த பதிவை பதிவிட்டேன்.அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பாகவும் தமிழகத்திற்கான மழை சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.
அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.