தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
thirunallar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thirunallar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19-12-2017 திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி திருவிழா - பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பொருட்கள் வழங்க தடை

வருகின்ற 19-12-2017 (2017 டிசம்பர் 19) ஆம்  தேதி அன்று காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தை சார்ந்த ஸ்ரீ  தர்பாரான்யேஸ்வரர் கோயிலின் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட உள்ளது.திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி திருவிழா முக்கிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது அத்திருவிழாவு நடைபெறும் சமையத்தில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வருகை தருவர்.தற்போதிலிருந்தே ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருநள்ளாறுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது சமீப நாட்களாக நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களும் ,திரை நட்சத்திரங்களும் ,விளையாட்டு வீரர்களும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சிக்கு வருகை புரிந்து வருவதால் அங்கு பாதுகாப்பது ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 நிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறில் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அப்பொழுது பேசிய கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம் , லட்சக்கணக்கான பகதர்கள் வருகைதருவார்கள் என்பதால் கடந்த சில மாதங்களாக பல முன்னேற்பாடு பணிகள்  கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் பக்தர்களுக்கு போதுமான கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது .சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நளன் குளம் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தங்கும் அறைகள் தயாராக உள்ளது.கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் 125 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி தனியார்கள் அன்னதானம் மற்றும் பொருட்கள் வழங்குவதற்கு அனுமதி வழங்குவதில்லை என  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


04-06-2017 அன்று திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் கோயில் தேரோட்டம்

வருகின்ற 04-06-2017 (ஜூன் 4) ஆம் தேதி திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தின்  பிரமோத்ஸவ விழா தொடங்கியுள்ளதை ஒட்டிய ஐந்து தேரோட்டம் நடைபெற உள்ளது.கடந்த 21-05-2017 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் பிராதான நிகழ்ச்சியான தேரோட்டத்தில் அம்பாள் வீற்றிருக்கூடிய பெரிய இரண்டு தேர்கள் மற்றும் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ சண்டிகேசுவரர்,ஸ்ரீ சுப்ரமணியர் ஆகியோர் வீற்றிருக்கக் கூடிய தனித்தனி தேர்கள் என மொத்தம் ஐந்து தேர்களின் தேரோட்டம் நடைபெற உள்ளது.அதற்காக அந்த ஐந்து தேர்களையும் அலங்கரிக்கும் பனி தற்பொழுது திருநள்ளாறில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருநள்ளாறு சனி பகவான் ஆலயம் இந்திய  அளவில் புகழ் பெற்ற ஒரு ஸ்தலம் என்றே சொல்லலாம் . இந்த ஆண்டு இறுதியில் சனிப்பெயர்ச்சி நடைபெற இருப்பதால் நாட்டின் பல முக்கிய அரசியல் தலைவர்களும்,சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் இங்கு தற்பொழுதே வருகைபுரிய தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பிரமோத்ஸவத்தை ஒட்டிய தேரோட்டமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் ஆலயத்தில் 24-05-2017 அன்று கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் எந்த பாதிப்பும் இல்லை -பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்யலாம்

கடந்த 24-05-2017 அன்று உலக புகழ் பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் ஆலயத்தின் முன் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.அந்த விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் அச்செய்தி காட்டுத் தீபோல் பரவியது.வெளியூர்களில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து இங்கு வரும் ஏராளாமான மக்கள் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் ஆலயத்தில் தரிசனம் செய்து செல்வது வழக்கம்.நேற்று முன் தினம் காட்டுத் தீப்போல் பரவிய அந்த தீ விபத்து செய்தியால் வெளியூர் பயணிகள் குழப்பத்தில் இருந்து வந்தனர் இந்நிலையில் கோயிலின் முன் பகுதியில் ஏற்பட்ட அந்த தீ விபத்தால் கோயிலின்  பிற பகுதிகளில் எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் தற்போது கோயிலில் வருடாந்திர பிரமோத்சவம் நடைபெற்று வருவதாகவும் பக்தர்கள் வழக்கம் போல கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம் எனவும் கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


24-05-2017 திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் ஆலய அலுவலகத்தில் தீவிபத்து

24-05-2017 இன்று காரைக்கால் மாவட்டத்தின் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் ஆலய நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் தற்பொழுது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து அரங்கேறியிருப்பதாக கூறப்படுகிறது.

காரைக்காலில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் ஆலயத்தின் சனிப்பெயர்ச்சி திருவிழா இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.அதனால் வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருநள்ளாறுக்கு வரும் பக்த்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.சனிப்பெயற்சிக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மின் கசிவால் ஆலய நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

25-05-2017 திருநள்ளாறு தேவஸ்தானத்தின் முன் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் 24-05-2017 அன்று தீ விபத்து ஏற்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருநள்ளாறு சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

பிரெஞ்சுக் காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்து 1954ஆம் ஆண்டு விடுதலைப் பெற்று பிறகு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் நகரில் இருந்து வெறும் ஐந்தே கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் திருநள்ளாறு.

திருநள்ளாற்றின் சிறப்பு அங்குள்ள சணி பகவான் ஆலயம் அங்கு எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்.


திருநள்ளார் சணி பகவான் ஆலயம்

திருநள்ளார் சணி பகவான் ஆலயம்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்
திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்
திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்
திருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்

திருநள்ளார் சணி பகவான் ஆலயம்
திருநள்ளார் சணி பகவான் ஆலயம்

திருநள்ளார் சணி பகவான் ஆலயம்
திருநள்ளார் சணி பகவான் ஆலயம்

திருநள்ளார் சணி பகவான் ஆலயம்
திருநள்ளார் சணி பகவான் ஆலயம்


பிரெஞ்சிந்திய அரசு ஆட்சிக் காலத்தில் திருநள்ளார் (பகுதி - II) | Thirunallar in French-Indian Government (Part-II)

சென்ற பகுதியிலே 1760 மார்ச் வரை நடந்த வரலாற்று முக்கிய நிகழ்வுகளை பார்த்தோம்.இதோ அதனுடைய தொடர்ச்சி இந்தப் பகுதியிலே.

1765
 காரைக்கால் மாகணத்தை மட்டில் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர்.

1778
காரைக்கால் மாகணத்தை ஆங்கிலேயர் மீண்டும் கைப்பற்றினர்.

1785 பிப். 26
காரைக்காலைச் சேர்ந்த 5 மாகானங்களும், பிரெஞ்சுக்காரர்கள்வசம் மீண்டும் வந்தன !

1793 சூன் மாதம் 
காரைக்காலைச் சேர்ந்த 5 மாகனங்களையும் அங்கிலேயர் மீண்டும் ஆக்கிரமித்து கொண்டனர் .(ஆங்கிலேய ஆட்சி திருநள்ளார் உட்பட ).

1817 சன. 14
(ஈஸ்வர ஆண்டுத் தைப் பொங்கல் அன்று ) இறுதியாக காரைக்காலைச் சேர்ந்த 5 மாகானங்களும் (திருநள்ளார் உட்பட ) பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன .இதிலிருந்து ஒரு நிலையான பிரெஞ்சிந்திய அரசு 1962 ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை இங்கு தொடர்ந்து நடை பெற்றுள்ளது .(சுமார் 145 ஆண்டு 7 மாதம் 2 நாள் )

இந்நிலையில் ,1817 ஆம் ஆண்டு முதல் ,பிரெஞ்ச் இந்தியாவில் ,பிரெஞ்சு நாட்டு சட்டங்கள் தேவைக்கேற்ப இங்கே பிரகடனப்படுத்தப்பட்டு அமுலாக்கப்பட்டன .

இந்தப் பதிவு வரலாற்றில் திருநள்ளாற்றுத் தர்ப்பாரண்யேசுரர் திருக்கோவில் ஓர் ஆய்வு வெளியீட்டு எண் -4 என்ற ஒரு நூலில் உள்ள கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது.

Summary : The History of Thirunallar during Frenchindian government.

பிரெஞ்சிந்திய அரசு ஆட்சிக் காலத்தில் திருநள்ளார் (பகுதி - I )

கி.பி 1817 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் அன்றிலிருந்து திருநள்ளாற்றில் ஒரு நிலையான பிரஞ்சிந்திய ஆட்சி ஏற்ப்பட்டு பிரெஞ்சு நாட்டு சட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக எங்கு செயல் முறைக்கு வந்தன.திருனள்ளாறு உட்பட அனைத்துக் காரைக்கால் பிரதேசமும் பிரெஞ்சு ஆட்சிக்கு மாறிவந்தது ஒரு நீண்ட நெடிய வரலாறு அதன் சுருக்கம் கீழே .

கி.பி 1739 பிப்.14
 தஞ்சாவூர் மன்னன் சகாஜி ,புதுச்சேரிக் கவர்னர் துய்மா (DUMAS) விடம் காரைக்கலையும் ,கருக்களாச்சேரி கோட்டையையும் ,அத்துடன் 5 கிராமங்களையும் (திருமலைராயன் -பட்டினம் ,கீழையூர் ,மேலையூர் ,புதுத்துறை ,கோவில்ப்பத்து ) 40 ஆயிரம் பொற்காசுகளுக்கு விற்றதால் பிரெஞ்சிக்கரர்கள் முதன்முதலில் இப்பகுதியில் காலுன்றி ஆட்சி அமைக்க ஆரம்பித்தனர்.

கி.பி 1740 பிப்.12
 தஞ்சாவூர் மன்னன் பிரதாப்சிங் காரைக்காலை அடுத்த மேலும் 8 கிராமங்களை பிரெஞ்சுக் காரர்களுக்கு 60 ஆயிரம் பொற்காசுக்கு விற்றார் .(காரைக்கால் மாகாணம் ஏற்ப்பட்ட விபரம் இதுவே )

கி.பி 1749 டி .ச .18
 தஞ்சாவூர் ஆட்சியிலிருந்த தவுஸ்த்கான் பிரெஞ்சுகாரர்களிடம்  அடுத்த 4 மாகாணங்களை (81 கிராமங்களை) விற்றார்.
திருநள்ளார்  - 31 கிராமம்
நல்லழந்தூர்  - 13 கிராமம்
நெடுங்காடு -29 கிராமம்
கோட்டுச்சேரி - 8 கிராமம்

குறிப்பு :முதன்முதலில் திருநள்ளாற்றில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி ஏற்ப்பட்டது 1749 டி .ச .18 ஆகும் .

1760 மார்ச் 
 பிரெஞ்சுக் காரர்களிடம் இருந்து மேற்கூறிய 5 மாகணங்களையும் ஆங்கிலேயர் ஆக்கிரமித்துக் கொண்டனர் .அப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி ! (திருநள்ளார் உட்பட )

இந்தப் பதிவு வரலாற்றில் திருநள்ளாற்றுத் தர்ப்பாரண்யேசுரர் திருக்கோவில் ஓர் ஆய்வு வெளியீட்டு எண் -4 என்ற ஒரு நூலில் உள்ள கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது.

மேலும் இந்தப்பதிவு பகுதி இரண்டாக தொடரும்.

திருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் (தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி )ஆலயம்

 திருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம் திருநள்ளார் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது.

திருநள்ளார் பெயர்க்காரணம்

திரு +நள +ஆறு =திருநள்ளார்.

நிடதநாட்டு அரசனான நளன் சனிஸ்வர பகவானின் துன்பப்பிடியில் இருந்து தன்னை விடுவிக்கும்மாறு    இங்கு உள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினார். அதனால் சனிஸ்வர பகவான் அவரை தனது துன்பப்பிடியில் இருந்து விடுவித்தார்  'நள' என்ற சொல் நளன் மகாராஜாவை குறிக்கிறது.'ஆறு' என்ற சொல் இயற்கையான ஒரு நீரோட்டத்தை குறிக்கிறது.'திரு ' என்பது ஒரு மரியாதைக்குரிய சொல்லாகும்.இவை மூன்றும் இணைந்து 'திருநள்ளார்' என்ற பெயர் பெற்றது.இது முன்னாளில் ஆதிபுரி,தர்ப்பாரண்யம், நாகவிடங்கபுரம்,  நலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.


 அதெல்லாம் சரி நளன் மகாராஜாவை சணீஷ்வரன் ஏன் துன்பப்படுத்த வேண்டும் அதற்கு காரணம்.'தமயந்தி' என்னும் இளவரசியை மணக்க தேவர்கள் கலந்துக்கொண்ட ஒரு சுயம்வரத்தில்.தமயந்தி தேவர்களை தவிர்த்து நளனை மணந்தால் இதனால் ஆத்திரம் அடைந்த தேவர்கள் சனிஸ்வரனிடம் சென்று நளனை துன்பப்படுத்துமாறு முறையிட்டனர் அவரும் துன்பப்படித்தினார்.

திருநள்ளார்

திருநள்ளார் கொம்யூன்  பஞ்சாயத்  காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ  தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்றவுடன் நம் நினைவில் வந்து நிர்ப்பது சணிஈஷ்வரன் கோவில் தான்.

திருநள்ளாறு செல்லும் வழி.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து  பயணம் மேற்கொள்ளும் பொழுது காரைக்கால் வழியாக திருநள்ளாற்றை அடைவதே சரியாக இருக்கும்.

சென்னை ------புதுச்சேரி----கடலூர் ----சிதம்பரம் ---சீர்காழி ---காரைக்கால் ---திருநள்ளார்.

இவ்வழியாக பயணம் செய்யும் பொழுது 302 கிமீ தூரத்தினை நாம் கடக்க வேண்டும் .சீர்காழயில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் பூம்புகார் ,தரங்கம்பாடி போன்ற சுற்றுலா தளங்களையும் பார்வையிடலாம் அனால் அந்த சாலை சற்று சரிவர இருக்காது.சென்னையில் இருந்து திருநள்ளார் வருவதற்கு இன்னும் ஒரு சிறந்த வழியும் உண்டு அது சீர்காழயில்இருந்து மயிலாடுதுறை வழியாக பயணிப்பது.

சென்னை ------புதுச்சேரி----கடலூர் ----சிதம்பரம் ---சீர்காழி ---மயிலாடுதுறை  ---திருநள்ளார்.


திருச்சியில் இருந்து திருநள்ளாறு செல்லும் வழி.

திருச்சி ---தஞ்சாவூர் ---கும்பகோணம் ---திருநள்ளார் 

 கும்பகோணத்தில் இருந்து திருநள்ளார் செல்லும் வழியில் நாம் மேலும் சில முக்கிய கோவில்களை பார்க்க முடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...