தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
weather forecast லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
weather forecast லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாகிய மழை அளவுகளின் பட்டியல்

23-04-2019 நேரம் காலை 11:10 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேரு இடங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு வெப்பசலன மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #சேலம் மாவட்டம் #ஆத்தூர் சுற்றுவட்டப் பகுதிகளில் 99 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதேபோல #திருவண்ணாமலை மாவட்டம் #பூண்டி அருகே உள்ள #கலசப்பாக்கம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 74 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று திருவண்ணாமலை நகர பகுதியிலும் 51 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது 23-04-2019 ஆகிய இன்று தமிழக மேற்கு ,மேற்கு உள் ,தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் இது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.

23-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

ஆத்தூர்  (சேலம் மாவட்டம் ) - 99 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 74 மி.மீ
#மஞ்சளாறு (திண்டுக்கல் மாவட்டம் ) - 73 மி.மீ
#பெரியகுளம் (தேனி மாவட்டம் ) - 63 மி.மீ
#தம்மாம்பட்டி (சேலம் மாவட்டம் ) - 58 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 56 மி.மீ
#ஹொக்கேனக்கல் (தர்மபுரி மாவட்டம் ) - 55 மி.மீ
#கனங்கவல்லி (சேலம் மாவட்டம் ) - 52 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 51 மி.மீ
#திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 51 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 50 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 50 மி.மீ
#உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம் ) - 50 மி.மீ
#தானியமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 45 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 44 மி.மீ
#தென்காசி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 42 மி.மீ
கொப்பம்பட்டி (திருச்சி மாவட்டம் ) - 42 மி .மீ
#இடையப்பட்டி  (மதுரை மாவட்டம் ) - 41 மி.மீ
செங்கோட்டை  (திருநெல்வேலி மாவட்டம் ) - 41 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 40 மி.மீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 40  மி.மீ
ஆயிக்குடி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 39 மி.மீ
#போளூர்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 37 மி.மீ
#கொடைக்கானல்  (திண்டுக்கல் மாவட்டம் ) - 38 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம் ) - 34 மி.மீ
#தண்டராம்பட்டு  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 34 மி.மீ
#காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் )  - 33 மி.மீ
#ஊத்தாங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 33 மி.மீ
சத்ரபதி - #ஓட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 33 மி.மீ
காங்கேயம் (திருப்பூர் மாவட்டம் ) - 32 மி.மீ
தென்பறநாடு (திருச்சி மாவட்டம் ) - 32 மி .மீ
#பீளமேடு - கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 31 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 29 மி.மீ
#மேலூர் (மதுரை மாவட்டம் ) - 24 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
RS மங்களம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 24 மி.மீ
#ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 23  மி.மீ
#ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) - 22 மி.மீ
#காட்டுக்குப்பம்  - #காட்டாங்குளத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் )  - 21 மி.மீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 20 மி.மீ
#திருபுவனம் (சிவகங்கை மாவட்டம் ) - 20 மி.மீ
#பென்னாகரம்  (தர்மபுரி மாவட்டம் ) - 20 மி.மீ
#கடவானூர்  - #தடினதம் (விழுப்புரம் மாவட்டம் ) - 19 மி.மீ
பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
தொட்டபெட்டா , உதகை  (நீலகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
கரியாக்கோயில் அணை  - #பாப்பநாயக்கன்பட்டி (சேலம் மாவட்டம் ) - 19 மி.மீ
#திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 18 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம் ) - 18 மி.மீ
#திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#ஆணைமடவுஅணை (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 17 மி.மீ
தர்மபுரி  (தர்மபுரி மாவட்டம் ) - 17 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
வால்பாறை (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
ஏறுடையம்பட்டு  (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
தென்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
போடிநாயக்கனுர் (தேனி மாவட்டம் ) - 15 மி.மீ
புலிவலம் (திருச்சி மாவட்டம் ) - 15 மி .மீ
திருப்பத்தூர்  (சிவகங்கை மாவட்டம் ) - 14 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
தட்ஐங்கார்பேட்டை (திருச்சி மாவட்டம் ) - 14 மி .மீ
கிண்ணக்கொரை (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
புர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#திருக்கோயிலூர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 11 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம் ) - 11 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 11 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
டேனிஷ்பேட் - #DANISHPET (சேலம் மாவட்டம் ) - 10 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ
தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
பாலக்கோடு  (தர்மபுரி மாவட்டம் ) - 10 மி.மீ
பெருந்துறை  (ஈரோடு மாவட்டம் ) - 10 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 9 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
கெத்தி - #GEDDAI (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
சங்கராபுரம்  (விழுப்புரம் மாவட்டம் ) - 8 மி.மீ
காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 8 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
திண்டுக்கல்  (திண்டுக்கல் மாவட்டம் ) - 8 மி.மீ
அணைப்பாளையம்  (கரூர் மாவட்டம் ) - 8 மி.மீ
கொடுமுடி  (ஈரோடு மாவட்டம் ) - 8 மி.மீ

நான் கடந்த 24 மணி நேரத்தில் 8 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளை மேலே பதிவிட்டு உள்ளேன்.இவைதவிர்த்து உங்களது பகுதியின் மழை ளவை அறிய விரும்பினால் உங்களது ஊர்களின் பெயரை Comment செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


14-04-2019 இன்று முதல் தொடங்கிய வாரத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?

14-04-2019 நேரம் காலை 10:45 மணி  எனது கடந்த பதிவில்  நான் குறிப்பிட்டு இருந்தது போல  நிகழும் வாரத்தின் மத்திய வார நாட்களில் தமிழகத்தின் மேற்கு உள் ,மேற்கு மற்றும் தென் உள் மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 17-04-2019 அல்லது 18-04-2019 ஆம் தேதிகள் முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சில மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.மழை பதிவாக தொடங்கியதும் மழைக்கு வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

தற்போது மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கத்தால் #ஈரான் அருகே வளிமண்டலத்தின் மேலடுக்கில் குறைந்த காற்றழுத்தம் நிலவி வருகிறது இம்முறை இது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தானை கடந்து ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதிகளை அடைய முற்பட்டு வலுவிழக்கும் இதன் காரணமாக இமய மலை பகுதிகளில் அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.மேற்கத்திய கலக்கத்தின் (Western Disturbance) தாக்கம் வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் 18-04-2019 ஆம் தேதி முதல் குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

பகல் நேர வெப்பநிலையை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வெப்பம் அதிகரித்து இருக்கவே வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #வேலூர் , #திருச்சி  , #ஈரோடு  , #சேலம் ,#நாமக்கல் ,#தர்மபுரி ,#மதுரை , #விருதுநகர் ,#பெரம்பலூர் ,#அரியலூர் ,#தஞ்சை ,#கரூர் ,திருப்பூர் மாவட்டங்களிலும் #காஞ்சிபுரம் ,#விழுப்புரம் மற்றும் #திருவள்ளூர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் #திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம்.#கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் பகல் நேரத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் 101 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு அதிகமான அளவு வெப்பம் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.வெப்பநிலை தொடர்பாக இனி வரக்கூடிய நாட்களில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.


மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) தற்போது அதன் இரண்டாவது  கட்டத்தில் 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலு குறைந்து உள்ளது அடுத்து வரக்கூடிய 2 அல்லது 3 நாட்களில் இதன் வலு மேலும் குறைய தொடங்கலாம் 20-04-2019 ஆம் தேதி வாக்கில் அதன் வலு சற்று அதிகரிக்க தொடங்கி 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் அதன் இரண்டாவது கட்டத்திலேயே (Phase 2) நிகழும் வாரத்தில் அது தொடரலாம்.

எல்-நினோ தெற்கு அலைவு
------------------------------------------
தற்போது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.9 °C வெப்பமும் மேற்கு பகுதியான நினோ 4 பகுதியில் 0.8 °C வெப்பமும் கடந்த வாரம் பதிவாகி யுள்ளது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பசிபிக் கடல் பரப்பின் மத்திய மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளின் வெப்பம் இயல்பை விட அதிகரித்துள்ளது அதே சமயம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தோனேசியா அருகே உள்ள பசிபிக் கடலின் மேற்கு பகுதிகளில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட குறைவாக உள்ளது.தற்போது பசிபிக் கடல் பரப்பில் எல் நினோவுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன இதன் வலு குறைந்து ஒரு பலவீனமான எல்நினோ வுக்கான சூழல்கள் இந்த ஆண்டின் நிகழும் இளவேனிற்கலாம் முழுவதும் தொடர 80% வாய்ப்புகள் உள்ளதாக NCEP இன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby

இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை அருகே உள்ள மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இடையிலான வெப்பநிலை வேறுபாட்டை அடிப்படையாக கொண்ட Indian Ocean Dipole தற்போது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT


அனைவருக்கும் எனது சித்திரைத் திருநாள் / தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


05-08-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

05-08-2018 நேரம் நண்பகல் 12:00 மணி தற்பொழுது வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 06-08-2018 அல்லது 07-08-2018 ஆம் தேதிகளில் அது வலுப்பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவெடுக்கலாம் அவ்வாறு வலுவடைந்து மேற்கு -வட மேற்கு திசையில் அது நகரத் தொடங்கும் பட்சத்தில் கர்நாடகா ,கோவா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை  பகுதிகளில் குறிப்பாக இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் மேலும் இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு .ஒருவேளை அந்த காற்றளுத்த தாழ்வு நிலையானது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து வலு குறைந்த நிலையில் வட மத்தியபிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளை நெருங்க முற்படும் பட்சத்தில் தமிழகத்துக்கு சாதகமான சூழலாக அமையலாம் இதன் காரணமாக 08-08-2018 அல்லது 09-08-2018 ஆம் தேதிகளில் தமிழக வட கடலோர ,வட மற்றும் உள் ,தென் உள் மாவட்டங்களில் நல்ல வலுவான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து வரக்கூடிய வாரத்தின் பிற வர நாட்களிலும் தமிழகத்தில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் வட இந்திய மாநிலங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க கூடும் எந்தெந்த மாநிலங்களில் எப்பொழுது மழையின் அளவு அதிகரிக்கலாம் எனபது தொடர்பான தகவல்களை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.அதே சமயம் 10-08-2018 பிறகு மீண்டும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் வங்கதேசம் அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் 13-08-2018  - 14-08-2018 அல்லது அதற்கு பிறகு வட வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக இந்த மாதத்தின் மத்திய நாட்கள்களில் அதாவாகிது 15-08-2018 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழையானது மீண்டும் தீவிரமடைய தொடங்கலாம். மும்பை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள அநேக கடலோர பகுதிகளிலும் அதன் பின் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்கலாம்.

மேடன் -ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation) ஆனது தற்பொழுது அதன் 7வது கட்டத்தில் உள்ளது ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் அதாவது 15-08-2018க்கு பிறகு 17-08-2018 அல்லது 18-08-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய இரண்டாவது கட்டத்துக்கு சற்று வலு குறைந்த வீச்சு அளவுடன் வரலாம்.இது தென்மேற்கு பருவமழைக்கு சாதகமாக அமையலாம்.மேலும் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எல்நினோ தெற்கு அலைவு மற்றும் இந்திய பெருங்கடல் இருமுனை ஆகிய இரண்டுமே அதனுடைய நடுநிலையான கட்டத்தில் உள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்திலும் இந்த நிலையில் மாற்றங்கள் எதுவும் இருக்கப்போவது இல்லை.

நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போது நிலவி வரும் வானிலை சூழல்களை அடிப்படையாக கொண்ட ஒரு கணிப்பு தான்.இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT


01-07-2018 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

01-07-2018 நேரம் பிற்பகல் 1:20 மணி இன்றும் தமிழக உள் மற்றும் வட மாவட்டங்களில் ஆங்காங்கே நல்ல வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு நேற்றை போலவே இன்றும் சில மாவட்டங்களில் பரவலான மழை பதிவாகலாம்.மேலும் 01-07-2018 ஆகிய இன்று நண்பகல் முதலே தமிழகத்தில் மழை மேகங்கள் பதிவாக தொடங்கிவிட்டன தற்பொழுது கடலூர் ,விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருகின்றன.மேலும் இன்று மேற்கு திசை காற்றின் வீரியம் தமிழக தென் உள் மாவட்டங்களில் மிகவும் குறைந்து காணப்படுவதால் நேற்றை போலவே இன்றும் மதுரை ,சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு அருகே வெவ்வேறு திசை காற்று குவிய தொடங்கலாம் இதன் காரணமாக சிவகங்கை ,விருதுநகர் ,ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் அதேபோல புதுக்கோட்டை ,தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு  - உள்ளிக்கோட்டை-மன்னார்குடி  இடையே உள்ள பகுதிகளில் ஓரளவு நல்ல மழை பதிவாகலாம் மேலும் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை வேளையில் வட கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழைக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.மேலும் இன்று இவேலூர் ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

01-07-2018 ஆகிய இன்றும் புதுச்சேரி மாவட்டத்திலும்  சில இடங்களில் மழை பதிவாகலாம்.மேலும் வழக்கம்போல நீலகிரி உட்பட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழை பதிவாகலாம்.திருப்பூர் ,கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தின் வட பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.தர்மபுரி ,பெரம்பலூர் ,அரியலூர் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

01-07-2018 ஆகிய இன்றும் பிற்பகல் வேளையில் பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகரித்தே இருக்கும் மணிக்கு  25 கி.மீ வேகத்தில் காற்று வீசி வரக்கூடும் சில நேரங்களில் மணிக்கு 55 கி.மீ வரையிலும் காற்று வேகம் எடுக்கலாம் கரூர் மற்றும் பாம்பன் பகுதிகளில் இதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்படலாம்.


01-07-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவுகள்  பட்டியலின் படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் 120 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதே போல புதுக்கோட்டை பகுதியில் 107 மி.மீ அளவு மழையும் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மற்றும் விருதுநகர் பகுதிகளில் கிட்டத்தட்ட 100 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது அதே போல புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் கிட்டத்தட்ட 80 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

திருச்சி நகரம் (திருச்சி மாவட்டம் )  - 74 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 72 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 55 மி.மீ
திருச்சி விமான நிலையம் (திருச்சி மாவட்டம் ) - 47 மி.மீ
விருதுநகர் AWS (விருதுநகர் மாவட்டம் ) - 43 மி.மீ

அணைத்து பகுதிகளின் மழை அளவுகளையும் இங்கு பதிவிடுவது கடினம் உங்கள் பகுதியின் மழை அளவை அறிய விரும்பினால் நமது பக்கத்திற்கு Message செய்யுங்கள்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

21-05-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்?

21-05-2018 நேரம் பிற்பகல் 3:00 மணி நான் கடந்த எனது பதிவில் குறிப்பிட்டு  இருந்தது போல தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த அந்த மேலடுக்கு சுழற்சியானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  வலு பெற்றது.அது தொடர்பான செயற்கைகோள் புகைப்படங்களையும் இந்த பதிவுடன் இணைக்கிறேன்.அது தற்போது மேலும் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது அடுத்து  வரக்கூடிய நாட்களில் அது  ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று ஏமன் நாட்டு தென்கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து செல்ல முற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மேடன் ஜூலியன் அலைவும் (MJO) தற்பொழுது அதன் ஒன்றாவது கட்டத்தில் ஒன்றுக்கும் அதிகமான வீச்சு அளவை கொண்டு இருப்பதால் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைவதில் அதுவும் பங்காற்றுகிறது . இதன் காரணமாக அது ஒரு புயலாக உருவெடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.ஆனால் இதனால் தமிழகத்துக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது.அதே போல இதன் காரணமாக நேரடியான மழை வாய்ப்புகள் என்றும் எதுவுமே தமிழகத்துக்கு கிடையாது.இன்னும் சொல்லப்போனால் நான் தொடர்ந்து பதிவிட்டு வருவதைப்போல இனி அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தொடர்பான கதை நமக்கு அவசியமற்றது.

இலங்கைக்கு தென் கிழக்கே தற்பொழுது வலு குறைந்த மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது இதன் காரணமாகவும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேற்கு திசை காற்று வலு பெற்று வருவதாலும் குமரிக்கடல் ,தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து வருகின்றன இதுவும் பருவமழை தொடங்க இருப்பதற்கான அறிகுறிகள் தான்.இன்று முதல் அடுத்து வரக்கூடிய நாட்களில் இலங்கையின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் தொடர்ந்து கரூ மேகங்களை சூழ்ந்து அப்பகுதிகளில் பருவமழை தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கலாம் இந்திய வானிலை ஆய்வு மையம் எதிரிபார்த்து இருந்ததைப் போன்றே இன்னும் இரண்டு நாட்களில் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் நமது பக்கத்தில் முன்பு பதிவிட்டு இருந்தது போல இந்த மாத இறுதியில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம்.

21-05-2018 ஆகிய இன்று முதல் அடுத்த வரக்கூடிய நாட்களிலும் தமிழக மேற்கு ,மேற்கு உள் ,தென் ,தென் உள் , உள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு.மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் தென் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு.





11-03-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

11-03-2018 நேரம் அதிகாலை 2:40 மணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய சில நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்பு 08-03-2018 அன்று இந்திய வானிலை ஆய்வு மையும் வெளியிட்டு இருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம் (Large Scale Features).
  • லா - நினாவுக்கான சூழல்களில் சரிவு ஏற்பட்டு உள்ளது கடந்த இரண்டு வாரங்களாக மத்திய பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது இது எல் - நினோ தெற்கு அலைவு ஆனது அதன் நடுநிலையான கட்டத்தை எட்டுவதற்கான அறிகுறி.
  • மேடன் ஜூலியன் அலைவு (Madden Julian Oscillation) ஆனது அதன் 3 வது கடத்தில்(phase) ஒன்றுக்கும் சற்று அதிகமான வீச்சு(amplitude) அளவை கொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய சில நாட்களிலும் சற்று பலவீனமான வீச்சு அளவுடன் இது 3வது கட்டத்திலேயே (phase) தொடரலாம்.
  • இந்திய பெருங்கடல் இருமுனை (அ ) இருதுருவம் (Indian Ocean Dipole) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது
  • நடு-அட்சரேகை சுழற்சி முறை (Mid-latitude Circulation Pattern) தற்பொழுது அதன் உயர் குறியீட்டு (High Index ) கட்டத்தில் உள்ளது.

தற்பொழுது இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத்தின் அகடு (Trough) ஒன்று உள்ளது.இதன் காரணமாக இன்று காலை முதலே இலங்கையின் தென்கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு. இதே வானிலையே தொடரும் பட்சத்தில் இன்று நள்ளிரவு அல்லது 12-03-2018 (நாளை) அன்று இலங்கைக்கு தென்மேற்கு திசையில் மாலத்தீவுக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் நான் இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போலவே அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இலங்கைக்கு தென்மேற்கு திசையில் இருந்து காற்றினை இழுக்க முற்படுவதால் மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் உருவாகலாம் நாகை உள்ளிட்ட ஒரு சில வட கடலோர மாவட்டங்களும் இதனால் பயன்பெறலாம் ஆனால் வடகடலோர மாவட்டங்களின் மழைக்கான வாய்ப்புகளை 100% உறுதித்தன்மையுடன் இப்பொழுதே கூறுவது கடினம்.பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலு பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் நகர முற்படலாம் இதனால் தென் தமிழகத்தில் குமரி , நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உருவாகும்.தற்போதைய சூழலில் அது மேலும் வலு பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலை அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது அவ்வாறு நடந்தால் அதன் நகர்வுகளுக்கு ஏற்ப மேற்கு மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பிறபகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புகள் உருவாகும் ஆனால் அனைத்து வாய்ப்புகளும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உரியதே ஆகையால் இதைப்போன்ற தருணங்களில் மாதிரிகளை 100% நம்பி இப்படி தான் நடக்கப் போகிறது என்று உறுதியாக கூறுவது ஏற்புடையது அல்ல அதனால் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

11-03-2018 தமிழகத்தில் இன்றும் வறண்ட வானிலையே தொடரும் கடலோர மாவட்டங்களில் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் மழைக்கான வாய்ப்புகள் இல்லை திருச்சி , தஞ்சை ,திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் இன்றும் ஈரோடு உட்பட ஈரோடு மாவட்டத்தின் சில இடங்களில் 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம் கோவை , நாமக்கல் ,சேலம் ,மதுரை , நெல்லை ,விருதுநகர் , கரூர் , திருப்பூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் அநேக இடங்களில் 93° முதல் 98° பாரன்ஹீட் வரை பகல் நேரத்தில் வெப்பம் பதிவாகலாம்.

11-03-2018 புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும் பகல் நேரத்தில் அதிகபட்சமாக 30° முதல் 32° செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாகலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை  :

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்கையில் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக  தென்தமிழகத்தின்  கடலோர பகுதிகளை சார்ந்த மீனவர்கள் கடலுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் நாளை இரவு அல்லது அதற்கு பிறகு அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற வாய்ப்புகள் உள்ளதால் சில நேரங்களில் தென்தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும்.


21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்?

21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( நாளை ) வட கடலோர மற்றும் ஒரு சில உள் ,தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அதாவது 23-12-2017 ,24-12-2017  மற்றும் 25-12-2017ஆம் தேதிகளிலும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் ஒரு சில உள் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.25-12-2017 ஆம் தேதி அன்று ஒரு சில வட கடலோர மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் அதன் பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகி வந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவவே  அதிக வாய்ப்புகள் உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிலர் நமது பக்கத்தில் புயல் குறித்த கேள்விகளை எழுப்ப தொடங்கியிருக்கிறீர்கள்.புயல் குறித்த உங்களுடைய சந்தேகங்களுக்கான  அல்லது கேள்விகளுக்கான எனது பதில் இதுதான்.

மேற்கு பசிபிக் வெப்ப மண்டல பகுதிகளில் (Western Pacific Tropical Region) உருவாகியிருக்கும் கைடக்  (Kai-tak ) புயல் குறித்தும் அதே பகுதியில் புதிதாக உருவாகியிருக்கும் டெம்பின் (TEMBIN) புயல்குறித்தும் உங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுத்து இருக்கிறது என்று நினைக்கிறன்.ஆனால் இப்பொழுதே அவைகள் தொடர்பாக உங்கள் அனைவரையும் சிந்திக்க செய்ய தூண்டியது எது என்று தான் எனக்கு புரியவில்லை அது குறித்து நாம் இன்னொரு பதிவில் பின்னர் விவாதிக்கலாம் தற்பொழுது எனது பதிலை பதிவிட்டுவிடுகிறேன் பொதுவாக மேற்கு பசிபிக் வெப்ப மண்டல பகுதிகளில் (Western Pacific Tropical Region) உருவாகும் புயல்கள் அனைத்தும் அப்படியே வங்கக்கடலுக்குள் நுழைந்து தமிழகத்தை நோக்கி தான் நகர்ந்தே தீர வேண்டும் என்கிற கட்டாயம் எல்லாம் கிடையாது.ஒவ்வொரு மாதிரிகளும்  வெவ்வேறு விதமான முன்பே வரையறுக்கப்பட்ட மென்பொருள் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட்டு நீடிக்கப்பட்ட கணிப்பியல் முறையில் தகவல்களை (கணிப்புகளை ) வழங்கிவரலாம் ஆனால் தற்பொழுது இந்திய பெருங்கடலில் நிலவி வரும் சூழல்களே வேறு நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இந்திய பெருங்கடல் இருமுனை (அ ) இருதுருவம் (Indian Ocean Dipole) தற்பொழுது எதிர்மறையான கட்டத்தில் (Negative Phase ) தான் உள்ளது .தற்பொழுது நிலவி வரும் சூழலை நீங்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிலவி வந்த சுழல்களுடன் ஒப்பிடலாம்.இதைபோன்றதொரு சூழலில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானாலும் அவை நிலைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு அதேபோல தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியை அடைவது என்பதும் அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது இது தொடர்பாகவும் இந்திய பெருங்கடல் இருமுனை தொடர்பாகவும் விரிவான அடிப்படை தகவல்களை இதற்கு முந்தைய பதிவுகளிலேயே பதிவிட்டு உள்ளேன் புதிதாக நமது பக்கத்தில் இணைந்தவர்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமாயின் - https://goo.gl/XmfuBT என்ற முகவரியில் அந்த பதிவின் நகலை படிக்கலாம்.  தற்போதைய சூழலில் கைடக்  (Kai-tak ) புயல் குறித்தும் புதியதாக உருவாகியிருக்கும் டெம்பின் (TEMBIN) புயலின் பாதைகள் குறித்தும் நாம் இப்பொழுதே சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் மட்டுமே நாம் தமிழகத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவோ விவாதம் செய்யவோ முடியும். வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதும் அதன் நகர்வுகள் குறித்து விரிவாக பதிவிடுகிறேன்.அதனால் அவைகளின் நகர்வுகள் குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் வரை இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்.

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரபூர்வ இணையதளத்தில் இடம்பெற்று இருக்கும் அடுத்த 4 வாரங்களுக்கான நீடிக்கப்பட்ட கணிப்பியில் முறையில் (Extended Range Forecast ) ஜனவரி முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் மழைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதைப்போன்ற தகவல்கள் இடம்பெற்று உள்ளன அது பெரும்பாலும் டெம்பின் (TEMBIN) புயலின் நகர்வுகளை அடிப்படையாக கொண்ட கணிப்பாக தான் இருக்க வேண்டும் இது கூட உங்களுடைய சந்தேகங்களுக்கு இதன் வழங்கியிருக்கலாம் ஆனால் இவ்வளவு நீண்ட இடைவெளியில் அந்த கணிப்பை நம்மால் உறுதி செய்ய முடியாது.


16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 14-12-2017 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கும் பெரிய அளவிலான அம்சங்கள் (Large Scale Features) குறித்து பார்க்கலாம்.

- தற்பொழுது லா-நினாவுக்கான (la-nina) சூழல்கள் நிலவி வருகிறது அடுத்த இரண்டு வாரங்களுக்கும் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

- தற்பொழுது கால நிலை மாற்றம் தொடர்புடைய மேடன் ஜூலியன் அலைவு (Madden - Julian oscillation) ஆனது அதன் 6 வது கட்டத்தில் வீச்சு 1 என்கிற அளவுடன் உள்ளது இது அடுத்து வரக்கூடிய நாட்களில் இதே வீச்சின் அளவுடன் அதனுடைய 7 வது கட்டத்துக்கு நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம் (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது அதன் எதிர்மறையான கட்டத்தில் (Negative Phase ) உள்ளது.

Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) என்றால் என்ன ?
Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) ஆனது இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை (Equator ) அருகே உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளின் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டை குறிக்கிறது இதை இந்தியன் நினோ என்றும் வழங்குவார்கள் அதற்கு காரணம் இதன் விளைவுகள் இந்தோனேஷியா , ஆப்பிரிக்கா , ஆஸ்தரலியா போன்ற பகுதிகளின் வானிலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அதே போல இவை இந்தியாவிலும் பருவமழை காலங்களில் பெய்யும் மழையின் அளவில் பெரிய அளவிலான மாற்றங்களை உருவாக்க கூடியவை.

Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) எதனால் ஏற்படுகிறது ? 
இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் பூமத்திய ரேகைக்கு (Equator) வடக்கே சோமாலியா அருகே உள்ள அரபிக்கடல் பகுதியின் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் தான் இந்தியன் நினோ என்று அழைக்கபடும் இந்த Indian Ocean Dipole ஏற்பட முக்கிய காரணியாக உள்ளது.

Indian Ocean Dipole இன் Positive Phase  (நேர்மறையான கட்டம் ) என்பது என்ன ? அது எப்படி ஏற்படுகிறது ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன ?
இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் அதாவது பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே உள்ள அரபிக்கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையானது இந்திய பெருங்கடலின் கிழக்கே பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே அதாவது இந்தோனேஷியா அருகே வங்கக்கடல் பகுதிக்கு தெற்கே உள்ள இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தால் அது அதன் நேர்மறையான கட்டம் (Positive Phase ) என வழங்கப்படுகிறது இதை எளிமையாக கூறவேண்டும் என்றால் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் மேற்கு முனையில் நிலவும் வெப்பநிலையானது அதன் கிழக்கு முனையுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தால் அது தான் Indian Ocean Dipole உடைய Positive Phase இது ஒருவகையில் தென்மேற்கு பருவமழைக்கு மிக சாதகமான சுழலும் கூட அதேசமயம் இதன் இந்த நிலை இந்தோனேஷியா , ஆஸ்தரலியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வறட்சியை ஏற்படுத்தக் கூடியது.

Indian Ocean Dipole இன் Negative Phase  (எதிர்மறையான கட்டம் ) என்பது என்ன ? அது எப்படி ஏற்படுகிறது ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன ?
இப்பொழுது உங்களுக்கே புரிந்து இருக்கும் நான் மேலே குறிப்பிட்டவைகள் அனைத்தும் அப்படியே தலைகீழாக நடந்தால் அதுவே Indian Ocean Dipole இன் எதிர்மறையான கட்டம் (Negative Phase ) அதாவது மேற்கு இந்திய பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே உள்ள அரபிக்கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையானது இந்திய பெருங்கடலின் கிழக்கே பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே அதாவது இந்தோனேஷியா அருகே வங்கக்கடல் பகுதிக்கு தெற்கே உள்ள இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையை விட குறைவாக இருந்தால் அது அதன் எதிர்மறையான கட்டம் (Negative Phase ) இதை எளிமையாக கூறவேண்டும் என்றால் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் மேற்கு முனையில் நிலவும் வெப்பநிலையானது அதன் கிழக்கு முனையுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தால் அது தான் Indian Ocean Dipole உடைய Negative Phase இதனால் இந்தோனேஷியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கிறது ஆனால் இது வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு பலன் வழங்குமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் மாறாக இதனால் வடகிழக்கு பருவமழையின் வீரியம் குறையவும் வாய்ப்புகள் உள்ளது.

Indian Ocean Dipole இன் Negative Phase  (எதிர்மறையான கட்டம் )  வடகிழக்கு பருவமழையை எப்படி பாதிக்கிறது ?
Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) ஆனது அதன் எதிர்மறையான கட்டத்தில் (Negative Phase) உள்ள பொழுது நான் இதற்கு முந்தைய பதிவுகளில் விளக்கி இருந்ததை போல வர்த்தக காற்று (Trade Winds ) பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் மேற்கில் இருந்து கிழக்காக பயணிக்கும் அதாவது இந்தோனேஷியா அருகே மேற்கில் இருந்து கிழக்காக பயணிக்கும் காற்றின் விசை அதிகமாக இருக்கும் இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புகள் இருந்தாலும் அவை தமிழகத்தை நெருங்கி பலன் வழங்கும் வரை நிலைக்குமா என்பது சந்தேகம் தான் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூட சொல்லலாம்.

16-12-2017 இனி வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் பரவலான கனமழைக்கோ தொடர்மழைக்கோ வாய்ப்புகள் இல்லை குமரிக்கடல் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அவ்வப்பொழுது நெல்லை ,குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதேபோல ஒரு சில தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் வட கிழக்கு திசை காற்றின் வீரியம் அதிகரித்து இருப்பதால் அவை மழை மேகங்களை கொண்டு வந்து சேர்க்கையில் வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிடுவதே நல்லது என கருதுகிறேன் இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கரையை கடக்க இருக்கும் கைடக் (kai-tak) புயலானது கரையை கடந்த பிறகு வலுவிழந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி பின்னர் மீண்டும் வலு பெற்று இந்த மாத இறுதி வாரத்திற்கு முன்பு தாய்லாந்தை கடந்து இறுதி வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஒரு சில மாதிரிகள் தெரிவித்து வருகின்றன பொதுவாக நான் இதைப்போன்ற நீடிக்கப்பட்ட கணிப்புகளை பதிவிட விரும்புவதில்லை காரணம் அதன் உறுதித்தன்மை மிகவும் குறைவு ஆனால் இனி மழைக்கு வாய்ப்புகளே இல்லையா என்று வருந்தும் சிலருக்கு இப்படியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் தெரியப்படுத்துவது அவசியமாகிறது அதே சமயம் இதே சூழ்நிலைகள் தொடரும் பட்சத்தில் அது தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து வலு குறைந்த நிலையில் மேற்கு நோக்கி நகர்கையில் நான் மேற்குறிய பூமத்திய ரேகைக்கு அருகே இந்திய பெருங்கடல் பகுதியின் கிழக்கு முனையை நோக்கி பயணிக்கும் மேற்கு திசை காற்றின் விசையால் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முற்றிலும் வலுவிழந்து போய்விடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

16-12-2017 இனி அடுத்து வரக்கூடிய நாட்களில் சேலம் , ஈரோடு , திண்டுக்கல் , மதுரை , கோயம்பத்தூர் , தர்மபுரி உட்பட உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவு இருக்கும் பனிப்பொழிவு அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது குறிப்பாக 17-12-2017 , 18-12-2017 மற்றும் 19-12-2017 ஆகிய தேதிகளில் நான் மேற்குறிய மாவட்டங்களில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையை விட 1° முதல் 3° செல்ஸியஸ் வரை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது மேலும் நான் மேற்கூறிய தேதிகளில் வட கடலோர ,தென் கடலோர ,தென் , டெல்டா மற்றும் வட என தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 1° செல்ஸியஸ் வரையிலான வெப்பநிலை குறைவை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே உணரலாம். இது தொடர்பாக இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மீண்டும் பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்ட மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

                                                                                                                  - by
                                                                                                   Emmanuel Paul Antony ,S
                                                                                               (Independent Weather Forecaster)

02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

தயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில் comment செய்யுங்கள் இந்த தகவலை முழுவதும் படித்து விட்டு உங்களுடைய சந்தேகங்களையும் கருத்துகளையும் மட்டும் பதிவிடுங்கள்.

02-12-2017 அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருக்கும் ஒக்கி (Ockhi) தீவிர புயலானது (Severe Cyclone) இன்று காலை முதல் வலுப்பெற்று  மிக தீவிர புயல் (Very Severe Cyclone ) என்கிற நிலையை அடைந்துள்ளது அது தற்பொழுது மினிக்காய் தீவுகளுக்கு வட மேற்கே நிலைகொண்டுள்ளது.வரக்கூடிய நாட்களில் அந்த ஒக்கி மிக தீவிர புயலானது தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் 02-12-2017 இன்றும் வட கடலோர ,டெல்டா மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் ,தென் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது நல்ல மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.மழைக்கான வாய்ப்புகள் குறித்து அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.கன்னியாகுமரி ,நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரையில் அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்பு உண்டு ஆனால் இனி தொடர் கனமழைக்கோ மிக கன மழைக்கோ வாய்ப்புகள் குறைவு மேலும் இனி வரக்கூடிய நாட்களில் அந்த மிக தீவிர புயலானது அரபிக்கடல் பகுதியில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்கையில் தென் தமிழகத்தின் மீதான அதன் தாக்கம் முற்றிலும் குறைய தொடங்கும்.03-12-2017 நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உண்டு அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது  வரையிலான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

அனைவரும் சாகர் புயல் குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறீர்கள் அது குறித்த கேள்விகளை எல்லாம் இன்னும் பிறக்காத குழந்தைக்கு பெயர் சூட்டு விழா கொண்டாடுவதை போல தான் கருத வேண்டியதுள்ளது.வட இந்திய பெருங்கடல் வெப்ப மண்டல பகுதிகளில் (Northern Indian Ocean Tropical Region ) அடுத்து புயல் உருவானால் அதற்கு சாகர் (sagar) என்று இந்திய மொழியில் பெயர் சூட்டப்படும் அதன் பிறகு அதற்கு அடுத்து ஒரு புயல் உருவானால் அதற்கு மேக்குனு (mekunu) என மாலத்தீவுகளின்  பெயர் சூட்டப்படும் அதன் பிறகு மியான்மர் நாட்டின் பெயரான டாயே (Daye) அதன் பிறகு ஓமன் ,பாகிஸ்தான் ,இலங்கை ,தாய்லாந்து நாட்டின் சொற்களால் லுபான் (luban ) , டிட்லி (titli) ,காஜா (gaja) , ஃபெதாய் (phethai) போன்ற பெயர்கள் அடுத்தடுத்த புயல்களுக்கு சூட்டப்படும் பிறகு மீண்டும் வங்கதேச மொழியில் அடுத்து உருவாக கூடிய புயலுக்கு பெயர் சூட்டப்படும் அதன் பிறகு இந்தியா ,மியான்மர் என அப்படியே இந்த புயலுக்கு பெயர்சூட்டும் முறை தொடரும்.

நன்றாக கவனியுங்கள் புயல் உருவானால் தான் அதற்கு பெயர் சூட்டப்படும் இது வரை அக்டோபர் மாதத்தில் ஒருமுறையும் நவம்பர் மாதத்தில் ஒருமுறையும் என இருமுறை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் அதற்கு ஒக்கி என பெயர் சூட்டுவார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை அந்த இரண்டு முறையுமே அவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடந்தன.

02-12-2017  தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது அது வலு பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Low Pressure Region ) நாளை அல்லது நாளை மறுநாள் உருவாகலாம் அதன் பிறகு 05-12-2017 அல்லது 06-12-2017 அல்லது அதற்கு பிறகு வரும் தேதிகளில் அது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression ) வலு பெற வாய்ப்புகள் உள்ளது அதன் பிறகு அது மேலும் வலு பெற்று ஒரு புயலாக உருவெடுத்தால் மட்டுமே அதற்கு சாகர் என்று பெயர் சூட்டப்படும்.அப்படி ஒருவேளை அது புயலாக உருவானால் அது எங்கே கரையை கடக்கும் என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது அதற்கு காரணம் ஊடகங்கள் மூலம் பரவி வரும் வீண் வதந்திகள் தான் ஒக்கி புயல் கன்னியாகுமரி கடல் பகுதியை நெருங்கும் என்று 7 நாட்களுக்கு முன்பே  இன்று இதைப்போன்ற செய்திகளை வெளியிடும் எந்த ஊடகமோ, அலைபேசியின் செயலியோ , மாதிரியோ இல்லை அந்த மாதிரிகளை பயன்படுத்தி வரும் windy போன்ற செயலிகளோ சரிவர விளக்கவில்லை. 28-11-2017 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரியை நெருங்க வாய்ப்பு உள்ளது என நான் எழுதியிருந்த பதிவிலேயே கூட இலங்கைக்கு கிழக்கே இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கும் நோக்கி நகர்ந்து வலு பெற்றால் மட்டுமே தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது ,குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொள்ள வாய்ப்புள்ளது என்று ஒரு நிபந்தனையுடன் தான் பதிவிட்டு இருந்தேன் அது தான் உண்மையும் கூட வானிலை திடீர் மாற்றங்களுக்கும் திருப்பங்களும் பெயர்போனவை என்பதை கடந்த 3 ஆண்டுகளில் நான் நன்ங்கு உணர்ந்தவன்.மேலும் அனைத்து மாதிரிகளும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை நிகழ் நேர தகவல்களுக்கு தகுந்தாற் போல தங்களை புதுப்பித்து கொள்கின்றன ஆகவே அதன் நீட்டிக்கப்பட்ட கணிப்பு முறை  உறுதித்தன்மை வாய்ந்தவை ஒரு புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றால் அவை கரையை கடப்பதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக கணித்தால் மட்டுமே அது எங்கு கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்பதில் ஒரு துல்லியம் இருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உண்டு ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழியாக நாம் நேரடியாக மழையை பெற குறைந்தது இன்று முதல் 3 அல்லது 4 நாட்களாவது காத்திருக்க வேண்டும் அதுவரை எங்கெங்கே மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

நான் உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் புயல் குறித்த உறுதியான தகவல்களை அறிய காத்திருங்கள் இப்பொழுதே அது எங்கு கரையை கடக்கபோகிறது என்பதை போன்ற தகவல்களுக்கு எல்லாம் மிக முக்கியத்துவம் வழங்காதீர்கள் நேற்று நண்பர் ஒருவர் நமது பக்கத்தில் எனக்கு Message செய்திருந்தார் அதில் ஒரு பத்திரிக்கை செய்தியை அனுப்பி இருந்தார் அது என்ன பத்திரிக்கை என்பது எனக்கு தெரியவில்லை அதில் வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது ஒரு மிக தீவிர பயல் உருவாகி அது தமிழகத்துக்கு மிக அருகில் இருந்தால் மட்டுமே கடலோர பகுதிகளில் இவ்வளவு வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதை இவர்கள் ஒக்கி தீவிர புயலாக வலுப்பெற்றது என்றபொழுது வானிலை ஆய்வு மையம் வழங்கிய பாதி செய்தியையும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை என்கிற செய்தியையும் இணைத்து ஒரு புதிய வடிவில் அறிய முறையில் மக்களுக்கு செய்தியை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும் அதேபோல ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஊடகத்தில் நேற்று மாலை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக செய்தி வெளியிடுகிறார்கள் உண்மையில் உருவானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டுமே இவை இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகள் குறித்தும் அது வலுப்பெற்ற பிறகு அது குறித்த உறுதியான தகவல்களையும் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன் மேலும் புயல் வாய்ப்புகள் குறித்த சரியான தகவல்களை சரியான தருணத்தில் பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே கூறிய மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்போதைய வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


26-11-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

26-11-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன் கடந்த 23-11-2017 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் பெரிய அளவிலான அம்சங்கள் (Large Scale Features) குறித்து பார்ப்போம்.

  • தற்பொழுது லா-நினாவுக்கான (la-nina) சூழல்கள் நிலவி வருகிறது அடுத்த இரண்டு வாரங்களுக்கும் இதே நிலையே தொடரலாம்.
  • தற்பொழுது மேடன் ஜூலியன் அலைவு  (Madden - Julian oscillation) ஆனது அதன் 6 வது  கட்டத்தில் வீச்சு 1 என்கிற அளவுடன் உள்ளது இது வரக்கூடிய நாட்களில் வீச்சின் அளவு குறைந்த நிலையில் அதனுடைய 5 ஆம் கட்டத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்திய பெருங்கடலின் இருமுனை (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது நடுநிலையான கட்டத்தில் உள்ளது.
லா நினாவுக்கான சூழல் என்பது தென் அமெரிக்காவுக்கு அருகே இருக்கும் பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலை குறைவை குறிக்கிறது.இந்த சூழலில் வர்த்தக காற்று (Trade Wind ) என்று சொல்லக்கூடிய மேற்கு திசையில் பயணிக்க கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அவை பசிபிக் பெருங்கடலின் மறுமுனையில் அதாவது ஆசிய கண்டத்துக்கு அருகே இருக்கும் வெப்பமான பகுதிக்கு சென்று மேலே எழும்புகையில் அந்த பகுதியில் மழை மேகங்கள் அதிகமான அளவில் உருவாகுகின்றன இதன் தாக்கத்தால்   இந்தோனேஷியா ,இந்தியா உட்பட பல நாடுகளில் மழையின் அளவு அதிகரிக்கிறது.லா-நினாவின் காரணமாக சில இடங்கள் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அவை எந்த ஒரு இடத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக குறிப்பிட்டு இப்பொழுதே சொல்ல முடியாது. பொதுவாக லா-நினாவின் காரணமாக இந்தியா ,இந்தோனேசியா அருகே உள்ள கடல் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது ஆனால் மழை அதிகரிப்புக்கு இது மட்டுமே போதாது லா-நினோவுக்கான சூழல்கள் நிலவி வந்த பொழுதே  பருவமழை பலன் வழங்காமல் போன நிகழ்வுகளும் வரலாற்றில் உண்டு.

மேடன் ஜூலியன் அலைவு  (Madden - Julian oscillation)  ஆனது இந்த மாத இறுதியில் தனது 4 வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது பின்னர் அது மீண்டும் 5,6 மற்றும் 7 வது  கட்டங்களுக்கு அடுத்தடுத்து பயணிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு கணிப்பியல் மாதிரி தெரிவிக்கிறது இன்னொரு  சர்வதேச கணிப்பியல் மாதிரியின் கூற்று படி நவம்பர் மாத இறுதியில் அது 8 வது கட்டத்துக்கும் டிசம்பர் முதல் வார இறுதியில் அது 2 வது மற்றும் 3 வது கட்டத்துக்கும் அடுத்தடுத்து நகர வாய்ப்புகள்  உள்ளதாக  தெரிவிக்கிறது.மேலே கூறி இருந்தது  போன்று அது நவம்பர் மாத இறுதியில் 4 வது கட்டத்துக்கு வந்தால் இந்தோனேசியா மற்றும் இந்திய பெருங்கடலில் மழையின் அளவு அதிகரிக்கும் அதனால் வங்கக்கடல் பகுதிக்கும் பயன் உண்டு.மேடன் ஜூலியன் அலைவு அதன் 3 வது கட்டத்துக்கு வராமல் இந்த மாத இறுதியிலும் டிசம்பர் முதல் வாரத்திலும் தமிழகத்தின் மழை அளவில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான் பொறுத்திருந்து  பார்ப்போம்.

26-11-2017 தற்பொழுது வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் அதன் நகர்வுகள் வேகமானதாக இல்லை நேற்று இருந்த நிலைக்கு அது இந்நேரம் இலங்கைக்கு மேற்கே நிலைகொண்டு இருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை ஆக இனி வரக்கூடிய சில  நாட்களுக்கு தமிழகத்தில் பதிவாக இருக்கும் மழை அளவை நிர்ணயிக்க போவது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் தான்.

இனி நான் தெரிவிக்கப்போகும் தகவல்கள் அனைத்தும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உட்பட்டது இதன் மாற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

26-11-2017 தற்போழுது இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் அந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று இரவு அல்லது நாளைக்குள் இலங்கையை கடந்து இலங்கைக்கு மேற்கே குமரிக்கடலில் நிலைகொள்ள வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது மேற்கு நோக்கி நகர முற்படும்பொழுது நான் முன்பே கூறியிருந்தது போல தமிழக வட கடலோர மாவட்டங்களில் 27-11-2017 ,28-11-2017 மற்றும் 29-11-2017 ஆம் தேதிகளில் அவ்வப்பொழுது நல்ல மழைக்கு வாய்ப்பு உண்டு நெல்லை ,கன்னியாகுமரி  மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.கடந்த காலத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையப்பகுதி அவ்வப்பொழுது விரிவடைந்து காணப்பட்டது இதில் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் அது குமரிக்கடலுக்கு அருகே நிலை கொண்டு இருக்கும் பொழுது  அதனுடைய மையப்பகுதி விரிவடைய வாய்ப்புகள் உள்ளது  அப்படி அது  நடக்கும் பட்சத்தில்  உள் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புகள்  உருவாகும் அதாவது 27-11-2017 மற்றும் 28-11-2017 ஆம் தேதிகளில் அதே சமயம் அது மேற்கு நோக்கி குமரிக்கடலை கடந்து செல்கையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புகள்  உருவாகும் அதாவது 28-11-2017 மற்றும்  30-11-2017 ஆம் தேதிகளில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் குறித்த ஒரு தெளிவான தகவல்கள் தெரியாத வரையில் இவை அனைத்தும் வெறும் வாய்ப்புகளே அதாவது எந்த நேரத்திலும் மாற்றங்களுக்கு உட்பட்டது.

டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலு பெற்று ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் நான் இதற்கு முன்பே பல பதிவுகளில் இருந்து தொடர்ந்து தெரிவித்து வருவது போல அவை வலு குறைந்த நிலையில் தமிழகத்தையோ அல்லது இலங்கையையோ நெருங்கிய  பின்பு வலுவடைய வேண்டும் அப்போழுது தான் அதனால் தமிழகம் பலனடைய அதிக வாய்ப்புகள் உள்ளது அதை விடுத்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியை அடைவதற்கு முன்னரே அது  ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ ,புயலாகவோ வலு அடையும் பட்சத்தில் அது வட - வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தை விட்டு விலகி செல்லவே அதிக வாய்ப்புகள் உருவாகும் அது குறித்த எந்த ஒரு தகவலையும் இப்பொழுதே உறுதிபட தெரிவிக்க இயலாது சிறிது காலம் பொறுத்து இது தொடர்பான தகவல்களை பதிவிடுகிறேன்.

நான் மேலே கூறி இருந்த தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவும் வானிலையையும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தற்பொழுதைய நகர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


17-09-2017 இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

17-09-2017 ஆம் தேதி முதல் இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் என்று  பார்ப்பதற்கு முன் 12-09-2017 அன்று நமது தளத்தில் பதிவு செய்யப்பட்ட கடந்த வாரத்துக்கான வானிலை தகவல்களை நினைவூட்ட  விரும்புகிறேன்.12-09-2017 அன்று எழுதிய பதிவில் 16-09-2017 முதல் அரபிக்கடலை ஒட்டியுள்ள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் வீரியம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பதிவிட்டு இருந்தேன் நேற்று கேரளாவில் மழையின் அளவு அதிகரித்திருந்தது இன்றும் அது தொடர்கிறது அதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மேற்கு தொடர்ச்சி பகுதிகள் பலன் அடைந்து வருகின்றன  மேலும் 12-09-2017 அன்று எழுதிய பதிவில் 17-08-2017 ,18-09-2017,19-09-2017 ஆகிய தேதிகளில் மும்பையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியிருந்தேன் அதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது இன்று இரவு முதல் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் நாளை முதல் மும்பை பகுதியில் கனமழைக்கு வாய்ப்புண்டு 12-09-2017 அன்று எழுதிய பதிவில் குறியிருந்ததை போல மும்பை நகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு  ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்த பதிவுகளில் வங்கக்கடலில்  ஒரு மேலடுக்கு சுழர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியிருந்தேன் தற்பொழுது மியன்மர் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது அது இன்னும் சில மணி நேரங்களில் வலுவிழக்க  வாய்ப்புள்ளது அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மியான்மர் ,வங்கதேசம் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீண்டும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு வாய்ப்புள்ளது.நான் இதற்கு முந்தைய பதிவுகளில்  கூறியிருந்ததை போல 19-09-2017 அன்று வங்கக்கடலில் வட ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்ச்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது அதனால் இந்திய வட கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களும் ஆந்திரம் ,தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின்  வட மாவட்டங்களும் நல்ல மழையை காணும்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் 12-09-2017 அன்று எழுதிய பதிவில் கூறியிருந்தது  போல இனி வரக்கூடிய வாரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது அதனால் மழையே பெய்யாது என்று அர்த்தமில்லை மழை தொடர்ந்து பெய்யும் ஆனால் அதன் அளவு கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது சற்று குறைவாகவே இருக்கும் 17-09-2017 நேற்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது 18-09-2017 இன்றும் தமிழகத்தில் ஓரளவு நல்ல மழையை எதிர்பார்க்கலாம் அதன் பிறகு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு 23-09-2017 முதல் தமிழகத்தில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் மேலும் 24-09-2017 அன்று ஆந்திரா அருகே வங்கக்கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது இம்முறை ஒடிசா அருகே அல்லாமல் சற்று கீழே அதாவது மத்திய ஆந்திர பகுதிகளுக்கு அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது .இவை அனைத்தும்  தற்பொழுது நிலவி வரும் வானிலையை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் எதாவது மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.



12-09-2017 அடுத்து வரக்கூடிய வார நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

12-09-2017 தற்பொழுது அரபிக்கடலில் கேரளாவுக்கு அருகில் மேலடுக்கு சுழற்சி இருப்பதால் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது அதனால் அம்மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு அதுமட்டுமல்லாமல் அந்த மேலடுக்கு சுழற்சியால் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவும் அதிகரிக்கலாம் மேலும் அந்த சுழற்சியின் தாக்கத்தால் தற்பொழுது தமிழக வட கடலோர மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழையின் பொழுது காற்று வீசுவது போல தென்மேற்கு  திசையில் காற்று உள்ளே வருகிறது அதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் ,வட கடலோர மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது அந்த சுழற்சியானது வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லலாம் அவ்வாறு அது வட திசையில் நகர்ந்து செல்கையில் தமிழகத்தில் நாளையும் அதன் மறுநாளும் அதாவது 13-09-2017 மற்றும் 14-09-2017  ஆகிய தேதிகளில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் ஒரு சில தென் மற்றும் வட மாவட்ட பகுதிகளில் கன மழைக்கும் வாய்ப்புண்டு.15-09-2017 முதல் மும்பை மற்றும் அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் இம்முறையும் மும்பைக்கு வெள்ள அபாயம் உண்டு குறிப்பாக 17-09-2017,18-09-2017,19-09-2017 ஆகிய தேதிகளில் மும்பையில் மிக கனமழைக்கு வாய்ப்புண்டு.

தமிழகத்தை பொறுத்தமட்டில் 15-09-2017 ஆம் தேதி தமிழகத்தில் மழையின் அளவு சற்று குறைந்து காணப்படலாம் அதன் பிறகு தமிழகத்தில்  மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புண்டு நான் மேலே குறிப்பிட்டதை போல 16-09-2017 முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிரமடைய தொடங்கலாம் அதனால் தமிழகத்தில் மழையின் அளவு சற்று குறைந்தே இருக்கும்.

19-09-2017 அல்லது 20-09-2017 அன்று வங்கக்கடலில் வட ஆந்திரம் அல்லது ஒடிசா அருகே அந்தமானுக்கு வட மேற்கு திசையில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது அது வலுவடைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்புகள் உண்டு இம்முறையும் அது இந்திய வட கிழக்கு மற்றும் வட ஆந்திர மற்றும் ஒடிசா பகுதிகளுக்கே பலனளிக்கலாம் இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் அதைப்பற்றி இப்பொழுதே உறுதிபட எதுவும் கூற முடியாது.

09-09-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

09-09-2017 இன்று அதிகாலை முதலே நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது இன்று காலை 2:00 மணிக்கு தொடங்கிய மழை தற்பொழுது வரையில் நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24  நேரத்தில் அதாவது 08-09-2017 காலை 8:30 மணி முதல் 09-09-2017 காலை 8:30  உள்ள 24 மணி நேரத்தில் காரைக்காலில் 11.8 மி.மீ மழையும் நாகப்பட்டினத்தில் 9.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது அதே சமயம் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதிகளில் 113.5 மி.மீ மழையும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 103.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

09-09-2017 இன்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி ,இராமநாதபுரம் ,சிவகங்கை ,மதுரை ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி ,விருதுநகர் ,புதுக்கோட்டை,திண்டுக்கல்  உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நல்ல  வாய்ப்புண்டு.

09-09-2017 இன்று கரூர் ,நாகப்பட்டினம் ,விழுப்புரம் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர் ,கோயம்பத்தூர் ,திருப்பூர் ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரளவு நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

09-09-2017 இன்று திருச்சி ,தஞ்சாவூர் ,அரியலூர்,பெரம்பலூர் ,சேலம் மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...