தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
upcoming week லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
upcoming week லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

05-08-2018 நேரம் நண்பகல் 12:00 மணி தற்பொழுது வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 06-08-2018 அல்லது 07-08-2018 ஆம் தேதிகளில் அது வலுப்பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவெடுக்கலாம் அவ்வாறு வலுவடைந்து மேற்கு -வட மேற்கு திசையில் அது நகரத் தொடங்கும் பட்சத்தில் கர்நாடகா ,கோவா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை  பகுதிகளில் குறிப்பாக இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் மேலும் இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு .ஒருவேளை அந்த காற்றளுத்த தாழ்வு நிலையானது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து வலு குறைந்த நிலையில் வட மத்தியபிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளை நெருங்க முற்படும் பட்சத்தில் தமிழகத்துக்கு சாதகமான சூழலாக அமையலாம் இதன் காரணமாக 08-08-2018 அல்லது 09-08-2018 ஆம் தேதிகளில் தமிழக வட கடலோர ,வட மற்றும் உள் ,தென் உள் மாவட்டங்களில் நல்ல வலுவான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து வரக்கூடிய வாரத்தின் பிற வர நாட்களிலும் தமிழகத்தில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வட இந்திய மாநிலங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க கூடும் எந்தெந்த மாநிலங்களில் எப்பொழுது மழையின் அளவு அதிகரிக்கலாம் எனபது தொடர்பான தகவல்களை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.அதே சமயம் 10-08-2018 பிறகு மீண்டும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் வங்கதேசம் அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் 13-08-2018  - 14-08-2018 அல்லது அதற்கு பிறகு வட வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக இந்த மாதத்தின் மத்திய நாட்கள்களில் அதாவாகிது 15-08-2018 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழையானது மீண்டும் தீவிரமடைய தொடங்கலாம். மும்பை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள அநேக கடலோர பகுதிகளிலும் அதன் பின் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்கலாம்.

மேடன் -ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation) ஆனது தற்பொழுது அதன் 7வது கட்டத்தில் உள்ளது ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் அதாவது 15-08-2018க்கு பிறகு 17-08-2018 அல்லது 18-08-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய இரண்டாவது கட்டத்துக்கு சற்று வலு குறைந்த வீச்சு அளவுடன் வரலாம்.இது தென்மேற்கு பருவமழைக்கு சாதகமாக அமையலாம்.மேலும் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எல்நினோ தெற்கு அலைவு மற்றும் இந்திய பெருங்கடல் இருமுனை ஆகிய இரண்டுமே அதனுடைய நடுநிலையான கட்டத்தில் உள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்திலும் இந்த நிலையில் மாற்றங்கள் எதுவும் இருக்கப்போவது இல்லை.

நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது நிலவி வரும் வானிலை சூழல்களை அடிப்படையாக கொண்ட ஒரு கணிப்பு தான்.இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT


Related Posts Plugin for WordPress, Blogger...